Thursday, September 22, 2016

பிங்க் திரைப்படம் திரைவிமர்சனம்

ஆமாம் அவனோடு உடலுறவு கொள்வதற்காக நான் காசு கேட்டேன், பின்பு அவனோடு உறவு கொள்ள விருப்பமில்லை மனதை மாற்றிக் கொண்டேன், அவனிடம் அதை சொல்லவும் செய்தேன். பின்பு என்னை அவன் கட்டாய படுத்தினான். நான் மறுத்தேன். அவன் என் மேல் பலம் ப்ரோயோகித்தான், தடுத்தேன், அவன் கேட்பதாயில்லை. அதனால் கையில் கிடைத்த ஒரு பொருளால் அவனைத் தாக்கினேன்.

ஒரு ஆணை விபச்சாரத்திற்காக அழைத்ததாகவும், மேலும் அவரை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த்தாகவும் குற்றம் சுமத்தப் பட்ட ஒரு பெண், தனது தரப்பில் நீதிமன்றத்தில் வைக்கும் வாதங்களைத்தான் இவை.

இன்னொரு காட்சியில் வழக்கறிஞர்  நீங்கள் இன்னமும் கன்னித்தன்மை உடைய பெண்ணா ? என்று கேட்க்கிறார். இது போல் படம் நெடுக நெருடலான வசனங்கள் அதன் நேர்மை குறையாமல் நம்மை தொடர்ந்து சுடுகின்றன.
பிங்க் இந்த வருடத்தின் மிகசிறப்பான படங்களில் ஒன்று. அமிதாப் தன்னுடைய  வக்கீல் கதாபாத்திரத்தை மிக நுணுக்கமாக செய்துள்ளார். டாப்ஸியும் மிக சிறப்பாக நடித்துள்ளார். கீர்த்தி குலாரி, கிடைத்த வாய்ப்பை அதிரடியாக பயன்படுத்தியுள்ளார்.

அனிருத் ராய் சவுத்திரி இந்த படத்தின் வாயிலாக தேசிய விருதிற்கு நியமிக்க படுவார் என்பது எனது நம்பிக்கை. இந்த படத்தின் எடிட்டருக்கும் அதுவே நடக்கும் வாய்ப்புண்டு - போதாதித்யா பேனர்ஜி.

PINK இளஞ்சிவப்பு - அனுமதிஇன்றி / உடன்பாடின்றி ஒரு ஆணுறுப்பு ஒரு பெண்ணுறுப்பில் நுழைவதை அல்லது ஒரு தனி பெண்ணுறைப்பையும் குறிக்கும் பெயர். படத்தோட பெயரை வச்சே உங்ககளுக்கு புரிஞ்சிருக்கும் படம் பயந்தாங்கோலிகளுக்கு இல்லை

PINK அவசியம் அனைத்துப் பெண்களும் தனது குடும்ப / நண்பர்களுடன் பார்க்க வேண்டிய படம்

Wednesday, September 7, 2016

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்

ஜியோ வந்து மறக்கடிக்கும் வரை இணையத்தை இரண்டு நாட்களுக்கு முன்புவரை " மாட்டிறைச்சி நமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம் - சீசன் - 2 " ஓடிக்கொண்டிருந்தது. ஸ்பைடர்மேன் ( திரைப்படம் ) பார்க்க வேண்டிய முக்கிய சமூக பொறுப்பு இருந்ததால் இன்றுதான் அதை  பற்றி எழுத முற்பட்டேன்.

உதித் ராஜ் என்ற பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்  - மாட்டிறைச்சி சாப்பிடததால்தான் ஹுசைன் போல்ட் தங்க பதக்கம் வென்றார். அதனால் . . . .  சொல்லி இருக்கிறார். இவர் எப்படி இப்படி ஒரு கருத்தை சொல்லலாம் என்று பொங்குவதற்கு எதுவுமில்லை. அவரர் கருத்தை சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆக எனக்கு உண்டு.

ஹுசைன் போல்ட், ராஜ் கூறிய தகவலுக்கு அவரை தரவாக இந்தக் குறிப்பையும் அவரை பதியவில்லை. நானும் இரண்டு நாட்களாக படித்த ஒரு இடத்தில் கூட அவருடைய கூற்றை நிரூபிக்கும் ஒரு தகவல் கூட நமக்கு கிடைக்கவில்லை.  கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு பேய் தலையை விரிச்சு சல்ஸா ஆடிச்சாம் என்பது போல நமக்கு கிடைத்த ஒரு வீடியோ அவருடைய கருத்திற்கு நேர்மறையான பொருள் கொண்டது. அதவாது ஹுசைன் இந்த வீடியோவில் நெறைய வாழைப்பழங்கள் சாப்பிடவும் என்கிறார் ( அட அவரே சொல்றாருங்க, பாருங்க  )

https://youtu.be/LDy6e21uGwA


அந்த இன்னொருத்தர் இருக்காரே அவர்தான் யோஹான் ப்ளேக் அவரும் அவரைப் போல ஒரு ஓட்டப் பந்தைய வீரர், அவரும் அவருடைய ஜமைக்கா நாடடையே சேர்ந்தவர், அவரும் ஒலிம்பிக்கில் ஓட்டத்தில் பதக்கங்கள் வென்றவர்.

இன்னொரு கொடுமையை கேளுங்க - யாம் அதாவது கிழங்கு நமக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா சக்கரவல்லி கிழங்கு, சேனை , சேப்பை கிழங்கு போன்றவை ஹுசைனின் வெற்றிக்கு காரணம் என்றும் பேசப் படுகிறது. இந்த இன்னொரு வீடியோ .. போய் பாத்துட்டு வாங்க
https://youtu.be/LDy6e21uGwA

எந்த இடத்திலும் இவர் மாட்டிறைச்சியை புகழ்ந்து, தன் வெற்றிக்கு காரணமாக சொல்லிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்ற நிலையிழும் கிடைத்த தகவல்கள் கூற்றுக்கு எதிர்மைறையாக இருக்கும் காரணத்தாலும் உதித் ராஜின் செயலை நாம் அரசியல் என்று பார்ப்பது சரியாகும்.

தனிப்படட முறையில் சைவ உணவு அனைத்து விதமான காரணிகளும் போதுமானது, அனைத்து மதமும்  ( இசுலாம் உட்பட ) கொல்லாமையை முன்னிறுத்துகின்றன. மேலும் படிக்கையில் விளையாட்டு வீரர்களுக்கு சைவ உணவு சரியானதே என்று முன்வைக்கும் ஒரு தகவல். இந்த தகவலை வெளியிட்டிருப்பது ஆஸ்திரேலியாவின் விளையாட்டு துறை

http://www.ausport.gov.au/ais/nutrition/factsheets/special_diets/vegetarian_eating

இதுல பாருங்க நமது விருப்பத் தேர்வான வஹாபிகள் முன்னின்று கொடி பிடித்தனர். அவர்களுக்கு பிரத்தியேக கேள்வி, ஹுசைன் போல்ட் உணவுகளில் பல இடங்களில் போர்க் என்ற உணவு வகை குறிப்பிட பட்டிருந்தது, அதை பற்றி உங்கள் யாருக்காவது எதாவது தெரிந்தால் எனக்கும் சொல்லவும். மேலும் பல விளையாட்டு வீரர்களின் உணவுப் பழக்கங்களை படிக்கையில் அனைவரது பட்டியலிலும் போர்க் என்ற வார்த்தை மீண்டு வன்டுகொண்டே இருந்தது.

Wednesday, August 17, 2016

ஜோக்கர் - ரௌத்திரம் பழகு

என்றாவது உங்களை நீங்களே சுமப்பது போல் உணர்ந்திருக்கிறீர்களா ? வெறும் ஒரு திரைப்படம் அதுவும் அதுவும் அதன் இடைவெளிக்கு முன்பே அப்படி ஒரு தாக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறதா ?

#ஜோக்கர்_பாராட்டுக்கள், கவனிக்க இது விமர்சனம் மட்டுமல்ல இது ஒரு பாராட்டும்.

இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி விளம்பரம் முதலே( அது கடந்த மாநிலங்களவை தேர்தல் பிரச்சார நேரமென்று நினைக்கிறேன் ) இந்த படத்துக்காக காத்துக் கிடந்து, நமது சுதந்திர தமிழக அரசியல் சூழலில் இந்தப் படம் வெளியாகாமல் போய்விடுமோ சற்று மண் வாடியவறில் நானும் ஒருவன்.

ஒரு நிகழ்வில் இந்தப் படத்தின் இயக்குனர் ராஜு முருகனை சந்தித்தேன், தான் ஒரு கமியூனிஸ்ட்டு என்று அறிமுகம் செய்து கொண்ட அவரின் படம் என்பதால், இவரும் ஏனைய போலிகள் போல் வறண்ட - ஒரு சாரர் கருத்துக்களை இந்த படத்தில் முன் வைப்பார் என்ற முன்முடிவோடே இந்த படத்தை பார்த்தேன். ஆனால் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கிய அவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.

புரட்சி பேசுவதாய் கதையின் களத்திற்கு கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமில்லாத காடசிகளோ வசனங்களையோ இடைச்செருக்காமல் ஒரு வனப்பான முற்போக்குப் படம் இது. சில படங்கள் - ஏன் அனைத்துப் படங்களுமே ஏதோ ஒருவரியிலாவது ஏதோ ஒரு கருத்தை தீர்க்கமாய்ப் பதிகின்றன. ஜோக்கர் வரிக்கு வரி நொடிக்கு நொடி என்று அதை தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறது, -பின்விழைவுகளை கருத்தில் கொள்ளாமல். இயக்குனர் என்ற தளத்தைக் கடந்து, வசனகர்த்தாவாக, ஒரு திரைக்கடையாளனாக முருகன் வெகு சிறப்பு.

ஆரண்ய காண்டத்திலிருந்தே ( கொடுக்காய் புலியின் அப்பா ) ஒவ்வொரு படத்திலும்  தனக்கான ஒரு முத்திரையை தயார் செய்து வந்த குரு சோமசுந்தரம், இந்தப் படத்தில் அதை அழுத்தமாய்ப் பதிகிறார். கோமாவில் இருக்கு மனைவிக்கு பாவாடை மாற்றிவிடும் ஒரு நொடி காட்சியில் உடைந்து நம்மை அழவைக்கிறார். ஊர்கோவிலில் இருக்கும் சாமிக்கான குடையை தனதாக்கும் முன் அதை அவர் பார்க்கும் பார்வைக்கு ஷ்டாண்டிங் ஓவேஷன் ( ) தனது மனப்பிறழ்விழும், அழுகை கட்டுப்படுத்தி வீட்டுவேலைகளை இசைக்கு ( ஒரு கதாபாத்திரம் ) கட்டளையிடும் காடசியில் அவருக்கு இந்த பாண்டிய நாடே அடிமை.

அமைக்கப்பட்ட  கழிப்பறையின் அடிப்படை கட்டுமானத்தை, கையில் கிடைத்த ஒலிம்பிக் மெடல் போல் பார்க்கும் காட்சியில் தன்னை இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணிகளில் ஒன்றாக இனத்தை கொள்கிறார் '#ரம்யா பாண்டியன்'. 

#செழியன் பெயருக்கேற்றார் போல் மிகக் செழுமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு கிராமத்தில் கொல்லைப்புறத்தில் இரவில் பெய்யும் மழையின் காட்சி, உடைக்கமுடியாத கதவுகள் முன் உதவிக்கு துடிக்கும் கால்களை காட்டும் காட்சி, துடிக்கும் உயிரை சொட்டு சொட்ட்தாக வடியும் சிறுநீர் பையால் காடசிப்படுத்தலென்று மிகையில்லாத அற்புதம் இவருடைய ஒளிஆளுமையும் பதிவும்.

ஒப்பனை இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம், 

மிகச்சிறு எடிட்டிங் பிசுறுகளைத் தவிர இந்தப் படம் அதி சிறப்பான படம். கஞ்சா பொடடலங்கள் போல் போதைக்கு ஒளியை விற்பனை செய்யும் திரையரங்குகள் இது போன்ற திரைப்படங்களை திரையிடுவதால், தன் பாவங்களை கழுவிக்கொள்ளலாம். டோரண்ட்டுகளில் திருடும் ஞமலிகளுக்கு அந்தப் பிராரப்தம் கூட கிடடாது போகும்.

கோடம்பாக்கத்தின் ஜனாதிபதி என்ற முறையில் இந்த ஆண்டின் மிக சிறப்பான படமென்றும், தைரியமான, பயனுள்ள படமென்றும் இந்தப் படத்தை அறிவிக்கிறேன். தேட்ட்றலா போய் பாக்கல பகத்சிங்க்க அவுத்து விட்ருவேன் பாத்துக்க

#ஜோக்கர்_பாராட்டுக்கள்