Sunday, June 16, 2013

THE MAN of STEEL [ 3-D ] - திரைவிமர்சனம்

முப்பெரும் விழா மாதிரி, நான்கு படங்களுக்கு இசை வெளியீடு மாதிரி கொத்தா,"தீயா வேலை செய்யணும் குமாரு. . . , தில்லு முல்லு  -2, மற்றும் இந்த படம் மொத்தமாக முப்பெரும் திரைவிமர்சனம் ட்ரை பண்ணலாம் என்று முடிவுசெய்தேன் . . . . ஓசியில் டிக்கெட் வாங்கிக்கொடுத்து இந்த ஏழைக்கு அருள்செய்ய யாரும் கிடைக்காத சூழ்நிலையில் சொந்த செலவிலேயே(வேறு வழியில்லாமல்!!!) படத்துக்கு போக    முடிவு செய்தேன். .

2008 முதலே 'THE MAN of STEEL' இந்தப் படத்தின் இவன், இவை, இப்படிகளை ஆவலுடன் படித்து 2011இல் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்ததை தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த சுப்பர்மேன் பக்தர்களில் நானும் ஒருவன். அது மட்டுமல்லாது, இந்த படக்குழுவில் நோலனில் துவங்கி, மார்க் ஸ்ந்ய்டர், டேவிட் கொயர், ஹான்ஸ் சிம்மர், கெவின் கோஸ்ட்நேர் என்று அந்த பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போய் ரஸ்ஸல் க்ரோவ் என்ற பெயர் சேர்கையில் இந்தப் படத்திற்கான சுழற்சியை(எதிர்பார்ப்பை) ஒருபடி மேல் எடுத்துச் சென்றது. கடந்த  2012ன் இறுதியில் இருந்தே இந்த படம் - "வரும்ம்ம்ம் ஆனா வராது" என்பதுபோல் இருந்தது. 

கதை - ஜெர்ரிசிகேல் மற்றும் ஜோ ஷுஸ்ட்டர் இந்த SUPERMAN கதாபாத்திரத்தை 1933இல் படைத்தது முதலே ஒரே கதைதான். "க்ரிப்டன்" என்ற அழிவு நிலையில் உள்ள ஒரு கிரகம்  , அங்கு பிறக்கும் ஒரு குழந்தை, பூமிக்கு வந்து சேர்கிறது.அதிசக்தி கொண்ட அந்தக்குழந்தை- வளரும் பொழுது, வளர்ந்த பின் - பேண்ட்க்கு வெளில சிவப்பு ஜட்டி போட்டுகினு சுத்தி சுத்தி - பறந்து பறந்து தனது சக்தியை பயன் படுத்தி பூமியை பலவிதமான தீய சக்திகளில் இருந்து காப்பாற்றுவதுதான், இதன் கதை. பெருவாரியாக, ஒவ்வொவொரு பதிவிலும், வில்லன்களும் அவர்களின் சக்திகளும்தான் வேறுவேறு.  யாரு பெத்த பிள்ளையோ நமக்காண்டி உசுரகொடுத்து சண்டை போடுது என்று SUPERMAN எப்பவும்போல், வேற ஹோட்டல் ஆனாலும் அதே இட்லி அதே சட்னி கதைதான்.இந்தப் படத்திலும் அதேதான்.ஆனால் சிவப்பு ஜட்டி இல்லை. ஜட்டி ஒரு மேட்டரா என்று கேட்பவர்கள் இந்த பதிவை முதலில் படிக்க.

வார்னெர்-ப்ரோஸ் தயாரிப்பில், ச்ன்ய்ட்டெர் இயக்கத்தில் வெளியாகி மேற்கூறிய பெயர்களாலும் பெரிய எதிர்பார்ப்போட வெளிவந்த இந்த திரைப்படம் அதிதிருப்தியும் இல்லை வெற்றியும் இல்லை.முழு ஆண்டு பள்ளி விடுமுறையின் இறுதியில் வெளியாகி இருந்தாலும், இந்தப் படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படவில்லை.ஒரு தீவிர superman ரசிகனை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப் பட்டிருகிறது. மற்ற superman படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த superman படத்தில் - திரைக்கதையிலும், காட்சிகளிலும் ஒரு வறட்சி தெரிகிறது.அமீர் மொக்ரி`யின் இணையற்ற ஒளிப்பதிவில் உள்ள ஆக்கம் டேவிட் ப்றேன்நேர்`றின் வெட்டிங்கிலும் ( எடிட்டிங்க்கு தமிழ்பா ! ! ! ! ), வரைகலையிலும்(GRAPHICS) இல்லை. இஸ்ஸ்கூல் பசங்கபோல், சத்யம் தேட்டரில், Flooring கலர் முதல் ஊழியர்களுக்கான சீருடைகலர் வரை அனைத்தையும் காப்பி அடிக்கும்காமல் சொந்தமாகவே குறைந்த செலவில்செய்யும் சங்கம் தேட்டரின் ஸ்பீக்கர், ஜிம்மர்`இன் இசை+இரைச்சல் சங்கமம்  - தலைவலிடா சாமி. SUPERMANநின் MAN-பகுதி அதாவது CALRKE-KENT மிக அருமையாக யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி ஒன்றுதான் நெஞ்சுக்கு நிம்மதி - யாருக்கு ? ? ? யாருக்கோ ! ! ! ! ! !
 

THE MAN of STEEL உயர உயர பறந்தாலும் SUPERMAN ( பழைய படங்கள் )ஆக முடியல

THE MAN of STEEL என்பது உண்மையில் தலைவர் STALINநை குறிக்கும் என்ற குருந்தகவலோடு ஜூட் விடுகிறேன்.

Saturday, June 1, 2013

குட்டிப்புலி திரைப்படம் விமர்சனம்

அய்யா ஹீரோ வந்தாச்சா ? . . . . .,
ஹீரோயணி வந்தாச்சா ? ?. . . . . . , மேக்-அப் மேன் வந்தாச்சா ? ? . . ,
ஹீரோயணியோட அம்மா வந்தாச்சா ? ? . . . . . . ., ஓகே.! ! !

சொம்பு, ஆலமரம், அருவா, பெருசுங்க, பொட்டு பொடுசுங்க, அம்மணி அம்மா, அம்மன் கோவில், திருவிழா செட்டிங், தாலி, ஜிம் பாய்ஸ், ரெடியாப்ப ??? ஓகே ஸ்டார்ட், ஆக்ஸ்ஷன், கேமரா ரோல்லிங், இப்படி ஒரு படம் எடுத்த எப்புடி இருக்கும் ? ? ? ஒரே குஷ்டமா இருக்கும். . . .

ஒரு அடாவடிப் அராத்து பேர்வழி, அவனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும்- ஏழ்மையில் உழழும் தாய், அவனுடைய வீரசாகசங்களில் தன்னை இழந்து, பாப்-கார்ன், டீ, காபிக்கு கொஞ்சம் முன்னாடி அவனையே காதலிக்க முடிவு செய்யும் அழகான பெண் போன்ற நூறு வருட சினிமாவில் சொல்லப்படாத மிகப்புதிய கதாபாத்திரங்கள்தான் - குட்டிப்புலி`யின் முக்கிய கதாபாத்திரங்கள் ( தலைலேந்து கை எடுங்க பாஸ் - வீட்டுக்கு ஆகாது ). அதெப்படி இந்த பொண்ணுங்க தேடிடிடிடிடிடிடிடிப் போய் ஒரு பொரம்போக்க காதலிக்கிறாங்களோ புரியலங்க.

               ஒரு முதல் படம் என்ற தரத்தில், முத்தையா தன்னுடைய பணியை நன்றாகவே செய்துள்ளார். வாழ்த்துக்கள். சில இடங்களில் பெண்மை, தாய்மை, தாலி, போன்ற தமிழ் சினிமாவின் புராதான சின்னங்களை போற்றிப் புகழ்ந்து, கைதட்டல் வாங்க முயற்சித்திருக்கிறார் ( அப்பா ஒரு டீ சொல்லு ). மிக நாட்களுக்குப் பிறகு சினிமாவில் சிலம்பச்சண்டை பார்க்க மகிழ்ச்சி. ஆனாலும் அந்த சண்டை காட்சியில் பயன் படுத்திய யுக்திகள் பெரும்பாலும் 'களரி'பயிட்டு ( ரௌத்ரம் பழகு படத்துல ஜீவா பயிற்சி எடுப்பாரே - அதான் ) முறையை சார்தவை என்பது ஏமாற்றமே.
              தாட்டியரு பாட்டிலும், அருவக்காரன் பாட்டிலும், வரிகளில் நீண்டநாட்களுக்குப் பிறகு வைரமுத்து தெரிக்கிறார். முதல் படமான - வாகை சூட வாவில் கலக்கிய ஜிப்ரன், இந்த படத்தில் ஜஸ்ட் பாஸ்.
கும்கி`யிலும், சுந்தரபாண்டியனி`லும், லக்ஷ்மி மேனன் அழகில் மயங்கி, இந்தப் படத்தை பார்க்க போநீர்கலேயானால், ஒபெனிங்க் காட்சியிலேயே உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீனைகளுக்கும், தாமரைகளுக்கும், லக்ஷ்மி மெனொனுக்கும்  உவமப்படும்  - அந்த அழகு இந்தப் படத்தில் . . ஜூம் ஜக்கம்மா .. காணவில்லை .... ( ஒரே பீலிங்க்ஸ் மா) ஆமா லக்ஷ்மி-குட்டியோடரிசல்ட் என்ன பாஸ் ஆச்சு???

சர்ர்ரி.... படத்தின் கதை என்ன ? ?, இயக்குனர் அங்கிள் இந்த படைப்பின் மூலமாக தாங்கள் கூற விழையும் பொருள் என்ன?. இப்டி மதுரை தமிழ் சங்கத்துல புல் மில்ஸ் சாப்ட்டு, வெள்ளை தாடி வச்சுகின்னு -  நக்கீரர் மாதிரி கேள்வி கேக்க கூடாது .. இருந்தா சொல்ல மாட்டோமா ? ?

சசிகுமார்தான் ஹீரோ என்றாலும் பல இடங்களில் நமக்கு நம்மையும் மீறி தெரிவதென்னவோ தனுஷ்தான் ( நோ, 3-D கண்ணாடி தேவைப்படாது ).

ஆமாம் - பஞ்ச்லைன் சொல்லியே ஆகணும்ல - குட்டிபுலி - இன்னும் வளரனும்...

*  +  *  +  *  +  *  +  *  +  *  +  * +  * + * + * + * + * + * + * +  * + * + * + * + * + * + *

நாடி, நரம்பு, ரத்தம், சதை முழுசும் அனுஅனுவா சினிமா ஊறிப்போன ஒரு ரசிகன் என்ற முறையில் இந்தப் பதிவின் இரண்டாவது பகுதி.

முன்பெல்லாம் கிராமங்களின் பக்கம் சினிமாவின் காமெராக்கள் திரும்பும் பொழுது யதார்த்தமான மக்கள், அங்குள்ள வாழ்கை, மேலோட்டமாக அவர்களின் பிரச்சனைகளை, இந்த ஒளியும் ஒலியும் தேடியிருகின்றன, பதிவு செய்திருக்கின்றன. மிக சில படங்களே இந்த கட்டமைப்பை கடந்து மனிதம் தேடியிருக்கின்றன, தனது கடமையை நிறைவேற்றி இருக்கின்றன. வாகை சூட வா, வேதம் புதிது, அழகர்சாமியின் குதிரை, பரதேசி, மிருகம் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். ஆனால் கடைசிப் பத்தாண்டுகளின் சாபமா என்பது புரியவில்லை, இந்த கடைசி பத்தாண்டு சினிமாவின் கேமரா பலமுறை கிராமங்களின் பக்கம் திரும்பும் போது பல முயற்சிகள் லும்பர்களை வானுயரப் புகழும் போக்கை யதார்த்த படுத்தி கொண்டுவிட்டது. இது வருத்தம் என்பது தவிர இது எனக்கே சொந்தமான பயமாக கூடயிருக்கலாம்.
அண்மைய மராட்டிய திரைப்படங்கள் மற்றும் மலையாலம் மொழி படங்கள் இதில் நமக்கு முன்னோடி, சில ஹிந்தி திரைப்படங்களும் உண்டு.
காப்ரிச்ச பாஉஷ்  - மராட்டி - Gabricha Paus - விவசாயிகளின் நீர் பிரச்சனை, கடன் மற்றும் மின்சாரபற்றாகுறையைப் பற்றி ஹாசியத்துடன் பேசிய படம். பீப்லி லைவ் - ஹிந்தி Peepli Live, மற்று க பிஜ்லி க மன்டோலா - ஹிந்தி - Matru ka Bijili ka Mandola, அதாமிண்ட மகன் அபூ - மலையாலம், அச்சன்உரங்காத்த வீடு - மலையாலம் எனக்கு பிடித்த சிலவை.
கருத்து கசாயம் ஒன்னும் இல்ல. . . நான் சொல்லிதான் புரியணும்னா அதுவும் கஷ்டம். . . .
காமேரக்களுக்கு ஒரு வேண்டுகோள், வெட்டருவா, வேல்கம்பு, வீரம், தாய்மை, தாலி, பஞ்சாயத்து, பனைமரம், காதல் இவற்றை தாண்டி தமிழக மற்றும் இந்திய கிராமங்களில் பேசப்படாத சோகமும், நெகிழ்ச்சியும், மனிதமும், மனிதனும் மண்டி கிடக்கிறது. அவை மாண்டு போவதற்கு முன் தீர்வு தேடவில்லை என்றாலும் பரவா இல்லை, பதிவாவது செய்து கொள்வோம்.


ஆங்கிலத்தில் படிக்க - http://hemloc.blogspot.in/2013/06/kuttip-puli-movie-review.html