Tuesday, February 28, 2017

கோடிகளும் சினிமாக்களும்


Image result for box office collection


ஓவ்வொரு அப்பாடக்கர் படம் வரும்போதும் இத்தனை கோடி அத்தனை கோடின்னு உதார்வுட்டுகிணு  ரசிக சிகாமணிகள் கிளம்புவாங்க.  இந்திய சினிமாவிற்கு சில ஆண்டுகள் முன்புவரை படம் நல்லாருக்கு படம் நல்லால்ல, ஹிட் பிளாப் இவ்வ்ளோதான் அதுக்குமேல சில்வர் ஜூபிலி, 100 நாள் கொண்டாட்டம், இன்னும் கொஞ்சம் முன்னாடி போனால் வைர விழா போன்றவைதான் யதார்த்த சினிமா ரசிகனின் பார்வைக்கு வைக்கப் பட்டது.

இன்று அந்த சினிமாவின் வசூல் வெற்றியின் ஒரு மிக முக்கிய லட்சினையாக முன்னிறுத்தப் படுகிறது, இது ஒரு திரைப்படத்திற்கு சரியான அளவுகோல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. முதலில் இந்த வசூல் பற்றிய செய்தியில் சொல்லப்படும் 100 கோடி கணக்கு பெரியா ஆளுமை இல்லை என்பது என் கருத்து.    தமிழகத்தில் மட்டும் 7 கோடி மக்கள் வசிக்கின்றனர். கபாலி போல் அல்லாமல் ஒரு டிக்கட் 100 ரூவாய்க்கு விற்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம்

100 கோடி வசூல், ஒரு டிக்கட்டின் விலை ரூபாய் 100 என்றால் சராசரியாக 1 கோடி பேர். அதாவது சராசரியாக சென்னையின் மக்கள் தொகையே 1 கோடியை விட அதிகம். தமிழகத்தின் சரிபாதி மக்கள் கூட பார்க்காத திரைப்படம் என்றே பொருள் படும். தவிர BO என்பது உலக வசூல் பற்றிய கணக்கு, ஆக இந்த கணக்கு ஒரு சிறந்த திரைப்படத்திற்கான நல்ல அளவு ஆகாது.

வாகை சூட வா என்ற திரைப்படம் நான் என்றென்றும் அனைத்து தளங்களிலும் உயரப் பிடிக்கும் ஒரு படம். பெரிய வசூல் இல்லை. அரவான் போன்ற திரைப்படங்களும் அப்படித்தான். உலக சினிமாவிலும் பல மிக சிறப்பான படங்கள் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன், போன்ற திரைப்படங்கள் வசூலில் பெரிய சாதனைகள் புரியவில்லை.

திருடா திருடி நல்ல வசூல், தன் சமகாலத்தில் வேறெதுவும் நல்ல படங்கள் இல்லாததாலேயே பெரிய வெற்றி. ஆக வசூல் என்ற அளவீடோடு ஒரு சினிமாவின் வெற்றியை யதார்த்த ரசிகன் அணுகுவது சரியல்ல


ஆங்கிலத்தில் படிக்க   http://hemloc.blogspot.in/2017/02/crores-and-cinema.html