Friday, January 10, 2014

ஐத்தாஷ் ஹஸ்ஸான் நீ வாழ்க ! ! !

பழுத்த விஷம்
நாகமாணிக்கமாய் மாறுமாம்
இங்கு மடைமை, மறமாக.

‘நாய்களின் ஊழை' என்ற
உனது ஊரின் பெயரை,
‘குட்டிச் சிறுத்தைகளின் காடு’ என்றாக்கிடுக.

ஓடி விளையாடும் வயதில் நீ
மோதி விளையாடியிருக்கிறாய்,

செல்லமே, நீ விதையாகியிருகிறாய்.

உன் போக்கில் நீ மருத்துவனாகியிருந்தால்
நிச்சயம் சில உயிர்கள் காத்திருப்பாய்
இன்ஷா அல்லாஹ், இன்றோ
பல சமூகங்கள் உயிர் பெற்றன உன்னால்.

உங்கள் ஊர் மேகங்கள்
வீரத்தின் மாரி பொழிந்திருக்கும்
நெல், கோதுமைகளில்
பச்சயம் அல்ல தன்மானம் கொழித்திருக்கும்.

அல்லாஹு ஆன பில்யக்கினி
வபிஷ்ஷிலாஹி சாஃப்தாடி
எனது நன்னம்பிக்கையாலும்
எனது யுதங்களாலும்
நான் என் எதிரியை எதிர் கொள்வேன். 
மேற்கூறிய வரிகள் லிபியாவின் பழைய தேசியகீதத்திலிருந்து எனக்குப் பிடித்தவை.
ஐத்தாஷ் ஹஸ்ஸான் நீ வாழ்க ! ! !