Monday, April 3, 2017

டோரா திரை விமர்சனம்

தமிழின் இன்னொரு பேய்ப்படம் "டோரா ".  நான் வியந்து ரசிக்கும்  ஒரு படமான " வாகை சூட வா "திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் ஹிதேஷ் ஐபக் தயாரிப்பில், டிக் டிக் டிக் என்று பெயர் வைப்பதாக இருந்து பின்பு "டோரா"வாக வெளிவந்திருக்கும் அமானுஷ்ய + நகைசுவை திரைப்படம்.
  

முன்பு சற்குணத்திடம் உதவி இயக்குனராக இருந்த தாஸ் ராமசாமி என்பவரின் முதல் திரைப்படம். இதுதான் கதை, இதுதான் அதன் வெளிப்பாடு, இந்த கதாபாத்திரம் இது மட்டும்தான் பேசும் என்பதை தெளிவாக முடிவு செய்துகொண்டு, இந்த திரைப்படத்தை இயக்குனர் நகர்த்தியுள்ளார், வாழ்த்துக்கள் - இதில் சரி, தவறு என்பதற்கான விவாதங்கள் இல்லை. ( வரலாற்று உண்மைகளை சுய லாபத்திற்காக மாற்றி பேசாதவரை, சமூக அக்கறை இல்லாமல் போகும் வரை ).  பயன்படுத்திய கார்கள் வாங்கும் கார் கடைகளில் ஒரு கால் டாக்சி ஆரம்பிக்க என்னும் இருவர் கார் வாங்க வருகின்றனர் . மைலேஜ், விலை, லுக் போன்ற ஆராய்ச்சிகளில் இருக்கையில் மிகப் பழைய ஒரு கார் பிடித்துப் போகிறது . வேண்டுமென்றால் கதாநாயகி இதுதான் வேண்டுமென்று தன் தந்தையிடம் அடம் பிடித்து வாங்கியிருப்பது போல் காட்சியை நகர்த்தியிருக்கலாம் ஆனால் அப்படி இல்லாமல் " அப்பா யோசிச்சு பாருங்க காமராஜர் ஒட்டிய கார், எம் ஜி ஆர் போன கார் " என்று பழைய கார் வாங்குவதற்கான ஒரு பலமான ஒற்றை காரணத்தை பதிவு செய்கிறார்ல் - நல்லது. அது மட்டுமல்லாமல் காரின் நிழலில் அதை ஆட்க்கொண்டிருக்கும் நாயின் வடிவம் தெரிவது போல் காட்டியதும் பாராட்டுதலுக்கு உரியது. படத்தின் இரண்டாவது கொலைகாரனை கொல்லும் சேஸ் - சபாஷ்.

படத்தின் முதல் பகுதி நகைச்சுவையாகவும் இரண்டாவது பகுதி அமானுஷ்யங்களும் என்று கதை அமைக்கப் பட்டிருக்கிறது. முதல் பகுதியில் வரும் பவளக் கொடி - சத்யம் வகை நயன்தாராவை கண்முன் கொண்டுவருவது தவிர்க்க முடியவில்லை, தவிர காவல் நிலையத்தில் உத்தமனுடன் பேசும் காடசிகள் அந்நியன் விக்ரமை உங்களுக்கு நினைவு படுத்தினால் - அது உங்கள் தவறல்ல. மிகத் தெளிவான கதைக் களம் முடிவு செய்தாலும், அதை சரியாக இயக்கி இருந்தாலும் நடிகர்களிடம் புதுமையை தேடுவது, நடிப்பில் மாற்றம் கொண்டுவர முயல்வது இயக்குனரின் கையில் இருக்கிறது . தவிர படத்தின் "வசனங்கள்" எந்த தாக்கமும் இல்லாமல் பிஞ்சு குழந்தை கையில் பட்ட அடிபோல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை . புதிய இயக்குனர் - இவர் உழைத்தால் நிச்சயம் உயர்வுண்டு. இதே கதைக்களத்தில் - ஒரு பேய் ஒரு காருக்குள் புகுந்து பழி வாங்கும் கதைக் களத்தில் 2004ல் டார்ஸான் - தீ வொண்டர் கார் என்ற ஹிந்தி திரைப்படம் வந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது

விவேக் - மேர்வின் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகர்கள் என்று சொல்லலாம். மோதிப் பாரு வந்திருக்கா டோரா மிக அருமை. தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை முழுமையாக சரியாக பயன்படுத்திய இவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் தனது பணியை மிகக் கச்சிதமாக செய்துள்ளார்.

மற்றவர்களுடைய கருத்துக்கு மாறாக -  நயன்தாரா இன்னும் சற்று முயற்சி செய்திருக்கலாம் என்றே எனக்குப் படுகிறது. தனது திறமையை சோதிக்க கிடைத்த ஒரு வாய்ப்பை நயன் தவற விட்டதாகவே நினைக்கிறேன்.

தம்பி ராமையா, உத்தமண்,  சுலில் குமார்  ( அல்லது ) தருண் போன்றவர்கள் சொன்னதை செய்திருக்கிறார்கள் மற்றபடி புதுமைகள் எதுவும் இல்லை. பாலிவுட்களில் அளவெடுத்து வரைந்த  நெற்றி பொட்டு, கருப்பு நிறம் போன்ற க்ளிஷேக்களில் இன்னும் தமிழர்களை அணுகுவது, எரிச்சலாக இருக்கும், அவர்கள் பேசும் தமிழ் கூட சரியாக இருக்காது. கோடிகளில் செலவு செய்யும் பொழுது நல்ல தமிழ் பேசும் இரண்டு பேர் வைத்து வாய்ஸ் ரெக்கார்டிங்க் செய்தால் என்ன கேடு என்று கேட்க தோன்றும் . அதே போல்தான் இன்னும் பான்பராக்கில் வட மாநிலத்தவரை அணுகுவது, ஆகக்  கொடுமையான ஹிந்தியில் அந்த கதாபாத்திரங்கள் பேசுவது என்பது தமிழ் திரைப் படங்களின் சிக்கல். சௌகார்ப்பெட்டில் இலவசமாக ஹிந்தி பேச - நயன்தாரா ரசிகர் ஒருவர் கூட கிடைக்காமலிருப்பது வியப்பே ??

டோரா  - போய் பாருங்க ஒரு தப்பா

* *  * *  * * ** * * *** * * * * * * * * *  * *  * * ** * * *** * *

இந்திய சினிமாவின் சாபமா இல்லை வரமா ?  -  ஒரு கதை அல்லது ஒரு காதைக்காண ஒற்றை முடிச்சு வெற்றிபெற்று விட்டால் அதையே நீர்த்துப் போகும்வரை முன்பு சுரண்டிய அதே லாட்டரியை மீண்டும் மீண்டும்  சுரண்டி தனது அதிர்ஷ்டத்தை சோதிப்பது . புரியும்படி சொல்லவேண்டுமானால் ஒருவர் ஒரு தெரு முனையில் வடைக் கடை போட்டு நல்ல வருமானம் பார்த்தால், அதே தெருவில் நடுப் பகுதியில் இன்னொருவர் வடை கடை வைப்பது போல், திரைப்படங்கள் எடுப்பது.  இதற்க்கு இயக்குனர்கள், சினிமா வடடாரத்தில் சொல்லப்படும் ஒரு மிகப் பெரிய காரணம், தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் இப்போது இதுதான் விற்பனை ஆகிறது, பேய்க்கதை இருந்தா சொல்லு  . . . என்கிறார்கள்.

Tuesday, February 28, 2017

கோடிகளும் சினிமாக்களும்


Image result for box office collection


ஓவ்வொரு அப்பாடக்கர் படம் வரும்போதும் இத்தனை கோடி அத்தனை கோடின்னு உதார்வுட்டுகிணு  ரசிக சிகாமணிகள் கிளம்புவாங்க.  இந்திய சினிமாவிற்கு சில ஆண்டுகள் முன்புவரை படம் நல்லாருக்கு படம் நல்லால்ல, ஹிட் பிளாப் இவ்வ்ளோதான் அதுக்குமேல சில்வர் ஜூபிலி, 100 நாள் கொண்டாட்டம், இன்னும் கொஞ்சம் முன்னாடி போனால் வைர விழா போன்றவைதான் யதார்த்த சினிமா ரசிகனின் பார்வைக்கு வைக்கப் பட்டது.

இன்று அந்த சினிமாவின் வசூல் வெற்றியின் ஒரு மிக முக்கிய லட்சினையாக முன்னிறுத்தப் படுகிறது, இது ஒரு திரைப்படத்திற்கு சரியான அளவுகோல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. முதலில் இந்த வசூல் பற்றிய செய்தியில் சொல்லப்படும் 100 கோடி கணக்கு பெரியா ஆளுமை இல்லை என்பது என் கருத்து.    தமிழகத்தில் மட்டும் 7 கோடி மக்கள் வசிக்கின்றனர். கபாலி போல் அல்லாமல் ஒரு டிக்கட் 100 ரூவாய்க்கு விற்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம்

100 கோடி வசூல், ஒரு டிக்கட்டின் விலை ரூபாய் 100 என்றால் சராசரியாக 1 கோடி பேர். அதாவது சராசரியாக சென்னையின் மக்கள் தொகையே 1 கோடியை விட அதிகம். தமிழகத்தின் சரிபாதி மக்கள் கூட பார்க்காத திரைப்படம் என்றே பொருள் படும். தவிர BO என்பது உலக வசூல் பற்றிய கணக்கு, ஆக இந்த கணக்கு ஒரு சிறந்த திரைப்படத்திற்கான நல்ல அளவு ஆகாது.

வாகை சூட வா என்ற திரைப்படம் நான் என்றென்றும் அனைத்து தளங்களிலும் உயரப் பிடிக்கும் ஒரு படம். பெரிய வசூல் இல்லை. அரவான் போன்ற திரைப்படங்களும் அப்படித்தான். உலக சினிமாவிலும் பல மிக சிறப்பான படங்கள் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன், போன்ற திரைப்படங்கள் வசூலில் பெரிய சாதனைகள் புரியவில்லை.

திருடா திருடி நல்ல வசூல், தன் சமகாலத்தில் வேறெதுவும் நல்ல படங்கள் இல்லாததாலேயே பெரிய வெற்றி. ஆக வசூல் என்ற அளவீடோடு ஒரு சினிமாவின் வெற்றியை யதார்த்த ரசிகன் அணுகுவது சரியல்ல


ஆங்கிலத்தில் படிக்க   http://hemloc.blogspot.in/2017/02/crores-and-cinema.html