Friday, November 12, 2010

சங்கதி - புதுசு கண்ணா புதுசு

                                                                                                       வணக்கம் அன்பு நெஞ்சங்களே,

உங்களை இதுகானும் பிரிந்திருந்ததர்க்கு வருந்துகிறேன் . இத்துனை நாட்கள் எழுதாமல் இருந்ததற்கு ஏதேனும் காரணங்கள் உண்டாஎன்று நீங்கள் கேட்கலாம் ( யாரவது கேட்டுருங்கப்பா.... ), என்னுடைய தொடைக்கணிணி மழுங்கிய காரணத்தினாலும் , இந்த எழுத்துப்பணி குறித்த சில கேள்விகளினாலும் , மிக முக்கியமாக சொம்பேரிதனதினாலும் , இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்து கொண்டிருதேன் . அதோ அந்த ஜெர்மானியன் வாழ்க !! இந்த வருட தீபாவளி சிறப்பூதியம் கிடைத்தது, செல்களின் உச்சியில் கண் மூடி கிழக்கு நொக்கி அமர்ந்து கிடந்த வார்தைகள் எழுந்துகொண்ட கிளர்ச்சி. ஒரு மடிக்கணிணியும் இனையத் தொடர்பும் வாங்கிவிட்டேன். எழுத்துக்களுடன் முத்தங்கள் பரிமாறாத வறண்ட உதட்டு வேலைகளில் ஒரு அருமையான பாடம் - பயன்படுத்தா வரமும் ஒரு சாபமே வெரறொன்றும் உண்டு - எழுத்து யாவர்க்கும் வாய்க்கப் பெற்றதன்று.

இந்த மீள்துவக்கத்தில், முதன்முறை துவங்கிய வேகம் இல்லை என்பது உன்மை, கல்லூரி முடித்து ஒரு வேலையுடன் வீட்டிற்க்குத் திறும்பும் மகன் பொல உனருகிறேன். துவங்கிய பொழுது ஒரு பொழுது போக்காக துவங்கி, உந்துதலின் காரணமாக எழுதி இருக்கிறேன். இந்த முறை, ஒரு இலக்குடன் எழுத முடிவு செய்து இருக்கிறேன். இந்த குறுகிய இடைவெளி பல நல்ல எழுத்தர்களை செரித்து கொண்டதை பார்கிறேன் வருத்தமே. சிலர் இன்னுமா எழுதிக் கொண்டு இருக்கிரார்கள் என்ற வியப்பு, சிலர் இன்னும் எழுதுகிறார்கள் என்ற வெருப்பு.

பழைய சர்சைகல், இப்பொழுது இன்னும் அதிகமாய், புதிதாய் மூண்டு கொண்ட சில சர்சைகள், ஆயினும் எந்த பழைய விரோதங்களும் இன்னும் முடியவில்லை.கண்டிப்பா இவைகளை என் எழுதுக்களால் மாற்றி விட முடியும் என்றில்லை. ஆயினும் நான் குறிப்பிட்ட சில நல்ல எழுத்தர்கள் விட்டுச் சென்ற பனிகளை தொடர்வேன் ( என்று நம்புகிறேன்னு வச்சுகுங்க )

மொத்தத்தில் " சங்கதி - இப்பொழுது புது புத்துணர்சியுடன் - புதுசு கண்ணா புதுசு".

3 comments:

மதுரை சரவணன் said...

மீண்டும் எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள்..

geethappriyan said...

மீண்டும் நிறைய எழுதுங்க நண்பா

vijaynewflim said...

super appu....

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )