Wednesday, November 24, 2010

இந்தியா - பத்து ஆண்டுகள் 2001 - 2010 [ பகுதி - 1 ].


இந்த டிசெம்பருடன் இந்த வருடம் மட்டுமல்ல, இரண்டாவது ஆயிரதின் முதல் பத்து ஆண்டுகள் முடிவடைந்தன. பூனை முடியை, மீசை என்று பெருமை பீத்திக் கொண்ட என் கண்ணாடி, இப்பொழுதெல்லாம் தினம் முழைக்கும் ரோமங்கலை - அய்யோ நாளைக்கு திருப்பி சவரம் செய்ய வேண்டுமென்று வெறுப்புடன் பார்கிறது. 100 குடிகள் இருந்த எங்கள் தெருவில் ( என் சொந்த ஊரில் ) இன்று வெரும் 10 -15 குடிகள் மட்டுமே இருக்கின்றன. உலகின் ஏழு அதிசயங்கள் மாறிவிட்டன. இந்தியாவிற்க்கு இந்தியர்களுக்கு மூன்று ஆஸ்கர். திருப்பதி லட்டு அளவில் குன்றிவிட்டது, என்ற மாற்றங்கள் ஒருபுரம்.
சச்சின் இன்னும் விளையாடுகிரார் 'அதே புகழுடன்'. ரஜினி கமல் இன்றும் ஹீரோக்கள். லைஃப்பாய் சோப் இப்பொழுதும் கறைய மறுக்கிரது. இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் ( விரைவிலேயே ) உலகம் அழிந்துவிடும் என்று மக்கள் இன்றும் நம்புகின்றனர். யூனீயன் கார்பைட் - ஆண்டெர்சொன் இன்னும் கைதாகவில்லை. கிழக்கில் சூரியன், இடப்பக்கம் சுழழும் பூமி, சுவைகுன்றா கர்பகம் மெஸ் பொடிதோசை, காபி என்று மாறா உலக நிகழ்வுகள் ஒரு புரம்.

இந்த பத்து வருட கணக்கிர்கென்று ஒரு குறிப்பு, அதுவும் நம் நாடு, நம் மக்கள் பற்றி மட்டும் எழுத இசைகிறேன். மிகக்குறிப்பாக இந்த பத்து ஆண்டுகலையும், அதர்க்கு முந்தைய காலத்தையும் ஒப்பீடு செய்து எழுத முயர்சிக்கிறேன். ஒரு முழு சமுகமாக நம்மை ஒரு தராசில் நிருத்த்திப் பார்கையில் கடந்த பத்து ஆண்டுகாலதில்..

மக்களும் மலினப்பட்டனர்.
மீண்டும் ஒருமுறை துனைத்தலைப்பை படியுங்கள், மக்கள் அல்ல - மக்களும். அரசியல்வாதிகள்,அரசு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என்று துவங்கி இந்தியன் தாத்தா லிஸ்டில் வருபவர்கள் மட்டும்தான் மலினமாக கைஊட்டு பெரும் நிலையில் இருந்தனர். அவர்களும் மக்களே. ஆயினும் இவர் அல்லாத பொதுமக்கள் இதைப்பற்றி பேசி வருத்தபட்டு ( அதுமட்டும் ) கொண்டிருதனர். பேசிக்கொண்டு மட்டும் இருந்த மக்கள், இந்த கடைசி பத்து ஆண்டுகளில் தனித்தனியாக எல்லா நிலைகளிலும் மலினப்பட்டனர். வெளிப்படையாக வோட்டுப்போட வேட்பாலரிடம் பணம் பெருவது துவங்கி, பணத்திர்காக மதம் மாறுவது வரை இந்தியா ஒரு சமுகமாக மலினப்பட்டு இருக்கிறோம். தனிமனித தேவைகளை, சுய நலத்தை மனிதன் பெரிதாக நினைக்கிறான். அப்படியா ?. இது சுயநலமா ? மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள்.
சுயநலத்தில் - சுயம் உண்டு. சுயம் என்பது தனது சுற்றம் தனது மக்கள், தனது மனைவி(கள்), என்று நம் தமிழ்நாட்டில் வாழ்ந்தது ஒரே குடும்பம், இந்தியா என்றால் ஒரு பத்து குடும்பங்கள் மட்டுமே( தமிழ்நாட்டில் எந்த குடும்பம் என்று கேட்டு காமெடி பண்ணாதீங்க ). இன்னும் குறுக்கி, தான் மட்டுமென்று சுயத்தின் வட்டத்தை குறுக்கினால் கூட சுயநலத்திர்க்காக இன்று, மனிதன் வாழ்கிறான் என்று சொல்ல முடியாது. சுய நலதில் மிக முக்கியம் நலம். தனது நலத்தை பேனுதல். நமது வாக்குகளை வெறும் ரூ.500 க்கு விற்கிரோம். அந்த ரூ.500 ல் எவ்வளவு நலமாக இருந்து விட முடியும் ?. ஒரு தனி மனிதனின் மூன்று நாள் செலவுக்கு மட்டுமே இந்த பணம் பயன்படும். இதில் எந்த அளவுக்கு நலமாக இருந்து விட முடியும் ?. கணவனுக்காக, சாதி, சமுதாய அந்தஸ்திர்காக மதம் மாறுவது போய், வெறும் பணதிர்க்காக மதம் மாறுகிரோம், உடல் விற்பது போல. இப்படி செய்வதால் கிடைக்கும் பணத்தின் பயன் என்ன ?
தன்னுடைய உடல் நலம், மகிழ்ச்சி, அனைத்தையும் மறந்து போய், தனகென்று ஒரு நிமிடம் கூட இல்லாமல் வேறு ஒருவனுடைய ( முதழாளி ) பணத்திர்க்காக, உழைக்கிறோம். அதில் பணம் மட்டுமே, நலம் எங்கே. சேர்க்கும் பனத்தை பலர் துய்ப்பது கூட இல்லை. வேறு சிலர் அந்தப் பணத்தை மருத்துவருக்கு அழுகிரார்கள். பிறகெப்படி இது சுயநலம்.

ப்லாஸ்டிக் பயன்பாட்டை இந்த நோக்குடன் அனுகலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ப்லாஸ்டிக்கை நம்மால் அழிக்க முடியாது என்பது எல்லோர்கும் தெரிந்த உண்மை. இருந்தும் ப்லாஸ்டிக் பயன்பாட்டை, நிருத்துவதைப் பற்றி, - குறைப்பதைப் பற்றி, சிந்திப்பது கூட இல்லை. வருமான வரி - மாதம் ரூ. 300 வருமான வரி சேமிப்பதர்காக, சிரமப்படும் காமெடி பீஸ்கலை, இன்னும் 3 மாததில் நீங்கள் பார்ர்க முடியும். இது சுய நலம் அல்ல. நலம் அல்ல. சுயமும் அல்ல. வெரும் பணம். இந்த நேரத்தில் ஒரு ரஷ்ய திரைப்படத்தில் வந்த ஒரு வசனத்தை சொல்வது சரியாக இருக்கும். " சில ஆண்டுகல் முன்புவறை கூட மக்களுக்கு, பல் துறைகள், பல தொழிகள். இன்று மக்களுக்கு, துறைகள் மட்டும்தான் வேறு வேறு தொழில் ஒன்றே ஒன்றுதான் - பணம் செய்தல். உயிரியலில் பட்டம் பெற்ற எத்தனை பேர்கள் மென்பொருள் தயாரிப்பு பணியில் வேலை செய்கின்றனர். அது மென்பொருள் தயரிப்பில் உள்ள ஈடுபாடு அல்ல, மென்பொருள் அமைப்புகள் காட்டும் வெளிநாட்டு மோகம் கூட அல்ல, வெரும் பணம்சார் ஈடுபாடு என்பதை சொல்வதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. மென்பொருள் படித்ததால் வெளி நாட்டிற்க்கு செல்வோரை விட, வெளி நாட்டிற்க்கு ( பணம் சம்பாதிக்க ) செல்லவதர்காய் மென்பொருள் படிப்போரை நீங்கள் பார்ததில்லையா. இதற்க்கு சப்பைகட்டாய் அங்குல்ல கலாச்சாரத்தை பெருமையாக போற்றி போற்றி செய்துவிட்டு. தனக்கென்று ஒரு பிள்ளை பிறந்ததும், தெறித்து ஒடிவந்து நம்மூர் பள்ளிகளில் விண்ணப்பம் வாங்குவது ஒரு புது நடைமுறை அல்ல.
ஒரு சுய நலமான மனிதன், தன்னுடைய சுற்றுப்புரம் பற்றி(யாவது) நிச்சயம் கவலைகொள்வான். ஆனால் சூழள் பற்றி கவலைப் படுவதை வீன் நேரச் செலவாக, உடல் உலைச்சலாக நாம் சிந்திக்க துவங்கி விட்டோம். 70 % சென்னையில் உள்ள வீடுகளில் இன்று வாசல் தெளிக்கும் பழக்கம் அற்றுப்போனது இதர்க்கு ஒரு சிரிய உதாரனமாய் அமையலாம். இன்று நாம் செய்யும் சில தர்ம காரியங்கள் கூட சுயநல பணத்தின் அடிப்படையில் செய்வதை விட இழிவு என்ன இருக்க முடியும். எனக்கு பழக்கமான ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகதிர்க்கு வரும் பெருவாரியான மக்கள், கேட்கும் கேள்வி " நன்கொடைக்கு எத்தனை சதவிகிதம் வருமான வரி தள்ளுபடி அள்ளது மீள்தொகை கிடைக்கும் என்பது ".
இந்த பணத்தினால் பெரிய வீடுகள் வாங்கினோம், மருப்பே இல்லை உங்கள் ஊரில் உங்கள் தாத்தா காலத்திலோ ( நினைவிருந்தால் ), அப்பா காலத்திலோ உங்கள் வீட்டிர்க்கு வந்த உறவினர்கள் எண்ணிக்கயையும், உங்கள் வீட்டிருக்கு வரும் உறவினர்கள் எண்ணிக்கயையும் ஒப்பிட்டு பார்த்தால் இந்த கூற்று புரியும்(அவர்களுக்கே நேரம் இல்லையென்று சொல்லி நம்மை நாமே மனசைத் தேத்திக் கொள்ளலாம்). இன்னொருபடிமேல் சென்று உறவினர்கள் நமது வீட்டிற்க்கு வருவதை ஒரு செலவு நோக்குடன் அனுகும் மனநிலையில், இன்று நாம் அனைவரும் நெர்ந்துகொண்டோம். அதே வீட்டில் இருக்கும்பொழுது நமது பக்கத்து வீட்டுக்காரருடன், எத்தனை முறை மகிழ்சியாய் பேசி இருப்போம். அவரைப் பார்த்து மனம்மலர்ந்து எத்தனை முறை சிரித்திருப்போம். அப்படி வீட்டைக் கட்டும் பலர், தான் வீடு கட்டுவதை ஒரு இளக்காக கட்டுவதில்லை, அதை நாளைய பணத்தேவைக்கான ஒரு முதலீடாக மட்டுமே நாம் பார்கிறோம். பணம் தேவை இல்லை என்று நானும் சொல்ல வரவில்லை. ஆனால் இந்த பத்து ஆண்டுகளில், பணம் செய்வது ஒன்றையே இலக்காக, அதைப் பெருவதர்க்காய் ஏதும் செய்யத் தயாராய், தன்னை இன்று நாம் மாற்றிக் கொண்டு விட்டோம். இப்படிச் சொன்னால் இன்னும் விளங்கப் புரியும். ஒரு மனிதனுக்கு முதல் கூற்று / தேவை ( primary objective ) இரண்டாவது கூற்று / தேவை ( secondary objective ) ஏனைய கூற்று / தேவை ( other objective ) என்று வகைபடுதலாம். இதில் நமக்கு முதல் தேவை பணமாக இருப்பதில் எனக்கு பெரிய எதிர்ப்பு இல்லை. ஆனால் இன்று, முதல், இரண்டாவது, மற்றும் ஏனைய என்ற எல்லா தேவைகளுமே நமக்கு பணம் என்ற மனப்பாங்கு இந்த பத்து வருடதில் நம்மிடம் பெருவாரியானவர்களிடம் வளரத்துவங்கி விட்டது. இது சரியா தவரா என்பது உங்களுக்கு நான் சொல்லித் தெரியத் தேவையில்லை.

" IT NEVER MATTERS WHETHER YOU LIVE AN IMPULSIVE OR AN INTUTIVE LIVING, BUT THE LIVING. " - PLATO.

மேலும் இதே சமுகப்பாங்கில் நகரப்படுதல், பயம் செரிந்த மக்கள், பெண் விடுதலை அத்துமீரல்கள் என்ற உட்தலைப்புகளிலும், அரசியல் பாங்கு, திரைப்படம், பொன்ற பாங்கிலும் இந்த கருத்துத்தோனி பயனப்படும்.

Sunday, November 14, 2010

கோல்மால்-3( ஹிந்தி ) - திரைவிமர்சனம்..

நீங்கள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவராயின், கண்டிப்பாக உங்கள், பெரியப்பாவின் மகன் மகளையோ, சித்தப்பாவின் மகன் மகளையோ, பார்த்து கூடப் பிறக்கவில்லை என்றபோதிலும் " நீயெல்லாம் எனக்கு ஏண்டா அண்ணனாப் பொறந்த " என்றோ " உனக்குப் போய் தம்பியா பொரந்தேன்னு " கேட்டதுண்டா ?. உண்டு என்றால் அந்த நினைவலைகளை. இந்த திரைப்படம், உங்களுக்கு மீள்திரட்டும். இன்றைய குழந்தைகள், தன் உற்ற சகோதரனயே, பார்த்து இப்படி கேட்கிறார்கள் என்பது மறுக்க முடியாது. சரி சரி ஆட்டய கவனிப்போம்....

கோல்மால்- 1 மற்றும் கோல்மால் -2( ரிடன்ஸ் ) வின் வெற்றிக்குப் பின், அந்தக் கூட்டனியின் மூன்றாவது படைப்புதான் கோல்மால்-3. ஹிந்தி திரைப்பட உலகின் முதல் ட்ரியோலொஜி. அட அதாங்க ஒரு படம் எடுப்போம், நல்லா ஓடிச்சா, மருக்கா அதே பேர வச்சு, இன்னொறு படம், இதுவும் ஓடிச்சா மருக்கா இன்னொரு பகுதி. எளிமையா புரியிர மாதிரி சொன்னா, வேகுர வரைக்கும் பருப்ப வேக வெக்கிறது. மிக முக்கியமா ஹாலிவுட்காரைங்கலுக்கு, ஒரு படம் ஓடி, அதுக்கு அடுத்த பகுதி எடுக்கலேன்னு வச்சுக்கோங்க அவுங்கலுக்கு இந்தியா பாகிஸ்தான் உறவ  பத்தி பேச சொன்ன ஒபாமா போல அயிடுமாம். ஒன்னுமே புரியாதாம். இப்போ இந்த வியாதி இப்போ பாலிவுட் புன்னியதில் நமக்கும் தொத்திகிச்சு. நம்ம கூட அந்த அபரிமிதமான " நான் அவன் இல்லை " படதுக்கு பகுதி ரெண்டு பாத்தோமே..அட அகில உலக நவரச நாயகன் ஜீவன் ஒரு அம்பாசிட்டர் கார் நடிப்பு நடிசாரே.... ஹ்ம்ம்ம்ம் அதே அதே.. ( ஜீவனின் ரசிகர்கள் மண்ணிக்கவும், அது ஆஸ்கார் -  பிளையாகி விட்டது ).

இந்தப் படத்தின் கதைக்களம் கோவா ( பூகோலம், வெங்கட் ப்ரபு படம் இல்லங்க ). இரண்டு சகோதரக் கூட்டம், இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் காமெடி கும்மாலி படத்தின் முதல் பகுதி. ஒருவருடைய வியாபாரத்தை இன்னொருத்தர் கெடுப்பது. ஒரு கூட்டனியில் அஜய் தேவ்கன், ஷ்ரெயஸ் தல்படே, தேவ்கனின் காதலியாக கரீனா, தேவ்கனுக்கு ஒரு அம்மா மட்டும். இன்னொரு கூட்டனியில் அர்ஸத் வார்சி, குனால் கெமு, மற்றும் துஸார் கபூர், இவர்கலுக்கு ஒரு அப்பா மட்டும். இந்த அம்மாவும் ரத்னா, - அப்பாவும் மிதுன் சக்ரவர்தி ( இவர் தீபன் சக்ரவர்தி அண்ணான்னு கேக்காதீங்க ), முன்னாள் காதலர்கள். இவர்கள் இருவரும் சந்திக்க மீண்டும் காதல் துளிர்கிறது. இவர்கள் சந்திக்கயில், இன்னும் இறுவரும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் வளர்க்கும் குழந்தைகள் அனாதைகள், இவர்கள் காலத்தினால் வளர்க்க நேர்ந்தது என்பதும் தெறிகிறது. இதை ஒட்டுக் கேட்ட கரீன, இவர்கள் இருவருக்கும் இந்த வயோதிகதிள் திருமணம் செய்து வைக்கிறார். டீ ,, பிஸ்கட்,, பாப்கார்ன்..

இரண்டு குடும்பமும், ஒரே வீட்டில் வாழ்கிறார்கள்.குழப்பம், தாம் அனாதைகள் என்ற உன்மை தெரிய வருகிறது,கிலைமாக்ஸ், கட்டித்தழுவுகிரார்கள். சுபம். பல பகுதிகள் உள்ள படங்களில், பெரும் பகுதி, அந்த வரிசையின் முதல் படம் அடுத்த பகுதிகளை விட அருமையாக இருக்கும் இந்தப் பட வரிசையும் இதற்க்கு விலக்கல்ல. இதை வணிகவியல்காரர்கள் " தீ லா ஆஃப் டிம்னிஸிங்க் மார்ஜினல் உடிலிடி"- THE LAW OF DIMINISHING MARGINAL UTILITY என்பார்கள். பசியில் வாடும்பொழுது நமக்கு கிடைக்கும் அந்த முதல் வாழைப்ப்பழத்தின் சுவை, அல்லது அதன் நிறைவு, அதற்கு அடுத்த( இரண்டாவது ) வாழைப்பழத்தை விட( முதல் ) அதிகமாய் இருக்கும், இப்படி குறைந்து கொண்டே வரும் எண்பார்கள். - இது பரிட்சையில ஞாபகம் வந்திருந்தா, பண்ணண்டாவது முடிச்சிருப்பேன்... இந்த விதிக்கு முன்னா பாய் ஒரு விதிவிலக்கு. அதாங்க நம்ம வசூல்ராஜா. இதுவரை வந்த இரண்டுமே நயம்.

அஜய் தேவ்கன் தன்னை திரமையான நடிகர் என்று நிருபிக்க தவரவில்லை. இயக்குனர் ரோஹித் ஷெட்டிக்கு மீண்டும் நன்றிகளும், வாழ்துக்களும். எனக்கு நினைவில் படும்வரை மிதுன் முதல்முரை காமெடி முயர்சித்திருக்கிரார். இந்தப் படத்தில் இவருக்கு திளைக்கும்  காதல் போல.. நேரம் கடந்து, கசிந்தாலும், கைகூடிஉல்லது,  - காமெடி. ஜானி லீவர் தனது பணியை, யாண்டும் போல் செவ்வனே செய்துல்லார்.
முன் குறிப்பிட்ட முன்னா பாய் படத்திர்க்கும் மூண்றாம் பகுதி அடுத்த வருடம் முழுஆண்டு விடுமுறைக்கு எதிர்பாற்க்கப் படுகிறது. மேலும் இந்த தொடர் பகுதி படங்கள் நம் நாட்டில்,  மலையாள படங்களில் அதிகம், மம்மூட்டி நடித்த "சி பி ஐ" இதுவரை நான்ங்கு பகுதிகள் வந்துள்ளன, மேலும் ஒன்று அடுத்த வருடம் எதிர்பார்க்கப் படுகிறது. இதே போல் மோஹன்லால் நடித்த இன்னொரு காமெடி படம் நான்ங்கு பகுதிகள் வந்துள்ளன. இத்தனயும் ஓடிச்சான்னு யாருங்க கேக்குறது. ஓடாம... அடுத்த பகுதி எடுக்க அவர் என்ன விஜய வச்சா படம் எடுக்குராங்க??, இல்ல ரஜினிய வச்சு படம் பன்ராங்கலா??, நஸ்டமானா காச திருப்பிக் கொடுக்க..
    மேலும் ஒரு தகவல், தமிழ் படங்களின் முதல்- பகுதி இரண்டு படம் எது தெரியுமா ?? க்ரோதம் - 2. அட நம்ம பிரேம் நடித்தது.  ஓடிச்சான்னா   கேக்குரீங்க??, அதான் மூனாவது பகுதி வரலேல்ல.
சரி இத்துடன் தமிழ்மணம் பாணியில் சண்ணலை மூடுகிறேன். நீங்க காமெண்ட்ஸ் போட்டு போய் படத்தப் பாருங்க,,

Friday, November 12, 2010

சங்கதி - புதுசு கண்ணா புதுசு

                                                                                                       வணக்கம் அன்பு நெஞ்சங்களே,

உங்களை இதுகானும் பிரிந்திருந்ததர்க்கு வருந்துகிறேன் . இத்துனை நாட்கள் எழுதாமல் இருந்ததற்கு ஏதேனும் காரணங்கள் உண்டாஎன்று நீங்கள் கேட்கலாம் ( யாரவது கேட்டுருங்கப்பா.... ), என்னுடைய தொடைக்கணிணி மழுங்கிய காரணத்தினாலும் , இந்த எழுத்துப்பணி குறித்த சில கேள்விகளினாலும் , மிக முக்கியமாக சொம்பேரிதனதினாலும் , இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்து கொண்டிருதேன் . அதோ அந்த ஜெர்மானியன் வாழ்க !! இந்த வருட தீபாவளி சிறப்பூதியம் கிடைத்தது, செல்களின் உச்சியில் கண் மூடி கிழக்கு நொக்கி அமர்ந்து கிடந்த வார்தைகள் எழுந்துகொண்ட கிளர்ச்சி. ஒரு மடிக்கணிணியும் இனையத் தொடர்பும் வாங்கிவிட்டேன். எழுத்துக்களுடன் முத்தங்கள் பரிமாறாத வறண்ட உதட்டு வேலைகளில் ஒரு அருமையான பாடம் - பயன்படுத்தா வரமும் ஒரு சாபமே வெரறொன்றும் உண்டு - எழுத்து யாவர்க்கும் வாய்க்கப் பெற்றதன்று.

இந்த மீள்துவக்கத்தில், முதன்முறை துவங்கிய வேகம் இல்லை என்பது உன்மை, கல்லூரி முடித்து ஒரு வேலையுடன் வீட்டிற்க்குத் திறும்பும் மகன் பொல உனருகிறேன். துவங்கிய பொழுது ஒரு பொழுது போக்காக துவங்கி, உந்துதலின் காரணமாக எழுதி இருக்கிறேன். இந்த முறை, ஒரு இலக்குடன் எழுத முடிவு செய்து இருக்கிறேன். இந்த குறுகிய இடைவெளி பல நல்ல எழுத்தர்களை செரித்து கொண்டதை பார்கிறேன் வருத்தமே. சிலர் இன்னுமா எழுதிக் கொண்டு இருக்கிரார்கள் என்ற வியப்பு, சிலர் இன்னும் எழுதுகிறார்கள் என்ற வெருப்பு.

பழைய சர்சைகல், இப்பொழுது இன்னும் அதிகமாய், புதிதாய் மூண்டு கொண்ட சில சர்சைகள், ஆயினும் எந்த பழைய விரோதங்களும் இன்னும் முடியவில்லை.கண்டிப்பா இவைகளை என் எழுதுக்களால் மாற்றி விட முடியும் என்றில்லை. ஆயினும் நான் குறிப்பிட்ட சில நல்ல எழுத்தர்கள் விட்டுச் சென்ற பனிகளை தொடர்வேன் ( என்று நம்புகிறேன்னு வச்சுகுங்க )

மொத்தத்தில் " சங்கதி - இப்பொழுது புது புத்துணர்சியுடன் - புதுசு கண்ணா புதுசு".