Tuesday, July 28, 2015

விண்ணில் பாய்ந்த கல(/லா)ம்

நீ தீவு
ஆறுபுறங்களிலும் சிந்தனைகளால் சூழப்பட்டவன்

உன்னை போன்ற சில சுவரொட்டிகள் ஓட்டியதால்
இன்றைய சில குட்டிசுவர்கள்
நிரம்பிடித்துக் கொண்டன
நேற்று  பெய்த மழை அதையும் உரிதுதிர்தது.

பலர்தன் பாவங்கள் கரைக்கச்செல்லும் கரைகளில்
முறையாய் குவிந்த தேசியப் புண்ணியம் நீ.
கப்பல்கட்டும் கரங்களால் வடிவம்பெற்ற
வியப்பான விண்கலம்

நீ தீவு
நார்புறங்களிலும் இளைஞர்களால் சூழப்பட்டவன்.

கணவை கட்டாய பாடமக்கினாய்
எளிமையை நெறியாக்கினாய்
அணுவியலை அழகாக்கினாய்.

இரும்பு மட்டுமல்ல மதம்-
எந்த உலோகமானாலும்
அவற்றை தங்கமாய் செய்த நல்ல ரசவாதி.
உன்னால் புத்தன் சிரித்தான் கண்ணன் மகிழ்ந்தான்.

மன்னித்துவிடு - உனக்கோர் இரங்கல்
இயற்ற நேரமில்லை !!
வெறும் ஐந்து வருடங்களே உள்ளன
நீ இட்டுச் சென்ற பணிகள் ஏராளம்