Wednesday, November 24, 2010

இந்தியா - பத்து ஆண்டுகள் 2001 - 2010 [ பகுதி - 1 ].


இந்த டிசெம்பருடன் இந்த வருடம் மட்டுமல்ல, இரண்டாவது ஆயிரதின் முதல் பத்து ஆண்டுகள் முடிவடைந்தன. பூனை முடியை, மீசை என்று பெருமை பீத்திக் கொண்ட என் கண்ணாடி, இப்பொழுதெல்லாம் தினம் முழைக்கும் ரோமங்கலை - அய்யோ நாளைக்கு திருப்பி சவரம் செய்ய வேண்டுமென்று வெறுப்புடன் பார்கிறது. 100 குடிகள் இருந்த எங்கள் தெருவில் ( என் சொந்த ஊரில் ) இன்று வெரும் 10 -15 குடிகள் மட்டுமே இருக்கின்றன. உலகின் ஏழு அதிசயங்கள் மாறிவிட்டன. இந்தியாவிற்க்கு இந்தியர்களுக்கு மூன்று ஆஸ்கர். திருப்பதி லட்டு அளவில் குன்றிவிட்டது, என்ற மாற்றங்கள் ஒருபுரம்.
சச்சின் இன்னும் விளையாடுகிரார் 'அதே புகழுடன்'. ரஜினி கமல் இன்றும் ஹீரோக்கள். லைஃப்பாய் சோப் இப்பொழுதும் கறைய மறுக்கிரது. இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் ( விரைவிலேயே ) உலகம் அழிந்துவிடும் என்று மக்கள் இன்றும் நம்புகின்றனர். யூனீயன் கார்பைட் - ஆண்டெர்சொன் இன்னும் கைதாகவில்லை. கிழக்கில் சூரியன், இடப்பக்கம் சுழழும் பூமி, சுவைகுன்றா கர்பகம் மெஸ் பொடிதோசை, காபி என்று மாறா உலக நிகழ்வுகள் ஒரு புரம்.

இந்த பத்து வருட கணக்கிர்கென்று ஒரு குறிப்பு, அதுவும் நம் நாடு, நம் மக்கள் பற்றி மட்டும் எழுத இசைகிறேன். மிகக்குறிப்பாக இந்த பத்து ஆண்டுகலையும், அதர்க்கு முந்தைய காலத்தையும் ஒப்பீடு செய்து எழுத முயர்சிக்கிறேன். ஒரு முழு சமுகமாக நம்மை ஒரு தராசில் நிருத்த்திப் பார்கையில் கடந்த பத்து ஆண்டுகாலதில்..

மக்களும் மலினப்பட்டனர்.
மீண்டும் ஒருமுறை துனைத்தலைப்பை படியுங்கள், மக்கள் அல்ல - மக்களும். அரசியல்வாதிகள்,அரசு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என்று துவங்கி இந்தியன் தாத்தா லிஸ்டில் வருபவர்கள் மட்டும்தான் மலினமாக கைஊட்டு பெரும் நிலையில் இருந்தனர். அவர்களும் மக்களே. ஆயினும் இவர் அல்லாத பொதுமக்கள் இதைப்பற்றி பேசி வருத்தபட்டு ( அதுமட்டும் ) கொண்டிருதனர். பேசிக்கொண்டு மட்டும் இருந்த மக்கள், இந்த கடைசி பத்து ஆண்டுகளில் தனித்தனியாக எல்லா நிலைகளிலும் மலினப்பட்டனர். வெளிப்படையாக வோட்டுப்போட வேட்பாலரிடம் பணம் பெருவது துவங்கி, பணத்திர்காக மதம் மாறுவது வரை இந்தியா ஒரு சமுகமாக மலினப்பட்டு இருக்கிறோம். தனிமனித தேவைகளை, சுய நலத்தை மனிதன் பெரிதாக நினைக்கிறான். அப்படியா ?. இது சுயநலமா ? மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள்.
சுயநலத்தில் - சுயம் உண்டு. சுயம் என்பது தனது சுற்றம் தனது மக்கள், தனது மனைவி(கள்), என்று நம் தமிழ்நாட்டில் வாழ்ந்தது ஒரே குடும்பம், இந்தியா என்றால் ஒரு பத்து குடும்பங்கள் மட்டுமே( தமிழ்நாட்டில் எந்த குடும்பம் என்று கேட்டு காமெடி பண்ணாதீங்க ). இன்னும் குறுக்கி, தான் மட்டுமென்று சுயத்தின் வட்டத்தை குறுக்கினால் கூட சுயநலத்திர்க்காக இன்று, மனிதன் வாழ்கிறான் என்று சொல்ல முடியாது. சுய நலதில் மிக முக்கியம் நலம். தனது நலத்தை பேனுதல். நமது வாக்குகளை வெறும் ரூ.500 க்கு விற்கிரோம். அந்த ரூ.500 ல் எவ்வளவு நலமாக இருந்து விட முடியும் ?. ஒரு தனி மனிதனின் மூன்று நாள் செலவுக்கு மட்டுமே இந்த பணம் பயன்படும். இதில் எந்த அளவுக்கு நலமாக இருந்து விட முடியும் ?. கணவனுக்காக, சாதி, சமுதாய அந்தஸ்திர்காக மதம் மாறுவது போய், வெறும் பணதிர்க்காக மதம் மாறுகிரோம், உடல் விற்பது போல. இப்படி செய்வதால் கிடைக்கும் பணத்தின் பயன் என்ன ?
தன்னுடைய உடல் நலம், மகிழ்ச்சி, அனைத்தையும் மறந்து போய், தனகென்று ஒரு நிமிடம் கூட இல்லாமல் வேறு ஒருவனுடைய ( முதழாளி ) பணத்திர்க்காக, உழைக்கிறோம். அதில் பணம் மட்டுமே, நலம் எங்கே. சேர்க்கும் பனத்தை பலர் துய்ப்பது கூட இல்லை. வேறு சிலர் அந்தப் பணத்தை மருத்துவருக்கு அழுகிரார்கள். பிறகெப்படி இது சுயநலம்.

ப்லாஸ்டிக் பயன்பாட்டை இந்த நோக்குடன் அனுகலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ப்லாஸ்டிக்கை நம்மால் அழிக்க முடியாது என்பது எல்லோர்கும் தெரிந்த உண்மை. இருந்தும் ப்லாஸ்டிக் பயன்பாட்டை, நிருத்துவதைப் பற்றி, - குறைப்பதைப் பற்றி, சிந்திப்பது கூட இல்லை. வருமான வரி - மாதம் ரூ. 300 வருமான வரி சேமிப்பதர்காக, சிரமப்படும் காமெடி பீஸ்கலை, இன்னும் 3 மாததில் நீங்கள் பார்ர்க முடியும். இது சுய நலம் அல்ல. நலம் அல்ல. சுயமும் அல்ல. வெரும் பணம். இந்த நேரத்தில் ஒரு ரஷ்ய திரைப்படத்தில் வந்த ஒரு வசனத்தை சொல்வது சரியாக இருக்கும். " சில ஆண்டுகல் முன்புவறை கூட மக்களுக்கு, பல் துறைகள், பல தொழிகள். இன்று மக்களுக்கு, துறைகள் மட்டும்தான் வேறு வேறு தொழில் ஒன்றே ஒன்றுதான் - பணம் செய்தல். உயிரியலில் பட்டம் பெற்ற எத்தனை பேர்கள் மென்பொருள் தயாரிப்பு பணியில் வேலை செய்கின்றனர். அது மென்பொருள் தயரிப்பில் உள்ள ஈடுபாடு அல்ல, மென்பொருள் அமைப்புகள் காட்டும் வெளிநாட்டு மோகம் கூட அல்ல, வெரும் பணம்சார் ஈடுபாடு என்பதை சொல்வதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. மென்பொருள் படித்ததால் வெளி நாட்டிற்க்கு செல்வோரை விட, வெளி நாட்டிற்க்கு ( பணம் சம்பாதிக்க ) செல்லவதர்காய் மென்பொருள் படிப்போரை நீங்கள் பார்ததில்லையா. இதற்க்கு சப்பைகட்டாய் அங்குல்ல கலாச்சாரத்தை பெருமையாக போற்றி போற்றி செய்துவிட்டு. தனக்கென்று ஒரு பிள்ளை பிறந்ததும், தெறித்து ஒடிவந்து நம்மூர் பள்ளிகளில் விண்ணப்பம் வாங்குவது ஒரு புது நடைமுறை அல்ல.
ஒரு சுய நலமான மனிதன், தன்னுடைய சுற்றுப்புரம் பற்றி(யாவது) நிச்சயம் கவலைகொள்வான். ஆனால் சூழள் பற்றி கவலைப் படுவதை வீன் நேரச் செலவாக, உடல் உலைச்சலாக நாம் சிந்திக்க துவங்கி விட்டோம். 70 % சென்னையில் உள்ள வீடுகளில் இன்று வாசல் தெளிக்கும் பழக்கம் அற்றுப்போனது இதர்க்கு ஒரு சிரிய உதாரனமாய் அமையலாம். இன்று நாம் செய்யும் சில தர்ம காரியங்கள் கூட சுயநல பணத்தின் அடிப்படையில் செய்வதை விட இழிவு என்ன இருக்க முடியும். எனக்கு பழக்கமான ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகதிர்க்கு வரும் பெருவாரியான மக்கள், கேட்கும் கேள்வி " நன்கொடைக்கு எத்தனை சதவிகிதம் வருமான வரி தள்ளுபடி அள்ளது மீள்தொகை கிடைக்கும் என்பது ".
இந்த பணத்தினால் பெரிய வீடுகள் வாங்கினோம், மருப்பே இல்லை உங்கள் ஊரில் உங்கள் தாத்தா காலத்திலோ ( நினைவிருந்தால் ), அப்பா காலத்திலோ உங்கள் வீட்டிர்க்கு வந்த உறவினர்கள் எண்ணிக்கயையும், உங்கள் வீட்டிருக்கு வரும் உறவினர்கள் எண்ணிக்கயையும் ஒப்பிட்டு பார்த்தால் இந்த கூற்று புரியும்(அவர்களுக்கே நேரம் இல்லையென்று சொல்லி நம்மை நாமே மனசைத் தேத்திக் கொள்ளலாம்). இன்னொருபடிமேல் சென்று உறவினர்கள் நமது வீட்டிற்க்கு வருவதை ஒரு செலவு நோக்குடன் அனுகும் மனநிலையில், இன்று நாம் அனைவரும் நெர்ந்துகொண்டோம். அதே வீட்டில் இருக்கும்பொழுது நமது பக்கத்து வீட்டுக்காரருடன், எத்தனை முறை மகிழ்சியாய் பேசி இருப்போம். அவரைப் பார்த்து மனம்மலர்ந்து எத்தனை முறை சிரித்திருப்போம். அப்படி வீட்டைக் கட்டும் பலர், தான் வீடு கட்டுவதை ஒரு இளக்காக கட்டுவதில்லை, அதை நாளைய பணத்தேவைக்கான ஒரு முதலீடாக மட்டுமே நாம் பார்கிறோம். பணம் தேவை இல்லை என்று நானும் சொல்ல வரவில்லை. ஆனால் இந்த பத்து ஆண்டுகளில், பணம் செய்வது ஒன்றையே இலக்காக, அதைப் பெருவதர்க்காய் ஏதும் செய்யத் தயாராய், தன்னை இன்று நாம் மாற்றிக் கொண்டு விட்டோம். இப்படிச் சொன்னால் இன்னும் விளங்கப் புரியும். ஒரு மனிதனுக்கு முதல் கூற்று / தேவை ( primary objective ) இரண்டாவது கூற்று / தேவை ( secondary objective ) ஏனைய கூற்று / தேவை ( other objective ) என்று வகைபடுதலாம். இதில் நமக்கு முதல் தேவை பணமாக இருப்பதில் எனக்கு பெரிய எதிர்ப்பு இல்லை. ஆனால் இன்று, முதல், இரண்டாவது, மற்றும் ஏனைய என்ற எல்லா தேவைகளுமே நமக்கு பணம் என்ற மனப்பாங்கு இந்த பத்து வருடதில் நம்மிடம் பெருவாரியானவர்களிடம் வளரத்துவங்கி விட்டது. இது சரியா தவரா என்பது உங்களுக்கு நான் சொல்லித் தெரியத் தேவையில்லை.

" IT NEVER MATTERS WHETHER YOU LIVE AN IMPULSIVE OR AN INTUTIVE LIVING, BUT THE LIVING. " - PLATO.

மேலும் இதே சமுகப்பாங்கில் நகரப்படுதல், பயம் செரிந்த மக்கள், பெண் விடுதலை அத்துமீரல்கள் என்ற உட்தலைப்புகளிலும், அரசியல் பாங்கு, திரைப்படம், பொன்ற பாங்கிலும் இந்த கருத்துத்தோனி பயனப்படும்.

Sunday, November 14, 2010

கோல்மால்-3( ஹிந்தி ) - திரைவிமர்சனம்..

நீங்கள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவராயின், கண்டிப்பாக உங்கள், பெரியப்பாவின் மகன் மகளையோ, சித்தப்பாவின் மகன் மகளையோ, பார்த்து கூடப் பிறக்கவில்லை என்றபோதிலும் " நீயெல்லாம் எனக்கு ஏண்டா அண்ணனாப் பொறந்த " என்றோ " உனக்குப் போய் தம்பியா பொரந்தேன்னு " கேட்டதுண்டா ?. உண்டு என்றால் அந்த நினைவலைகளை. இந்த திரைப்படம், உங்களுக்கு மீள்திரட்டும். இன்றைய குழந்தைகள், தன் உற்ற சகோதரனயே, பார்த்து இப்படி கேட்கிறார்கள் என்பது மறுக்க முடியாது. சரி சரி ஆட்டய கவனிப்போம்....

கோல்மால்- 1 மற்றும் கோல்மால் -2( ரிடன்ஸ் ) வின் வெற்றிக்குப் பின், அந்தக் கூட்டனியின் மூன்றாவது படைப்புதான் கோல்மால்-3. ஹிந்தி திரைப்பட உலகின் முதல் ட்ரியோலொஜி. அட அதாங்க ஒரு படம் எடுப்போம், நல்லா ஓடிச்சா, மருக்கா அதே பேர வச்சு, இன்னொறு படம், இதுவும் ஓடிச்சா மருக்கா இன்னொரு பகுதி. எளிமையா புரியிர மாதிரி சொன்னா, வேகுர வரைக்கும் பருப்ப வேக வெக்கிறது. மிக முக்கியமா ஹாலிவுட்காரைங்கலுக்கு, ஒரு படம் ஓடி, அதுக்கு அடுத்த பகுதி எடுக்கலேன்னு வச்சுக்கோங்க அவுங்கலுக்கு இந்தியா பாகிஸ்தான் உறவ  பத்தி பேச சொன்ன ஒபாமா போல அயிடுமாம். ஒன்னுமே புரியாதாம். இப்போ இந்த வியாதி இப்போ பாலிவுட் புன்னியதில் நமக்கும் தொத்திகிச்சு. நம்ம கூட அந்த அபரிமிதமான " நான் அவன் இல்லை " படதுக்கு பகுதி ரெண்டு பாத்தோமே..அட அகில உலக நவரச நாயகன் ஜீவன் ஒரு அம்பாசிட்டர் கார் நடிப்பு நடிசாரே.... ஹ்ம்ம்ம்ம் அதே அதே.. ( ஜீவனின் ரசிகர்கள் மண்ணிக்கவும், அது ஆஸ்கார் -  பிளையாகி விட்டது ).

இந்தப் படத்தின் கதைக்களம் கோவா ( பூகோலம், வெங்கட் ப்ரபு படம் இல்லங்க ). இரண்டு சகோதரக் கூட்டம், இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் காமெடி கும்மாலி படத்தின் முதல் பகுதி. ஒருவருடைய வியாபாரத்தை இன்னொருத்தர் கெடுப்பது. ஒரு கூட்டனியில் அஜய் தேவ்கன், ஷ்ரெயஸ் தல்படே, தேவ்கனின் காதலியாக கரீனா, தேவ்கனுக்கு ஒரு அம்மா மட்டும். இன்னொரு கூட்டனியில் அர்ஸத் வார்சி, குனால் கெமு, மற்றும் துஸார் கபூர், இவர்கலுக்கு ஒரு அப்பா மட்டும். இந்த அம்மாவும் ரத்னா, - அப்பாவும் மிதுன் சக்ரவர்தி ( இவர் தீபன் சக்ரவர்தி அண்ணான்னு கேக்காதீங்க ), முன்னாள் காதலர்கள். இவர்கள் இருவரும் சந்திக்க மீண்டும் காதல் துளிர்கிறது. இவர்கள் சந்திக்கயில், இன்னும் இறுவரும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் வளர்க்கும் குழந்தைகள் அனாதைகள், இவர்கள் காலத்தினால் வளர்க்க நேர்ந்தது என்பதும் தெறிகிறது. இதை ஒட்டுக் கேட்ட கரீன, இவர்கள் இருவருக்கும் இந்த வயோதிகதிள் திருமணம் செய்து வைக்கிறார். டீ ,, பிஸ்கட்,, பாப்கார்ன்..

இரண்டு குடும்பமும், ஒரே வீட்டில் வாழ்கிறார்கள்.குழப்பம், தாம் அனாதைகள் என்ற உன்மை தெரிய வருகிறது,கிலைமாக்ஸ், கட்டித்தழுவுகிரார்கள். சுபம். பல பகுதிகள் உள்ள படங்களில், பெரும் பகுதி, அந்த வரிசையின் முதல் படம் அடுத்த பகுதிகளை விட அருமையாக இருக்கும் இந்தப் பட வரிசையும் இதற்க்கு விலக்கல்ல. இதை வணிகவியல்காரர்கள் " தீ லா ஆஃப் டிம்னிஸிங்க் மார்ஜினல் உடிலிடி"- THE LAW OF DIMINISHING MARGINAL UTILITY என்பார்கள். பசியில் வாடும்பொழுது நமக்கு கிடைக்கும் அந்த முதல் வாழைப்ப்பழத்தின் சுவை, அல்லது அதன் நிறைவு, அதற்கு அடுத்த( இரண்டாவது ) வாழைப்பழத்தை விட( முதல் ) அதிகமாய் இருக்கும், இப்படி குறைந்து கொண்டே வரும் எண்பார்கள். - இது பரிட்சையில ஞாபகம் வந்திருந்தா, பண்ணண்டாவது முடிச்சிருப்பேன்... இந்த விதிக்கு முன்னா பாய் ஒரு விதிவிலக்கு. அதாங்க நம்ம வசூல்ராஜா. இதுவரை வந்த இரண்டுமே நயம்.

அஜய் தேவ்கன் தன்னை திரமையான நடிகர் என்று நிருபிக்க தவரவில்லை. இயக்குனர் ரோஹித் ஷெட்டிக்கு மீண்டும் நன்றிகளும், வாழ்துக்களும். எனக்கு நினைவில் படும்வரை மிதுன் முதல்முரை காமெடி முயர்சித்திருக்கிரார். இந்தப் படத்தில் இவருக்கு திளைக்கும்  காதல் போல.. நேரம் கடந்து, கசிந்தாலும், கைகூடிஉல்லது,  - காமெடி. ஜானி லீவர் தனது பணியை, யாண்டும் போல் செவ்வனே செய்துல்லார்.
முன் குறிப்பிட்ட முன்னா பாய் படத்திர்க்கும் மூண்றாம் பகுதி அடுத்த வருடம் முழுஆண்டு விடுமுறைக்கு எதிர்பாற்க்கப் படுகிறது. மேலும் இந்த தொடர் பகுதி படங்கள் நம் நாட்டில்,  மலையாள படங்களில் அதிகம், மம்மூட்டி நடித்த "சி பி ஐ" இதுவரை நான்ங்கு பகுதிகள் வந்துள்ளன, மேலும் ஒன்று அடுத்த வருடம் எதிர்பார்க்கப் படுகிறது. இதே போல் மோஹன்லால் நடித்த இன்னொரு காமெடி படம் நான்ங்கு பகுதிகள் வந்துள்ளன. இத்தனயும் ஓடிச்சான்னு யாருங்க கேக்குறது. ஓடாம... அடுத்த பகுதி எடுக்க அவர் என்ன விஜய வச்சா படம் எடுக்குராங்க??, இல்ல ரஜினிய வச்சு படம் பன்ராங்கலா??, நஸ்டமானா காச திருப்பிக் கொடுக்க..
    மேலும் ஒரு தகவல், தமிழ் படங்களின் முதல்- பகுதி இரண்டு படம் எது தெரியுமா ?? க்ரோதம் - 2. அட நம்ம பிரேம் நடித்தது.  ஓடிச்சான்னா   கேக்குரீங்க??, அதான் மூனாவது பகுதி வரலேல்ல.
சரி இத்துடன் தமிழ்மணம் பாணியில் சண்ணலை மூடுகிறேன். நீங்க காமெண்ட்ஸ் போட்டு போய் படத்தப் பாருங்க,,

Friday, November 12, 2010

சங்கதி - புதுசு கண்ணா புதுசு

                                                                                                       வணக்கம் அன்பு நெஞ்சங்களே,

உங்களை இதுகானும் பிரிந்திருந்ததர்க்கு வருந்துகிறேன் . இத்துனை நாட்கள் எழுதாமல் இருந்ததற்கு ஏதேனும் காரணங்கள் உண்டாஎன்று நீங்கள் கேட்கலாம் ( யாரவது கேட்டுருங்கப்பா.... ), என்னுடைய தொடைக்கணிணி மழுங்கிய காரணத்தினாலும் , இந்த எழுத்துப்பணி குறித்த சில கேள்விகளினாலும் , மிக முக்கியமாக சொம்பேரிதனதினாலும் , இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்து கொண்டிருதேன் . அதோ அந்த ஜெர்மானியன் வாழ்க !! இந்த வருட தீபாவளி சிறப்பூதியம் கிடைத்தது, செல்களின் உச்சியில் கண் மூடி கிழக்கு நொக்கி அமர்ந்து கிடந்த வார்தைகள் எழுந்துகொண்ட கிளர்ச்சி. ஒரு மடிக்கணிணியும் இனையத் தொடர்பும் வாங்கிவிட்டேன். எழுத்துக்களுடன் முத்தங்கள் பரிமாறாத வறண்ட உதட்டு வேலைகளில் ஒரு அருமையான பாடம் - பயன்படுத்தா வரமும் ஒரு சாபமே வெரறொன்றும் உண்டு - எழுத்து யாவர்க்கும் வாய்க்கப் பெற்றதன்று.

இந்த மீள்துவக்கத்தில், முதன்முறை துவங்கிய வேகம் இல்லை என்பது உன்மை, கல்லூரி முடித்து ஒரு வேலையுடன் வீட்டிற்க்குத் திறும்பும் மகன் பொல உனருகிறேன். துவங்கிய பொழுது ஒரு பொழுது போக்காக துவங்கி, உந்துதலின் காரணமாக எழுதி இருக்கிறேன். இந்த முறை, ஒரு இலக்குடன் எழுத முடிவு செய்து இருக்கிறேன். இந்த குறுகிய இடைவெளி பல நல்ல எழுத்தர்களை செரித்து கொண்டதை பார்கிறேன் வருத்தமே. சிலர் இன்னுமா எழுதிக் கொண்டு இருக்கிரார்கள் என்ற வியப்பு, சிலர் இன்னும் எழுதுகிறார்கள் என்ற வெருப்பு.

பழைய சர்சைகல், இப்பொழுது இன்னும் அதிகமாய், புதிதாய் மூண்டு கொண்ட சில சர்சைகள், ஆயினும் எந்த பழைய விரோதங்களும் இன்னும் முடியவில்லை.கண்டிப்பா இவைகளை என் எழுதுக்களால் மாற்றி விட முடியும் என்றில்லை. ஆயினும் நான் குறிப்பிட்ட சில நல்ல எழுத்தர்கள் விட்டுச் சென்ற பனிகளை தொடர்வேன் ( என்று நம்புகிறேன்னு வச்சுகுங்க )

மொத்தத்தில் " சங்கதி - இப்பொழுது புது புத்துணர்சியுடன் - புதுசு கண்ணா புதுசு".

Friday, April 16, 2010

FACING GOLIATH - வாழ்கையை மாற்றும் 48 நிமிடங்களாகட்டும்

நம் அனைவருக்குமே ஒருமுறையாவது இன்றோடு இந்த நிமிடத்தோடு வாழ்கை முடிந்து விட்டால் நன்று என்று தோன்றும். இது மகிழ்ச்சியின் உச்சத்தில் அல்லது தோழ்வியின் முனையில் தோன்றும். இன்னும் அதிகமாய் தோழ்வியின் உச்சத்தில் இன்றோடு முடிந்தது இனி என் செய்வது, ஏன் வாழவேண்டும் என்று புரியாமல் ஒரு சூழல் ஏற்படும். இதைப் பற்றிய ஒரு ஒளிப் பதிவுதான் இந்த குறும்படம்.

ரே( RAY ) தன்னுடைய பிறப்பால் மிகக் குறைவான பார்வை கொண்ட மனிதர். தன்னுடைய 51 வயதில் இருக்கும் இவருக்கு இன்னும் சில நாட்களில் வலது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை தேவை ஏற்படும் நிலையில் இந்த காட்சிகள் நகர துவங்குகின்றன. இந்த நேரத்தில் ரே ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சேருகிறார். செபஸ்டியன்( SEBASTIAN )  என்ற உடற்பயிற்சியாலரை சந்திக்கிறார். சில தினங்களில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான உடற்பயிற்சிப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள் என்ற செபஸ்தியானின் வேண்டோகோளுக்கு இணங்க ரே வழக்கை ஓட்டம் மாறுகிறது. இருவரும் போட்டியில் பங்கு பெறுகின்றனர். செபஸ்டியன் மட்டும் அந்த போட்டியில் வெற்றி பெறுகிறார். மேலும் ஹாலிபாக்ஸ் கனடா வில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு முன்னேறுகிறார். அங்கு ரே சிறப்பு பங்கேற்பாளராக அழைக்கப் பெறுகிறார். அந்தப் போட்டியில் செபஸ்டியன் வெற்றி அடையவில்லை. ரே தனது சிறப்பு தோற்ற கட்சியை நிறைவு செய்கிறார். திரையை இருள் சூழ்கிறது நமக்குள் ரே - ஒளி பிறக்கிறது. ரே என்ற மனிதரை பார்கையில் பாரதி பாடி அழைத்த ஒளி படைத்த கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சும் காணக் கிடைக்கின்றன. இயல்பாக தெளிந்த நீர்போல் ஓடும் கட்சிகளும், அதற்க்கு நேர்த்தியாய் இசையும் நிச்சயமாக நொடிக்கு நொடி பயனுள்ளவை. நம்பிக்கை, விடாமுயற்சி, போன்ற வார்த்தைகளை பேசாமல் பேசும் காட்சிகள் வெற்றி என்ற வார்த்தைக்கு பொருளை மாற்றிவிடுகின்றன.


Thursday, April 15, 2010

தமிழ்த்திரையில் சங்ககால 'ராப்' - RAP இசைப் பாடல்கள்

தமிழ் வார்த்தைகல கோழி குஞ்சா நெனசுகிட்டு, சொடுக்குநு ஒவ்வொவொரு வார்த்தையையும் கழுத்த திருகி, மென்னு, முழுங்கி, செமிச்சு, துப்பி, ஏப்பம் விட்டு, கேமராவல வந்து நடு விரலையும் மோதிர விரலையும் மடிச்சு மேலுங் கீழுமா ஆட்டுறது ராப் வகைப் பாடல். இன்னும் இது நிறைவடைய இது என்னன்னு புரியாத மாதிரி ஒரு உடையும் போட்டுக்கணும். இது கடந்த பத்து வருடத்தில் நம்ம தமிழ் சினிமா ராப்புக்கு கண்டுபிடித்த விளக்கம் ( அது கெடக்குது விடுங்க ).

RAP : இசையின் ஆதிக்கம் குறைவாக, மொழியின் ஆட்சி அதிகமாய் இருக்கும் இசை RAP - ஆகும். உரைநடை கவிதைகளுக்கும் இதுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்த ராப் வகை பாடல்கள் இசையால் அதிகம் செய்யப் படவில்லைஎன்றாலும் இசையின் ஜதிக்குள் நின்று ஒலிக்கும். இந்த வகை பாடல்களின் மாத்திரை இசையின் ஜதியை வேறாக கொண்டே அமைகின்றன. டூயட் படத்தில் வரும் சித்தத்தினால் உரைநடை கவிதை வகையை சாரும், அந்த ஒலிப்பதிவில் இசை இருக்கும், ஆயினும் மொழி அதன் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் கீழே சொன்ன பாடல்கள் அப்படி இல்லை. இந்த பாடல்களில் இசை உண்டு அனால் அதன் ஜதியின் கட்டுபாட்டில் இதன் வரிகள் இல்லை. அதை விட்டு அவை வெளியிலும் செல்ல வில்லை என்பதை நம்மால் உணர முடியும். வாட் இஸ் தி மேட்டர் ஐ சே. ஏதாவது இசை சிரோன்மணிகள் இதைப் படித்துக் கொண்டிருந்தால் இன்னும் விம்மோ சபினாவோ போடா வரவேர்க்கப் படுகிறார்கள்.

தமிழ் திரை உலகிற்கு இந்த வகைப் பாடல்கள் கடந்த பத்து வருடத்தில் வரத்தொடங்கின என்று நீங்கள் நினைபவராய் இருந்தால், முழிய மடக்கி சூடு பறக்க தேச்சு மன்டேல போட்டுக்குங்க. 'காதலன்' படத்துல வர்ற பாடல்தான முதல்ப் பாடல்னு சொன்னா - இன்னும் ஒரு முறை கொட்டிகிங்க. தமிழ் திரைக்கு இந்த வகைப் பாடகள் புதிதல்ல, இன்னும் சொல்லப்போனால் 'ராப்' என்று இந்த வகைப் பாடல்கள் அமெரிக்கவில் பெயர் பெறுவதற்கு முன்னமே நம் திரை உலகில் இந்த வகைப் பாடல்கள் உண்டு. அந்தப் பாடல்களில் எனக்கு பிடித்த சில பாடல்களை உங்களுடன் பகிர்கிறேன்.

இந்த தமிழ் 'ராப்' தெரியாத தமிழர்களே இருக்க முடியாது. கே. பீ. சுந்தராம்பாள் குரலில் வந்த இந்த ராப் வகைப் பாடல் அலாதியான மாட்சி. படம் கந்தன்கருணை என்று நினைகிறேன்.


டி எம் சௌந்தர்ராஜன் குரலில் அமைந்த இந்தப் பாட்டு மிக அருமையான ராப். ராப் வகைக்கு இது ஒரு இலக்கணம் என்றால் கூட அது மிகை அல்ல. இசை நுட்பமாய் மொழியை தாண்டி செல்லும் ஒவ்வொரு ஜதியிலும் இந்தப் பாடல் நிறுத்தப்பட்டு மீண்டும் மொழி மேலோங்கும் பாங்கு அருமை. படம் அருணகிரிநாதர்.

இன்னும் பின்னோக்கிப் பயணப்பட்டால் நந்தனார் படத்துல என்னப்பனல்லவா பாடல். கூர்ந்து பாருங்க நம்ம 'திருட திருடி' படத்துல கதாநாயகியோட அப்பதான் இவரு. இந்த படத்தில் அநேகப் பாடல்கள் இந்த வகையை சார்ந்தது என்பது குறிப்பிட தக்கது.

இந்தப் பாடலின் முதல் வரியை ஒரு முறையாவது நம்ம எல்லாரும் சொல்லி இருப்போம். அர்தபழசு என்று குறிப்பதற்கு நாம் பயன்படுத்தும் இந்த முதல் இரண்டு வார்த்தைகள். காயாத கானகத்தே. படம் ஸ்ரீ வள்ளி இன்றைய HIPHOP வகை ராப்`களில் காணப் பெரும் இசை திரிவு ( CELESTIAL BREAKDOWN )  இந்தப் பாடலில் கையாளப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஒரு SLOW RAP - EMINEM, AKON போன்றோர்களின் உலக புகழுக்கு அவர்கள் எடுத்து விளையாடும் துருப்பு சீட்டு என்று சொல்லலாம்

இசயராஜ இல்லாமல் தமிழில் ஒரு இசைப்பட்டியல் தயாரித்து விட முடியுமா. இதோ இசையராஜாவின் RAP. இந்த ராப் இருந்தியில் இசைக்குள் புதைந்து விடுகிறது


மீண்டும் இசயராஜா. யேசுதாசின் ராப்


நந்தா படத்தில் வரும் ஓர் ஆயிரம் யானை பாடல் கூட இந்த வகை என்று சொல்லி விடலாம் ஆனால் அந்தப் பாடலில் மிக அதிகமாக வரிகள் ஜதிக்கு வழைந்து கொடுக்கின்றன.

இந்தப் பாடல்கள் எல்லாமே நமக்குத் தெரியும். இவை ராப் வகை என்பதுதான் நமக்கு ( எனக்கு, எனக்கு ) தெரியாது.

Monday, April 12, 2010

THANKS MAA( ஹிந்தி ) - திரை விமர்சனம்

இரண்டு வருடத்திற்கு முன் இந்தப் படம் வந்திருந்தால், "SLUMDOG MILLIONAIRE " படம் இந்த படத்தின் பாதிப்பில் எடுக்கப் பட்ட படம் என்று மார்தட்டி இருக்கலாம். போஸ்டர்களும், முதல் சில நிமிட காட்சிகளும் அந்தப் படம்தானோ என்ற சந்தேகத்தில் ஆழ்த்த முயற்சிக்கிற வேலையில், இல்லை என்று மறுத்து படத்தின் ஏழாவது நிமிடத்தில் இருந்து வேறு திசைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குனர் இர்பான் கமல். நான்கு ஆதரவற்ற தெருச்சிறுவர்கள், ஒரு சிறுமி, மனம் போன போக்கில் வாழ்கின்றனர். இரண்டு நாளே ஆன ஒரு குழந்தை இந்த  சிறுவர்களில் ஒருவனான, தன்னைத் தானே சல்மான்கான் என்று அழைத்துக் கொள்ளும், 'முனிசிபாலிட்டி'யின் கையில் கிடைக்கிறது. தன் நண்பர்கள் "சோடா" "கட்டிங்" மற்றும் தோழி "சுர்சுரி"யுடன் சேர்ந்து அந்தக் குழந்தையை அதன் தாயுடன் சேர்க்க முயற்சி செய்கிறான் முனிசிபாலிட்டி. இந்த ஓட்டத்தில் மும்பையின் பல மூலைகளிலும் இந்த சிறுவர்கள் சந்திக்கும் மக்கள், அவர்களின் வாழ்கை, உணர்சிகள் என்று இந்த கதை ஓடி முடிவடைகிறது. சாபக்கேடு என்றாலும் இந்திய சினிமாவுக்கே உள்ள போளிதனன்களோடு கதை நம் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றாலும், தனித் தனியாக ஒவ்வொரு காட்சியும் படையப்பாவில் தல தன்னோட சால்வையால் ஊஞ்சலை கீழிழுத்து உக்காரும் ஸ்டைலில் அமர்ந்து கொள்கிறது. மேல் சொன்னதற்கு மேல் இந்தக் கதையில் சொல்ல ஒன்னும் இல்லை-  கதாபாத்திரங்கள் நிலைத்து விடுகின்றன.
சீர்திருத்த பள்ளியில் வரும் சிறுவர்களோடு வன்புணர்ச்சி செய்யும் அந்த பள்ளியின் மேற்பார்வையாளர், மனைவி இல்லாத நேரத்தில் வேறு பெண் தேடும் ஆண், தன்னுடைய நாற்பது வயதிற்குப் பின் தனக்கு பாதுகாப்பாய் இருக்க, வாழையடி வாழையாக விபச்சாரம் செய்ய ஒரு பெண்குழந்தை தேடும் விபசார பெண், பத்து வயதே நிரம்பிய சுர்சுரியை விபச்சாரத்தில் நுழைக்க முயற்சிப்பவன், இந்த சிறுவர்களிடமே சரக்கு வாங்கிக் குடிக்கும் மருத்துவமனை வார்டு பாய் ( முனிசிபாலிட்டியின் அம்மாவை கண்டுபிடிப்பதாக சொல்லி ) என்று சராசரியான அவலங்களோடு ஓடும் காட்சி, இந்தியாவின் நிதித் தலைமையகமாக இருக்கும் மும்பையின் அழுக்கு நிமிடங்களை யதார்த்தமாக நிறைத்து விடுகிறது. இறுதிக் காட்சியில் இந்த குழந்தை, தந்தையாலேயே கற்பழிக்கப் பட்ட, அந்த கருவை சுமந்து பெற்ற ஒரு பெண்ணுடையது என்று கதை முடியும் பொழுது, ஆங்காங்கே பெண் அவலங்களை பேசும் இந்தப் படம், உரக்கப் பேசி முடிகிறது.

கனமான நெஞ்சோடு வெளியில் வருபவர்கள் பாராட்ட தவறாத ஒன்று இந்தப் படத்தில் சிறார்களின் நடிப்பும் அவர்களுடைய வசனங்களும். இசை பல ஹிந்திப் படங்களை நினைவு படுத்துகிறது தொய்வு இருக்கிறது. அஜயன் வின்சென்ட் எந்த ஒரு கோணத்திலும் இந்த பதிவுகள் SULDOGMILLIONAIERஐ நினைவு படுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார், அந்த படம் சுடப் பட்ட பல இடங்களில் இந்தக் கதை நகர்ந்தாலும், காட்சி கோணங்களையும், ஒளி அமைப்பையும் நேர்ந்து செய்ததிற்கு அவருக்கு குட்டிகரணம் போட்டு கைதட்டுகிறோம். இர்பான் கமல் இயக்கிய முதல் படம் என்பது தெரிகிறது ஆனாலும் வாழ்த்துக்கள் - எதுக்கு ?? - இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்ததர்க்கு.

புதிய பாதையில் பார்த்திபனும், பணக்காரனில் ரஜினியும் சொல்ல நினைத்ததும் இதுதான் - THANKS MAA.

Monday, April 5, 2010

வாங்க தேசத்ரோகம் பண்ணலாம்

என்னடா டி குடிக்க கூப்டுற மாதிரி. செத்து செத்து வெளையாடலாம் ஸ்டைல்ல கூப்டுற ......
ஒரு மலினப்பட்ட மனிதனின் மட்ட ரக பதிவு தொலைக்காட்சியில் ஒளிவரும்பொழுது, நானும் உட்பட மறைக்கப் பட்ட அந்த பெண்ணின் முகத்தை பார்க்க துடித்தோம். உங்கள சொல்லலீங்க, அப்படி பன்னவுங்கள மட்டும்தான் சொன்னேன். இந்த நெலமைல உங்கள யாரவது நல்லது பண்ண கூப்ட போயிடவா போறீங்க . அதான் ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தேசதுரோகம் செய்ய கூப்ட்டேன்....

தேவையான பொருட்கள்
தேச துரோகம் செய்ய, துப்பாக்கி, BOMB இப்படி எந்த ஆயுதங்களும் தேவை இல்லை, தப்பான விஷயத்த சொல்ல எந்த ஊடகமும் வேண்டாம், இவ்வளவு ஏன், கண்டத எழுத பேனா பென்சில் பேப்பர் கூட வேண்டாம், மத்தவுங்கல்ட்ட நீங்க பேச கூட வேண்டாம். நமக்கென்ன நாடு நாசமா போகட்டும்னு ஒரு சிந்தனை மட்டும் இருந்தா போதும். நான் ரெடி..... நீங்க ரெடியா ?????  
இதுல ரொம்ப சிறப்பம்சம் இந்த தேசதுரோகங்கள் செய்யும் போது உங்கள சட்டம் ஒன்னும் பண்ணாது. நீங்க தைரியமா, ஜாலியா இந்த தேச துரோகங்கள பண்ணலாம். செய்யும் போது உங்களுக்கும் உறுத்தாது மத்தவுங்களுக்கும் வலிக்காது. இதுக்கெலாம் மேல சமயங்களில் நம்பிக்கை இல்லாத, கடவுள் நம்பிக்கை இல்லாத - நாடு என்ற குறிக்கோளுடன் வாழும் நாத்திகர்கள்( ??) கூட செய்யலாம்.

செய்முறை விளக்கம் 
காலைல எழுந்துரிசுடீன்களா, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், இப்போ என்ன பண்ணுங்க ப்ருஷ்ள பேஸ்ட் தடவரதுக்கு முன்னாடியே அந்த வாஸ்பாஸின், கொலாய தெறந்து விடுங்க. தண்ணி கொட்டுதா.. ஓகே .. இப்போ பல்லு தேச்சு முடிக்கிற வரைக்கும் அத அடைக்கவே கூடாது சரியா. முடிஞ்சா பல்லு தேச்சதுக்கு அப்புறம் ஒரு ஒரு நிமிஷம் உங்க அழகான முகத்த கண்ணாடில பாப்பீங்கள்ள அதுவரைக்கும் கூட அதுல தண்ணி கொட்டட்டும். அடுத்து பாத்ரூம் வெயிட் வெயிட்...அந்த டிவி ஆண் பண்ணீங்களா ம்ம்ம்ம் ரேடியோ இல்ல டிவி அதுல பாட்டு கேட்டாதான நம்ம திட்டம் நிறைவடையும். இப்போ அந்த டிவி ஓடட்டும், திரும்ப குளியல்அறைக்குப் போங்க தொறதொரன்னு தண்ணிய தொறந்து விடுங்க அப்புறமா அதுக்கு நேர பக்கெட் வைங்க.. இல்ல இல்ல மொதல்ல தண்ணிய தொரக்கனும் அப்பறம்தான் பக்கெட். குளிக்குது ரோசா நாத்து .. டங்..குடங் பாடிக்கிட்டே குளிங்க ..எவ்ளோ நேரமா???.. ஒரு அஞ்சு, ஆறு பக்கெட் தண்ணி, நல்லா குளிக்க ரெண்டு பக்கெட் போதும் இன்னொரு பக்கெட்ல துணி துவைக்கலாம். கூடுதல் ரெண்டு பக்கெட் நீங்க அந்த தண்ணியோட சுகத்துல மெய்மறந்து குளிக்கிரீங்கள்ள அதுக்கு.
இப்போ துணிமணி உடுத்தியாச்சா. (வீட்டு) அம்மா சுட்ட இட்லியோ தோசையோ நல்ல மென்னு முழுங்கிட்டு உங்களுக்கு தேவையானத விட அதிகமா பிடிச்சு வச்ச குடிதன்னிலேந்து ஒரு சொம்பு தண்ணி எடுத்து வெறும் ஒரு டம்ளர் தண்ணி மட்டும் குடிசுடீன்களா ?..இப்போ இந்த பாக்கி சொம்பு தண்ணிய அப்படியே தூக்கி கீழ ஊத்திடுங்க.

மதியம் கொட்டிக்க கட்டிக்கிட்ட சோத்து டப்பாவ மறந்துட்டு போய் வண்டி ஸ்டார்ட் பண்ணுங்க .. இப்போ அப்படியே வண்டிய இக்நிஷன்ல வச்சுகிட்டு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் சாயங்காலம் எப்ப வரணும், நேத்து ராத்திரி விட்டுப் போன விஷயம், வரும் போது என்ன வாங்கிட்டு வரணும், உங்க மேலாளர் பத்தி ரெண்டு வசவு எல்லாம் முடிஞ்சுதா.. இப்போ வண்டிய ஓட்டுங்க.... சாப்பாட்டு டப்பாவா??, பொறுங்க பாதி தூரம் போயிட்டு திரும்ப வந்து எடுத்துக்குங்க. நமக்கென்ன அதான் நம்ம எரிநெய்க்கு.. அதான் பெட்ரோல்க்கு காசு குடுக்குரோம்ல. போற வழில சிக்னல்ல வண்டி அனைக்காதீங்க மத்தவுங்க என்ன அணைக்கவா செய்றாங்க? நீங்க மட்டும் பெரிய பெட்ரோல் மிச்சம் பிடிக்கப் போறீங்க

அலுவலகம் வந்துடீங்களா இப்போ நேத்து வீட்டுக்கு போகும் பொழுது ஞாபகமா மானிடர மட்டும் அமத்திட்டு போய் இருந்தீங்கள்ள இப்போ அத மட்டும் ஆன் பண்ணிட்டு வேலையப் பாருங்க. ஹ்ம்ம் டீ குடிக்கப் போனா கூட மானிடர அமத்தக் கூடாது. என்னது உங்களுக்கு தெரியுமா ?. அப்படிதான் முன்னாடியே பண்றீங்களா ?? நல்ல புள்ளை. போகும் போது அந்த செல்போன சார்ஜ்ல போட்டுருந்தீங்கள்ள அதையும் கைல எடுத்துக்கோங்க இல்ல இல்ல அதையும் அமத்த வேண்டாம் அப்படியே விட்ட்ரவும். வீட்ல காலைல போட்ட டிவிய ரீமொட்டாலதான அமத்துநீங்க, அதோட ஸ்விட்ச அமத்தலேள்ள - அதான எனக்கு ஒரு நிமிஷம் பகீர்ன்றுச்சு..
அடுத்து டீ கடைல சூட பஜ்ஜி ரெடியா இருக்கா? வாங்கி ரெண்டு உள்ள விடுங்க. அப்படியே தன்னை மறக்கும் அந்த சுவையில் அந்த கைல இருக்குற பேப்பர தூக்கி கீழ போடுங்க. குப்ப தொட்டிஎல்லாம் தேடி உங்க பொன்னான நேரத்த வீணடிக்க வேண்டாம். இல்லேன்னா அந்த கடைக்காரர்கிட்ட வைக்க சொல்லி கேக்கக் கூட வேண்டாம். அடுத்து அந்த புதுசா வந்துருக்க வெளிநாட்டு சிப்ஸ் பாக்கெட் அதையும் வாங்கி கொரிசுட்டு அப்படியே வீசுங்க, அந்த பிளாஸ்டிக் டீ கப்பையும் அதே முறையில் துல்லியமாக எறியவும், முடிந்தால் மனதில் மாரடோனவை உருவகம் செய்து கொண்டு அந்த கப்பை நடு ரோட்டுக்கு எத்தி விடவும். இங்க புகைப்பவர்களுக்கான சிறப்புக் குறிப்பு என்னது பெண்களுக்குமான்னா கேக்குறீங்க ??? ஆமாங்க. அதான் பெண்ணுரிமை  
 இப்போ ஒரு தம்ம வாங்கி பத்த வச்சுட்டு விடுங்க எதையா ? .பொகயத்தான்.... சரியா அடுத்தவன் நிக்கிற எடமா பாத்து புகை விடனும். அவ்ளோதாங்க இத தொடர்ச்சியா ஒரு மாசம் முயற்சி பண்ணீங்கன்ன போதும். நல்ல பலன் கிடைக்கும்.  
 என்னாது இதத்தான் பல வருசமா பண்றீங்களா. தலைவா உங்க நம்பெர பின்னூட்டத்துல போட்டுட்டு போங்க.ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் தலைவர் பதவிக்கு ஆள் தேடுகிறோம்


குறிப்பு: அதிநூதனமாக தேசத்ரோகம் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

புரட்சி என்பது ஆயுதம் ஏந்தி போராடுவது அல்ல, ஆயுதம் ஏந்த வைப்பது, போராட வைப்பது கூட இல்லை, சிந்திப்பதும், சிந்திக்க வைப்பதுமே -  சே

Wednesday, March 31, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 4

எல்லா மொழியிலும், சமுதாய கலாசார மற்று சில காரணங்களினால், வேற்று மொழி வார்த்தைகள் கலந்து விடுவது உண்டு. எந்த மொழியும் இதற்க்கு விதி விலக்கல்ல. அந்தந்த மொழிக்கென்ற தனித் தன்மையை, கட்டமைப்புகளை, இலக்கணத்தை, இந்த கலப்பின் காரணியாக எந்த மொழியும் சிதைத்து கொள்வது அல்ல, ஆங்கிலத்தைத் தவிர. இந்த முறையில் ஆங்கிலத்தில் உள்ள பெருவாரியான வார்த்தைகள் பிரெஞ்சு சார்ந்தவை, இலக்கணம் பெருவாரியாக லடினம் சார்ந்தவை, அதன் ஏனைய கட்டமைப்புகள் பெரிதும் ஜேர்மனிய மற்றும் பழைய நோர்ச்க் மொழியின் அடிப்படையில் அமைந்தவை, ஆங்கிலப் பெயர் பட்டியல் ரோமானிய வரலாற்றை சார்ந்தது, அறிவியல் சார்ந்த பெயர் பட்டியல் கிரேக்க மொழியை தழுவி இருக்கும். இது சரியா? தவற? என்பதை விட முக்கியம், இதில் ஆங்கிலம் எந்த மொழியின் அடிப்படையில், அல்லது ஆங்கிலதிர்க்கான கட்டமைப்பு எது? . இன்று வரை அப்படி எதுவுமே இல்லை. ஒரு மூலத்தை அல்லது வேர்போருளை நிறுவ செய்யப்பட்ட முயற்சிகள் ( GREAT VOWEL SHIFT, ANGLISIZING, SPELLING REFORMS ) அனைத்துமே தோல்வியில் முடிவடைந்தன. இந்த முயற்சிகள் கூட கூடுமான வரையில் ஆங்கிலம் இந்த மொழிகளில் வாங்கிய கடன்களை திரை மறைவிற்கு கொண்டு செல்லும் முயற்சியாக முடிவடைந்தன.

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்
தீவு என்ற சொல்லிற்கான ஆங்கில சொல் - ISLAND. சில நூறு ஆண்டுகள் முன்வரை தொன்மையான ஆங்கில சொல்- IGLAND, இதற்கான பொருளுடன் புழக்கத்தில் இருந்தது.  லதினத்தில் INSULA என்பது தீவு என்று பொருள் தரும் சொல்லாகும். இடைப்பட்ட ஆங்கில மொழிக் காலங்களில் IGLAND சொல்லை லாடின INSULA சொல்லுடன் தொடர்பு படுத்த INSULAவில் மூன்றாம் இடத்தில இருந்த 'S'ஐ எடுத்து IGLANDஇல் இரண்டாம் இடத்தில சேர்த்தனர். உச்சரிப்பு சீலம் காரணமாக இரண்டாம் இடத்தில உள்ள 'S' உச்சரிப்பில் மௌனமாக்கப்பட்டது. இது இன்று நமக்கு விதியாக இதன் வரலாற்று காரணிகள் படிப்பிக்க படாமலே கற்பிக்கப் படுகிறது. DETTE என்ற தொல்லாங்கில சொல்லில் B நுழைக்கப் பட்டு அதை இலத்தின DEBITUM சொல்லுக்கு தொடர்பு படுத்த முயற்சி செய்ததும், DEBT ஆனது. இன்றும் இந்த DEBT சொல்லை நாம், தொல்லாங்கில சொல்லின் உச்சரிப்புடந்தான் பயன்படுத்துகிறோம்.

மொழியின் சொல் பயன்பாடு ஒவ்வொரு காலத்திலும் ஒரு நிலையில் இருக்கும், வள்ளுவர் எழுதிய திருக்குறள் படிக்க நமக்கு ஒரு விரிவுரை தேவைப்படுகிறது. பரிமேல் அழகர் விரிவுரைக்கே இன்னொரு விரிவுரை தேவைப் படும் நிலையில் இருக்கிறோம். ஆயினும் நமது இலக்கணங்கள், நமது சொற்களை சிதைக்கும் நிலைக்கு நாம் (இன்னும்) செல்லவில்லை. எத்தனையோ பழைய சொற்களை தொலைத்து விட்டோம், இதே வேலையில் பல புதிய சொற்களை பயிர் செய்யவும் நாம் தவறவில்லை. ஜன்னல், சன்னல், சாளரம் இவை மூன்றுமே நமக்கு பழக்கமான சொற்களே இதில் சாளரம் மட்டுமே தமிழ். ஜன்னலுக்காய் நாம் சாளரத்தை மாற்றி அமைக்கவில்லை. மாறாக ஜன்னலை, சன்னலாய் தமிழ்படுத்தி இருக்கிறோம். இந்த சொற்களின், உச்சரிப்பு, இலக்கணம், பயன்பாடு எதையுமே நாம் சிதைத்து விட வில்லை.

ஆறிரண்டு திங்கள்

JANUARIE            JULIE
FEBRAURIE          AUGUST                      
MARCHE          SEPTEMBRE
APRIL  OCTOBRE / OCTOMBRE
MAI              NOVEMBRE
JUIN             DECEMBRE
இப்படிதான் நூறு ஆண்டுகள் முன்புவரை கூட ஆங்கில மாதங்கள் எழுதப் பட்டு வந்தன. இவை அனைத்துமே ரோமானிய சொற்கள். உச்சரிப்பிர்க்காய் எழுத்துக்களை மாற்றி அமைக்கும் முறை ஆங்கிலத்தில் மட்டுமே உண்டு. இது நாம் முதல் பகுதியில் கதைத்த, சுதந்திரம் என்ற பெயரில் வழங்கிய தான்தோன்றித் தனத்தின் விளைவு மட்டுமே. தழுவலான அல்லது ஒரு செயற்கையான உச்சரிப்பு புகுத்தல் காரணமாக இந்த மாதத்திற்கான பெயர்களின் எழுத்துக்கள் மாற்றி அமைக்கப்பட்டு, நம் கையில் கொடுக்கப் பட்டு இருக்கிறது. இதை சூழலுக்கு ஏற்ற வகையில் மற்றம் கொள்தல் என்று மார்தட்டி கொள்ளலாம். ஆயினும் இதன் உண்மை, சிதைவு என்பது வெகு கண்கூடு. இந்த சிரமத்தை இன்னும் அதிகமாக்க இன்றைய ஆங்கிலேயே பட்டறைகள் கைகொண்டுள்ள ஆயுதம் - நவீனமயமாக்கல். குறுஞ்செய்திகளின் மேலோங்கு பொருளாக வார்த்தைகள் சங்கு நெரித்து கொள்ளப் படுகிறது.

HOW ARE YOU - "OW`W`U "
I WILL SEE YOU LATER - " I LL C U L8R"
Will Be right BAck - " BRB "  என்று நீட்டி முழக்கி கொண்டே போகலாம் .

இதே காலத்தில் வேற்று மொழிகளில் உள்ள முழு சொற்றோற்றோடர்களை அப்படியே எடுத்து பயன்படுத்துதல் இன்னும் சிக்கலை இடியாப்பம் ஆக்கி விடுகிறது.

KUDOS ( GREEK ), ADIOS AMINGO ( SPANISH ) ASTA LA VISTA

என்று இவைகளும் தொடரும். இதனால எல்லாம் இந்த மொழி அழியுதுன்னு நீங்க சொல்ல முடியாதுன்னு சொல்ற நண்பர்கள் பொறுக்க; அடுத்த பகுதி வரை.

Monday, March 29, 2010

ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு? - சரித்திர இருட்டு

மொதல்ல யாரு தொலசாங்கலோ அவுங்க கிட்ட கேட்டா தெரியும் ( எட்ரா அந்த அருவாள!!! ) .

ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு ?
மார்கோனி, இது கூடவாடா தெரியாது ங்கொய்யா.
குக்லில்மோ மார்கோனி, 25, ஏப்ரல், 1874 இவர் பொலொக்ன, இத்தாலியில் பிறந்தார். 2, ஜூன் 1896 அன்று ரேடியோவை தன் கண்டுபிடிப்பாக, தனது சிந்தனையின் காபுரிமைக்காய் ஆங்கிலேய காப்புரிமை சட்டத்தின்[பதிவு எண் - 12, 309 ] படி பிரிட்டனில் பதிந்தார். அமெரிக்காவிலும் பதிந்தார். 1901 ஆம் ஆண்டு மர்கோனியின் ஒரு சோதனைக்கூடத்திலிருந்து ஒரு தொலைதூண்டுதல் ஒலி மூலமாய் ( இன்னும் ரேடியோ முளுமையடாயாத நிலை ) அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வேல்டிடம் இருந்து ஏழாம் எட்வர்ட்க்கு அனுப்ப பட்டதாய் ஒரு வாழ்த்து செய்தி அனுப்ப பட்டது. அதன் பின் 1909ஆம் ஆண்டின், ரேடியோயவை கண்டுபிடிததற்காய, இயற்பியலுக்கான நோபெல் பரிசு இவருக்கு வழங்கப் பட்டது. 1912 இல் கடலுக்குள் மூழ்கிய TITANIC கப்பலிலிருந்து காப்பாற்ற பட்டவர்கள் நன்றி பாராட்ட ஒருவர் உண்டு என்றால் அது மார்கோனி மட்டுமே என்ற புகழுடன் மார்கோனி இன்றும் நமது புத்தகங்களில் ரேடியோவின் தந்தையாக இருந்து வருகிறார்.

அது சேரி... ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு ???
என்னடா வம்பா போச்சு " கால்ல வர கத கேட்டு சோனியாவும் ராகுலும் இந்தியர்கலல்ன மாதிரி போச்சு. நிகோல டெஸ்லா, இந்தப் பெயரை இதுதான் நீங்கள் முதல் முறையாக எதிர்கொண்டிருபீர்கள். 10, ஜூலை, 1856 ஆம் ஆண்டு ச்மிஜன் ஆஸ்திரியாவில் பிறந்தார் இந்த செர்பியர். 1882ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்று, 1884 பின் ஆம் ஆண்டு இவர் எடிசனுடன் பணிபுரிய அமெரிக்க வந்தேருகிறார். ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி நிறைவு செய்தால், 50,000 அமெரிக்க டாலர்கள் தருவதாய் சொல்லி, எடிசன், அப்பறம் பிம்பிளிக்கிபிளாக்கி சொல்லி விடுகிறார். 1886 இல் எடிசொனிடம் இருந்து விலகி சுயமாய் ஒரு தொழில்பட்டறையும் ஆராய்ச்சியும் தொடர்கிறார். கூலிவேலையும் செய்கிறார், தனுடைய கண்டுபிடிப்புகளுக்கு பணம் சேர்கிறார். 1895 இல் ரேடியோவை ஒலி நீட்சி இயக்க தத்துவத்தை நிரூபிக்கிறார். மார்கோனி காப்புரிமைக்கு பதிந்த சிந்தனையின் அதே இயக்க தத்துவம் இது என்பது குறிப்பிட தக்கது.

என்னங்கட சொல்றீங்க
இன்னும் ஒரு படி மேல் போய் மார்கோனி பதிந்த காப்புரிமை பத்திரத்தில் அவர் பயபடுதியதாக சொல்லப்படும் அலைவரிசை சுருள் ( COIL) - டேஸ்லCOIL, ஆண்டேனவும்தான். 1915இல் டேஸ்ல மார்கோனி பயன்படுத்தியது தன்னுடைய சிந்தனையே என்று கோரி வழக்கு தொடுக்கிறார். போதிய பண வசதி இல்லாமையால் பல முறைகள் இந்த வழக்கு கை விடப்பட்டு, டேஸ்லாவால், பல முறை மீண்டும் பதியப் படுகிறது. இறுதியில் 1943இல் அமெரிக்க நீதி மன்றம் டேஸ்லவை ரேடியோவின் கண்டுபிடிப்பிற்கு உரிமை படுத்துகிறது. இந்த தீர்ப்பு வரும் பொழுது டேஸ்ல இந்த உலகில் இல்லை. அதே வருடம் ஜனவரி 7ஆம் தேதி டேஸ்ல இறந்துவிட்டார் என்பது வருத்தமான விஷயம். இன்று நம் பயன்பாட்டில் இருக்கும் எந்த ஒரு நவீன சாதனமோ அதில் ஒரு புள்ளியாவது டேஸ்ல கை பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  இயற்பியலின் எல்லா கோட்பாடுகளையும் டேஸ்ல ஆராய்ந்தார். மின்காந்தவியல்( ELECTRO MAGNETISM ), காந்தஇயக்கதத்துவம் ( ELCTROMECHANICAL ), அணு இயற்பியல் (NUCLEAR PHYSICS ), ஒலித்தூண்டல், ராடார், தொலைஇயக்கமாட்சி( TELEFORCE ) , மாற்றுமின்சாரம்( ALTERNATE CURRENT ) , புவிஈர்ப்பு தத்துவம் ( GRAVITY ), என்று இயற்பியலின் எந்த திசை நோக்கி நடந்தாலும் அங்கு ஒரு கைப்பிடி அளவேனும் டேஸ்ல, நிற்கிறார். 1912இல் ஒரு முறை, 1915இல் முறை உலகறிந்து நோபெளுக்கு பரிந்துரை செய்யப் பட்ட டேஸ்லவிற்கு, இன்று வரை நோபெல் கிடைக்காதது அளப்பெரும் வியப்பு

இப்போதான் காதலுக்கு மரியாதை மினி கேக்குறாங்க ஏன் இப்பிடில்லாம்??
டேஸ்ல மேலும் தன்னுடைய ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டிருந்த வேளைகளில் மார்கோனி அந்த சிந்தனையை சந்தையிட்டு மிகப் பெரும் பணம் ஈட்டினார். பிறப்பினால் பணக்காரர், அதன் பின் தொழில் முறை பணக்காரர், இது மட்டுமல்லாது இவருடைய தொழிற்பேட்டைகளில் முதலீடு செய்தவருடைய பணம், என்று டேச்லவுக்கு எங்கு திரும்பினாலும் பணம் கட்டிய கோட்டை நுழைவாயில் மறுத்தது, இதனுடன் போராட என்பதை விட, அன்றாட வாழ்விற்கே டேஸ்ல கை ஏந்தும் நிலையில் இருந்தார் என்பது உண்மை.

டேஸ்ல ஒரு செர்பியர் என்பது அன்றைய காலத்திற்கு, அவரை மறுக்க, மிக போதிய காரணமாக இருந்தது.

உலகு வணங்கிய எடிசனின் எதிர்ப்பு
 
மர்கோனியின் அரசியல் நட்பு, அவர் வகித்த பதவிகள், மேலும் இவை இரண்டும் அவர் பின்னே ஈர்த்த ஊடக தொடர்ப்பு.

ஒன்றோடுன்று தொடர்புடைய புத்தக பதிவர்கள், தான் ஒரு முறை பதிவு செய்ததை மாற்றி அமைக்கும் தேவை இன்றி இன்று வரை அதை நமக்கு படிப்பித்து வருகிறார்கள்.

HISTORIES are made and Written, and its Obsolete if not re-written.

Wednesday, March 24, 2010

நட்டரங் - மராத்தி - திரைவிமர்சனம்

எல்லா மொழி திரைப்படங்களுக்கும், இன்று தமிழில் விமர்சனங்கள் படிக்கக் கிடைக்கிறது. தமிழைத், தவிர ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஸ்பானிஷ், கொரியன், ஜெர்மன் ஏன் இன்னும் பெங்காலிக்கு கூட தமிழில் விமர்சனங்கள் கிடைக்கின்றன. இதில் ஒரே படத்திற்கு பல பேர் எழுதிய விமர்சனங்கள் கூட படிக்கக் கிடைக்கும். இது வரை ஒரு மாரட்டிய மொழி திரைபடத்திற்கு யாரும் விமர்சனம் எழுதிப் பார்த்ததில்லை. இது முதல் முயச்சி; எனக்கு தெரிந்தவரை. இல்லை என்று மறுப்பவர்கள் கமெண்ட்ஸ் குட்டிவிட்டுப் போகவும்.
அவதாரும் 3-முட்டாள்களும், இந்தியா முழுவதும் திரைகளை நிறைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் " ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்று உண்டோ ". என்று இந்த மாராத்திய திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரன் திரைப்பட வில்லன் அதுல் குல்கர்னியின் மிகச் சிறப்பான நடிப்பில் zee டாக்கீஸ் தயாரிப்பில், இந்தப் படம் நாடகம் அதன் கலைங்கர்கள் பற்றிய மிக அழகான பதிவு.

குணா ( அதுல் குல்கர்னி ) , கட்டு மஸ்தான இந்த விவசாயிக்கு நாடகங்களில் ராஜா வேஷத்தில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது கனவு. சேமிப்பிலாமல் - நாடகங்கள் பார்க்கும் இந்த கிராமவாசி  சில காலத்திற்குப் பிறகு தமாஷா வகை நாடகங்களில் நடிக்கவும் ஆரம்பிக்கிறான். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் நேரத்தில் ஒரு கேள்வியை/ சவாலை  எதிர் கொள்கிறான், இப்படி ஆணாக இருந்து ஆணாக நடிக்கிராயே, ஒரு திருநங்கைய ( NACHYA ) நடிக்க முடியுமா என்று சராசரியான ஒரு ஆணின் கேள்வியாக இல்லாமல் ஒரு நாடக காதலனாய் குண எனக்கு நாட்டியம் தெரியாதே என்கிறான். கதை அடுத்த பரிமாணத்தை அடைகிறது.

அந்த நாடக கூட்டத்தை சேர்ந்த ( மிக அழகிய ) பெண் குணாவிற்கு நாட்டியம் சொல்லித் தருகிறாள். இது அல்லாமல் குணா தன்னுடைய மிரட்டலான உடலை இழக்கிறான். கோலம் அழிகிறான். ஒரு நளினமான உடல் தோற்றத்தை அடைய முற்படுகிறான். தன்னை சுற்றி உள்ள பெண்களின் அசைவுகளை பார்த்து பழகவும் செய்கிறான். ஒரு நாள் திருநங்கை கோலத்தில் மேடையேருகிறான் குணா. குணாவின் சகாக்களும் நாடகத்தின் சிறப்பரிந்தவர்களும், அந்த நாடக குழுவை சார்ந்தவர்களும் குணாவைப் பாராட்டி மெச்சுகின்றனர். ஆனால் இப்படி ஒரு வாழ்கை தேவை இல்லை என்று குடும்பம் அவனுக்கு தடையாக இருக்கிறது. ஒரு நீண்ட நாடகப் பயணத்திற்குப் புறப்படும் குணா உறவுகள் தொலைக்கிறான்

குணாவின் பாத்திரம் அந்த நாடககுழுவிர்க்கு வலு சேர்க்கிறது. அந்த நாடக குழு அக்கம்பக்கங்களில் பிரபலமடைகிறது. சாதாரண குழுவாக இருந்த அந்த குழு பல இடங்களுக்கு சென்று நாடகம் நடத்துகிறது. புகழின் உச்சியில் இருக்கும் குணா தன்னுடைய திருநங்கை கோலத்திலேய வாழவும் துவங்குகிறான். அதற்காய் நொந்தும் கொள்கிறான் இடையில் அர்ஜுனன் பத்திரத்தில் மேடை ஏறுகிறான் குணா. இவன் ஒரு திருநங்கை - இவன் அர்ஜுனனாய் நடிக்க கூடாது என்று கலவரப் படுகின்றனர் பாமர ரசிகர்கள், நாடக மேடை தீக்கிரை ஆகிறது. அந்த வேலையில் குணா ஒரு பழைய பகை காரணமாக , அந்த ஊர் பெரிய மனிதாரால் கடத்தப்படுகிறான். ஒரு திருநங்கையாக வன்புணர்ச்சிக்கு ஆளாகிறான். சுயம் அழிகிறான் குணா தான் சேர்த்த பெயர் புகழ் அனைத்தும் கானல்நீராய் கலைகையில் ஊர் திரும்புகிறான். உறவுகள் மறுக்கின்றன. சுற்றமும் மறுக்கிறது. துணையாய் நின்ற நட்பும் கலைகிறது. என்னுடைய அனைத்தும் இந்த நாடகத்தில்தான் தொலைத்தேன், இதிலிருந்துதான் மீட்பேனென்று சூளுரைக்கிறான். இவன் வாழ்கையை தடம் மாற்றிய அந்த நாட்டியக்காரி மட்டும் இவன் துணை நிற்க மீண்டும் அதே பயணத்தை துவங்குகிறான். வெற்றி, சுபம்.

வடஇந்தியாவில் முன்னமே தனக்கென்று ஒரு அடையாளம், ஒரு முத்திரை வைத்திற்கும் அதுல் குல்கர்னி, இந்த படத்தின் மூலம் இன்னொரு நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டுஇருக்கிறார். CASTWAY - படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக TOM HANKS பக்தர்களாகி விடுவார்கள், அவருடைய உடல் எடையை கூட்டி , குறைத்து, கூட்டி என்ற உழைப்பிற்காக. அதன் பின் உலகெங்கும் இதை போல் முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தில் அதுல் குல்கர்னி ஒரு சராசரியான கட்டுமஸ்தான விவசாயியின் உடலையும் ஒரு நாடக திருநங்கையின் உடலையும் தத்ரூபமாக காணத்தந்து நிறைவு செய்கிறார். ஒரு திருநங்கையின் உடல் அசைவிலும், ஆணாக இருந்து கொண்டு திருனங்கயாய் வாழும் காட்சிகளிலும், குழப்ப நிலையில் நம்மையும் கட்டி கொண்டு அழுதுவிடுகிறார். தன்னுடைய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு இந்த படத்தின் இயக்கத்திலும், காட்சி அமைப்பிலும் இயக்குனர் மகுடம் சூடி இருக்கிறார். இசை - ஒரு கிராமிய இசையின் பாந்ததுடன், மாராத்திய மண்ணின் அனைத்து கிராமிய இசையையும் கலந்து மீட்டி இருக்கிறார். லாவணி வகை நடனப் பாடல் தூள்.

மலையாளத்தின் 'சாந்துபொட்டு' படம் தமிழில் விக்ரம் நடித்து ராஜாவேஷமாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திறிகிறோம். விக்ரமிற்கு நட்ரங் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். எந்தப் படம் பார்பதாயினும் அந்த மொழியின் அறிவு வேண்டும். அதுவும் இந்தவகை கிராமிய மொழிப் படத்திற்கு கண்டிப்பாக தேவை.  ஆனால் நீங்கள் ஒரு நர்சினிமா காதலறேன்றால் இந்தப் படம் உங்களுக்குத்தான் - மொழி ஒரு தடையல்ல.

உங்களுக்கு இந்தப் படத்தின் ஒலித்தட்டு கிடைக்கவில்லைஎன்றாலோ , டோர்றேன்ட்டுகள் கிடைக்காத பட்சத்திலும். இந்த படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், உங்கள் தொடர்புக்கான எண், அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரி பின்னூட்டவும் ( COMMENTS - உங்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் ) , விரைவில் நான் சென்னை வருகையில் இந்தப் படத்தின் ஒரு காட்சி (ஆங்கில SUBTITLEகளுடன் )ஏற்பாடு செய்து, உங்கள் அனைவரையும் சந்திக்க எண்ணுகிறேன்.

Sunday, March 21, 2010

எதிர்நீச்சலும்( படம் ) ஹுசைனும், மொக்கை பகுத்தறிவும்

கண்டிப்பாக நாகேஷ் நடிப்பில் எதிர்நீச்சல் படம் என்னைக் கவர்ந்த ஒரு படம். பாலச்சந்தரின் இவ்வளவு நீண்ட நாள் சினிமா வாழ்விற்கு, இந்த திரைப்படம் ஆணிவேர். இந்தப் படத்தில் நாகேஷ் மிக ஏழையான மாதுவாக, அவருடைய நண்பர் அந்த நாயர் ( முத்துராமன் ). இவர்களுக்கு இடையில் ஒரு காட்சி, மாதுவிற்கு முன்பு மனநலம் பதிக்கப்பட்ட அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க அந்த பெண்ணின் பெற்றோர் பேசிக் கொண்டு இருப்பார்கள். அது காதில் விழுந்த மாது நாயரிடம் சென்று இந்த விஷயத்தைக் கூற, நாயரும் எப்பொழுதும் போல் கொதித்து எழுவான். அவுங்க, என் தலேல அந்தப் பொண்ண கட்டுறதுக்கு முன்னாடி நான் அந்தப் பொண்ண விரும்பிட்டா என்ன ? என்பது போல் இருவரும் பேசிமுடிப்பார்கள். செய்யு.... என்று நாயர் சொல்ல. மாதுவும் களத்தில் இறங்குவான்.
இது நம்மக்கு தெரிந்தது , இனிமேல் சொல்லப் போவதும் தெரிந்ததுதான் இந்நேரம் நீங்களே முடிச்சுப் போட்டு ரெடி ஆயிருபீங்க.
2006 எந்தக் கைகேயி இந்த கலையின் தலைமகனை காட்டுக்குப் போகவேண்டுமாய் வரம் கேட்டால்?
இப்ப சர்ச்சைக்குரிய ஓவியர் ஹுசைன், இந்தியாவை விட்டு தானே வெளியேறி மனம் வெறுத்து கத்தார் செல்கிறார். அங்கு குடிஉரிமை பெற்று விட்டார் என்று நமக்குப் படிக்க கிடைக்கிறது. இன்னும் அஞ்சு வர்ஷதுல இந்த தாத்தாவுக்கு நூறு வயசு. இப்படி தள்ளாத வயசுல தனது மொழியும் சுதந்திரத்தினை கருத்தில் கொண்டு இவர் கத்தார் நாட்டுக்கு செல்கிறாராம். இதுல ஒரே ஒரு மேட்டர் விட்டு போச்சுன்னா இந்த செய்திக்கும் மேல் சொன்ன காட்சிக்கும் உள்ள தொடர்புதான். இன்றுவரை இந்த மனிதர் மீது பல புகார்கள் பதிவு செய்யப் பட்டு இருக்கின்றன. ஈ பீ கோ 153A, 295A, 298, 146, 147 148 என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. இதில் இது வரை பல புகார்கள் ( விசாரிக்கப் படாமலே )தள்ளுபடி செய்யப்பட்டு  செய்யப் பட்டு இருக்கின்றன, இதுவரை பல புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் ஒரு புகாரில் கூட ஹுசைன் தண்டிக்கப் படவில்லை என்பது குறிப்பிட தக்கது. இதுக்கு மேல ஒரு விஷயம் என்னன்னா, நிலுவையில் உள்ள புகார்களை பரிசீலிக்கும் நிலையில் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று நமது சட்ட ஆணையம் சொல்கிறது. இந்த நிலையில் தான் மேல் சொன்ன யுக்தியை ஹுசைன் பயன்படுத்தி இருக்கிறார். அவுங்களா நம்மள தண்டிச்சா சோத்துக்கு, சொத்துக்கு வழி இல்லாம போயிரும், சும்மா என்று கத்தருக்கு கம்பி நீட்டுகிறார் ஹுசைன் என்பது நமக்கு சொல்லப் படாத உண்மை. அது ஏங்க குறிப்பா 2006ல இவரு கத்தார் மொதல்ல ஒரு சாமிய வரஞ்சாறு சும்மா இருந்தாங்க, 2006ல தான இவரு தேசியத் தாயின் உருவத்தை நிர்வாணமாக வரைந்தார். இந்த முறை செமையாக சிக்கிக் கொண்டார். சமய உணர்வுகளை புண்படுத்திய குற்றத்திலிருந்து இவர் நிலை உயர்வு பெற்று தேசிய உணர்வினை புன்படுதியதர்க்காக இவர் மேல் வழக்கு தொடுக்கப் பட்டது. இந்த வழக்கும் மிக கட்சிதடமாக இவருக்கு எதிராக அமைய ஜூட்டானார் ஹுசைன்.

கலை, கலைக்கண்;
ஹுசைன்நின் இயக்கத்தில் வெளியான MEENAXI திரைப் படத்தில், இவரே எழுதிய பாடல் ஒன்று நூற்-உன்-அலா. அந்தப் பாடல் குர்ஆனில் இருந்த எடுக்கப் பட்ட வரிகள் இவை இறைவனை குறிக்கிறது . இவற்றை ஒரு பெண்ணை பற்றி பாடும் வரிகளாக பயன்படுத்தியது தவறு என்று இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. வெளியான அதே வாரத்தில் அந்தப்படம் திரை அரங்குகளில் இருந்து அகற்றப்பட்டது. ஹுசைன் மன்னிப்பு கேட்டார். எப்பவும் போல ஹிந்துக்களுக்கு மட்டும் சகிப்புத் தன்மையை போதிக்கும் ஊடகங்கள் இதை சொல்லும் அவசியம் இல்லையென்று நமக்கு சொல்லவில்லை இதே ஊடகங்கள் மேல் சொன்ன MEENAXI நேரங்களில் வேறு செய்திகளை பாராட்டிக்கொண்டு இருந்தன.

இன்னும் தொக்கி நிற்கும் சில கேள்விகள்
எதிர்ப்பை சந்தித்த தஸ்லிமாவுடன், சல்மான் ரஷ்டியுடன், ஓடி ஒழியும் ஹுசைனை எந்த விதத்தில் ஒப்பிடுகிறது பகுத்தறிவு பந்தல்கள். ? சமயம் சார்ந்த எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டுமா ??
பாரதமாதா படத்தை நிர்வாணமாக வரைந்தது அரசியல் சட்டப் படி ஜாமீன் மறுக்கப் பட்ட குற்றம். ஹிந்து சமயத்தை எப்பவும் போல் ஒதுக்கி விடலாம். தேசிய வரம்பு மீறலுக்கு என்ன செய்யலாம்?. பாரத மாதா என்பது ஹிந்துத்வா என்று சப்பை கட்டு கட்டுவோருக்கு ஒரு தொடுப்பு செய்தி முதன் முதலில் இந்த ஓவியம் வெளியானது MOTHER INDIA என்ற தலைப்பில்.
அதென்ன எப்பவும் சகிப்பு தன்மை ஒரு சாராருக்கு மட்டும் போதிக்கப் படுகிறது இந்த மதசார்பற்ற காங்கிரஸ் நாட்டில் ??
ஒரு நாட்டின் சின்னத்தை ( தேசியமாதாவை ) அவமானம் செய்த ஒருவரை இன்னொரு நாடு ஆதரிக்கிறது என்றால், இதை எப்படி எடுத்துக் கொள்வது ??.
ஒரு நாட்டில் இன்னும் பல புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் இன்னொரு நாட்டில் குடியுரிமை எப்படி கிடைக்கும் ??
குடிஉரிமை இவர்க்கு கிடைக்க வேண்டுமென்று அனைத்து புகார்களும் முன்பு போல் விசாரணை இன்றி தள்ளுபடி செய்யப் பட்டனவா ??

Thursday, March 18, 2010

டாம் மற்றும் ஜெர்ரி`க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


இன்று வயது என்ற வித்யாசம் இல்லாமல் அனைத்து வயதினரையும் கவரும் ஒரு நிகழ்ச்சி உண்டென்றால் அது 'TOM and JERRY'ஆக இருக்கும். கார்டூன் வகை நிகழ்ச்சியை ரசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுடைய எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களில், இந்த இரடையர் நிச்சயமாக இருப்பார்கள். இந்த இரட்டையர்களுக்கு இன்று வயது 70. வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க.


HAPPY BIRTHDAY TOM and JERRY. LONG LIVE.

TOM and JERRY சில சுவையான குறிப்புகள்

PUSS gets the BOOT ( 1939 )என்ற சிறிய கார்டூன் வகை நிகழ்ச்சியில் இந்த இருவரும் அறிமுகப் படுத்தப் பட்டனர். அந்த நிகழ்ச்சியில் சாம்பல் நிற பூனையின் பெயர் JASPER . அன்றைய எலிக்கு பெயர் ஏதும் கிடையாது.

William Hannah, இந்த கதாபாத்திரங்களின் பட்டய இயக்குனர் ஆவார். JOSEPH BARBERA இந்த கதாபாத்திரங்களின் கர்த்தாவும், FRED QUIMBY இதன் கதை ஆசிரியரும் ஆவர். என்பவர் இந்த இரட்டையர்களின் பட்டய தயாரிப்பாளர் ஆவார்.

1941ஆம் ஆண்டு MIDNIGHT SNACK என்ற தொடரில் முதன் முதலில் TOM and JERRY என்று இந்த கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப் பட்டன.  இந்தப் பெயர் HANNAH மற்றும் BARBERRA நடத்திய பெயருக்கான குழுக்களில் இருந்து தேர்வு செய்யப் பட்ட ஒரு பெயர்.

இன்று இரண்டு கால்களில் ( BI PEDAL ) ஓடும், TOM ஆரம்பகாலங்களில், நான்குகால் பாய்ச்சலாகதான் ஓடியது. 1945திற்கு பின்னர் முழுமையாக இரண்டு கால்களிலேய ஓடுகிறது என்பதும் குறிப்பிட தக்கது.


MAMMY என்ற TOMஇன் முதலாளியாக வரும் கதாபாத்திரம் ஆரம்ப காலங்கள் முதலே ஒரு கறுப்பின பெண்ணாகதான் சித்தரிக்கப் பட்டு வருகிறது. 1965 கலீல் இந்த கதாபாத்திரம் ஒரு மெல்லிய இளம் வெள்ளைப் பெண்ணாகவும், தடித்த நடுவயது பெண்ணாகவும் இருந்து, கடந்த பத்து வருடங்களில் நமக்கு காண கிடைப்பத்து மிகவும் தொன்மையான அந்த தடித்த கறுப்பின MAMMYஎன்பதும் குறிப்பிட தக்கது. இந்த தொடரில் இன்று வரை வசனங்கள் உள்ள கதாபாத்திரம் இந்த ' MAMMY' மட்டும்தான் என்பது குறிப்பிட தக்கது. இன்று SATELITE CHANNELகளின் இம்சையில் TOM and JERRY பேசுவது,  இந்த நிக்ழிசியின் சுவாரஸ்யத்தை குறைத்து விடுகிறது.
 
COMICS, துவங்கிVIDEO GAMES, PLAY STATION,  என்று குழந்தைகள் சார்ந்த பென்சில் ரப்பர், பள்ளிக்கூட பைகள் என்று எல்லாத்திலுமே நமக்கு TOM and JERRY காணக்கிடைக்கிறது.
 
இந்த தொடரில் ஒரு தடித்த BULLDOGவகை நாய் பார்த்திருப்போம், அந்த நாயின் பெயர் SPIKE. TOMஇன் நண்பனாய் ஒரு கருப்பு பூனை பார்த்திருப்போம் அதன் பெயர் BUTCH.
 
உலகின் பிரபலமான FORD MONDEOவகை கார்களின், விளம்பரதிற்க்காக 2003ஆம் ஆண்டு ஒரு விளம்பரத்தில் TOM and JERRYதோன்றினர்.  
 
மீண்டும் ஒரு முறை HAPPY BIRTHDAY TOM and JERRY. LONG LIVE.

Tuesday, March 16, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 3

நான் சொல்றத நம்பலேன்ன பரவா இல்லைங்க பெர்னாட் ஷா( GEORGE BERNARD SHAW ), மிகப் பிரபலமான நாடக ஆசிரியர், மற்றும் மிகச் சிறப்பான பேச்சாளர். இன்று வரை இலக்கியத்திற்கான நோபெல் பரிசும்( 1925 ) பெற்று, ஆஸ்காரும் ( 1938 ) பெற்ற ஒரே மனிதர்.  இவர் தன்னுடைய சொத்துப் பத்திரத்தில், தன்னுடைய செல்வங்களில் இருந்து ஒரு பகுதியை, இன்றைய மதிப்பிற்கு - 3,67,233.13 பவுண்ட்களை ஆங்கிலத்தின் மேம்பாட்டிற்கு குறிப்பாக, தரமான ஆங்கில எழுத்துக்களை கண்டுபிடிக்க செலவிடும் படி ஒதுக்கி இருந்தார். ஆனால் அதிலிருந்து வெறும் 8600.00 பவுண்ட்கள் மட்டுமே இந்த பணிக்கு செலவிடப் பட்டது என்பது வருத்தமே. இவர் ஆங்கிலத்தைப் பற்றி சொன்ன ஒரு நகைசுவையான விஷயம். ஆங்கிலத்தில் FISH வார்த்தையை GHOTI உச்சரிக்க முடியுமா ?? . முடியும் எப்படி.

ENOUGH -  இல் 'GH' என்பது 'F' உச்சரிப்பைத் தரும்.
WOMEN -   இல் 'O என்பது 'I' உச்சரிப்பைத் தரும்.
NATION - இல் 'TI' என்பது 'SH' உச்சரிப்பைத் தரும்.  என்று நகைசுவையாக தன்னுடைய ஆங்கில மொழிக்கான காதலை நொந்து கொண்டார்.

என்ன கொடுமை சார் இது. ஏன் இப்படி ??? என்று நீங்கள் கேட்பவரானால். அதற்க்கு பதில் வரலாறில் உள்ளது. இன்று உலகிற்கு " ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழிக்கு உதாரனமாக படிக்கப் படும் ஆங்கிலேய வரலாற்றின் உண்மையான முகத்தை காட்டும் பழமொழி என்னவோ " சிவன் சொத்து குல நாசம்" ( சிவன் என்ற இடத்தில நீங்கள் எந்த கடவுளின் பெயரை வேண்டுமானாலும் போட்டுக்குங்க, அப்படியே நீங்க நாத்திகர் என்றாலும் உங்க பெயரையும் போட்டுங்க ) என்பதுதான். வெவரமா சொல்லு நைனா....

ENGLISH IS A BORROWED LANGUAGE.
எந்த மொழியாயினும் சரி பிற மொழி சொற்களின் கடவுகளை அது தவிர்க்கவே முடியாது. பண்பாட்டு மாற்றங்கள் இதை தவிர்க்க முடியாதவைகளாக மாற்றி விடுகின்றன. நான் முன்னமே கூறியது போல் நச் என்பது தமிழ் சொல் அல்ல, இதே போல் 'ஓசி' போன்ற வழக்கிலுள்ள சொற்கள் நல்ல உதாரணம்.  'த்ராட்ட்ல விட்டான்யா' என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறோம் , அதுவும் 'THWART' என்ற ஆங்கில சொல்லின் மருவல்தான். எல்லா மொழிகளிலும் இந்த வகை சொற்கள் இருக்கும், - மிகக் குறைவாக. இந்த வகை வார்த்தைகளும் மாற்றங்களும் நிகழும் பொழுது அந்த மொழிகள் சுயத்தை இழந்து விடுவதில்லை.   ஆனால் அங்கிலதிர்க்கு இவை பொருந்தாது. உலக வரை படத்தின் பெருவாரியான பகுதிகளில் கொலனிய அமர்க்களம் செய்த ஆங்கிலேயர்,  சென்ற ( வென்ற அல்ல) இடத்தில் எல்லாம் அங்குள்ள சில வார்த்தைகளை தனதாக்கி கொள்வர்,

காசு - CASH ஆனது;  கட்டுமரம் - CATTAMARAN; சுருட்டு - CHEEROOT ; கறி - CURRY ஆனது இதில் இன்றுவரை எனக்கு தெரிந்து ஆங்கிலத்தில் மட்டும் 164 மொழிகளில் இருந்து கடவு சொற்கள் இருக்கின்றன. இன்னும் சில வார்த்தைகளை ஏன் இப்படி உச்சரிக்கிறார்கள் என்று விளங்கவே முடியாத அளவிற்கு சிதைத்தே விட்டனர்,  - இந்து சமவெளி நாகரிகர்கள் என்பதைக் குறிக்க HINDOOவாகி அது இன்று HINDUவாக நிற்கிறது. 

இன்னும் இந்த MATTERல வசதிக்கேற்ப விம், சபீனா போட்டு விளக்கினால், இன்றைய தேவாலயங்களில் படிக்கப் படும் திருமண வாசங்களில்( MARRIAGE SERMON ) ஒரு எடுத்துக்காட்டு கிடைக்கும் கிறிஸ்தவ முறை படி மணப்பெண்ணும் மணமகனும் மோதிரம் மாற்றிய பின் அந்த பேராயர் (ஆங்கிலத்தில்) " I NOW PRONOUNCE YOU AS A MAN AND WIFE " என்பார் மீண்டும் படியுங்கள் HUSBAND and WIFE அல்ல MAN and WIFE . HUSBAND என்ற வார்த்தை HUSEBAND  என்ற MIDDLE ENGLISH பழக்கத்தில் இருந்தும், HUSBANDA என்ற OLD ENGLISH பழக்கத்தில் இருந்தும், HUSBONDI - OLD NORSE என்ற ஜெர்மானிய மொழி வழக்கு என்றும் கூறி சமாளித்து வருகிறார்கள்.

மெய்யாலுமே இந்த வார்த்தைகளுக்கு பொருள் மேலாளர் - மேனேஜர் என்ற அடிப்படையில் இருக்கும். அன்றைய கால ஆணாதிக்க சிந்தனை என்று இவற்றை ஒப்புக் கொண்டாலும் இதன் உண்மை இது இரண்டு சமஸ்க்ரித்த வார்த்தைகளின் ஒன்றைந்த பொருள் ஹஸ்த - கை;  பந்தன் - உறவு - பொருள் படும் வார்த்தைகள் HUS BAND`H ஆயின. அட நம்ம தலைவர் படம் " கை கொடுக்கும் கை'தாங்க ".  இந்த வகை வார்த்தைகளை பற்றி பேசுகையில் முதல் பகுதியில் நாம் பேசிய உச்சரிப்பு சுதந்திரம் பற்றிய கருத்தை மறந்து விடக் கூடாது. எழுத்துக்களுக்கு வேண்டிய படி உச்சரிக்கும் சுதந்திரம் வழங்கிய பின்னரும் ஆங்கிலத்தில் போதிய வார்த்தைகள் இன்மையால், இந்த மொழி சென்ற இடத்தில் உள்ள வார்த்தைகளை தனதாக்கும் நிலைக்கு தள்ளப் பட்டது. நாளடைவில் இந்த முறையை நம்பியே ஆங்கிலம் வளரத் தொடங்கி வளர்ச்சி என்ற OPTIMUM நிலை தாண்டி ஆங்கிலம், அழிவை நோக்கி பயணப் படுகிறது என்பது உண்மை.

இந்த தலைப்பில் பகிர்வதற்கு இன்னும் ஒரு பதிவு அளவேனும் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்கும் நீங்கள்( யாரவது ஒருவர்) வேண்டும் என்று COMMENTs சொல்லும் தருவாயில் அவற்றை பதிய தயாராய் இருக்கிறேன்.

Sunday, March 14, 2010

அப்பாடா IPL ஆரம்பிச்சுது, பிரணாப் மகிழ்ச்சி பெருமூச்சு......

                                                                                                                                       12-MARCH-10
நேற்று மதியம் வரை பிரணாப், கண்டிப்பாய் தலைச்சன் புள்ள பிரசவத்திற்கு மிரண்டு காத்திருக்கும் கர்பினியை போல் இருந்திருப்பார். எங்கட இந்த போதாத வயதில் கடைசி கடசியா கெடச்ச நிதி அமைச்சர் பதவியையும் பிடுங்கிடுவாங்கலோன்னு. இனிமே அவர் கவலை பட வேண்டாம். அநேகமாக பிரணாப் எங்காவது ஒரு வெளி நாட்டுப் பயணம் போய் வருவார். இந்த டென்ஷன் குறைய வேண்டாமா. அப்படி என்ன டென்ஷன். எப்பவும் போல வரலாறு முக்கியம் அமைச்சரே.. .. . . .

ஹ்ம்ம் ரெடி ... டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள் சுத்துப்பா .. . . . .
பாகிஸ்தானின் ஆயுதம் ஏந்திய அமைதி தூதுவர் ( சட்டப் படி ஒருவரை தீர்பிற்கு முன் குற்றவாளி என்று கூறுவதும் சட்ட விரோதம். தெரியுமா ? ) அஜ்மல் கசவ் புண்ணியத்தில் நம்ம P.C ( Sonia`s Personal computer இல்லங்க) அதுவரைக்கும் காங்கிரஸ்க்கு இந்தியாவுக்கு நிதி அமைச்சரா,  வரவு செலவு கணக்கு  பாத்துகிட்டு இருந்த இவர, சிவராஜ் பாட்டில் பொரமண்டயில அடிச்சு பத்திவிட்டு, வீடுவிவகார துறை மந்திரியா ஆக்குனாங்க. புரியுது புரியுது இவர பத்திதானே . . .நம்ம தலைவர் கைப்புள்ள இவர பேட்டி எடுத்து தணியா பதிவு போடுவார் இப்போ கதைக்குப் போவோம். அப்ப, சிதம்பரம் பாத்துகிட்டு இருந்த, குமாஸ்தா வேலைய தூக்கி, தன்னுடைய எட்டாம் எட்டுல, இருந்துகிட்டு, வெளயுரவுத் துறை அமைச்சரா, எழாம் எட்டுல சுத்த வேண்டிய உலகத்த சுத்திகினு இருந்த இவருக்கு, நிதி அமைச்சரா, பதவி உயர்வு குடுத்தாங்க. அப்படி என்னங்க இவர் பண்ணிட்டாரு, இவருக்கு இந்த பதவி குடுத்தாங்க. இப்போ ஒரு ஜம்போ கொசுவத்தி சுருள்.... கடைசிகடைசியா இந்தியா, கிரிக்கெட் உலக கோப்பை வாங்கிச்சே அப்ப, அட கூலிக்கு மாரடிக்கிற 20/20 இல்லங்க உண்மையான உலக கோப்பை, 1982 அப்ப இவர்தான் பட்ஜெட் பைய அக்குள்ள வச்சுகினு, குமாஸ்தா வேல பாத்தாராம். 1984 வர்ஷம் உலகத்தின் சிறந்த குமாஸ்த என்று EUROMONEYயால் பாராட்ட பட்டாராம். அதுனால இவர் இப்போ நிதி அமைச்சர். அதற்க்கு இது பதில் அல்லவே... மன்னா.....ரொம்ப நொய்நொய்ங்க கூடாது, இந்த காரணத்தை கண்டு பிடிக்கவே காங்கிரஸ்ல பல தல சொட்டை ஆயிடுச்சு தெரியுமா. இன்னிக்கி இவருக்கு மேல உக்காந்துகினு பிரதமமந்திரியா இருக்குற நம்ம மன்மோகன் சிங்க் அப்ப இவருக்கு கீழ RBI GOVENORரா இருந்தார் தெரியுமா ???.

2009 தேர்தலுக்கு முன்.
தேர்தலை எதிர் கொண்டு இருந்த காங்கிரஸ் அரசுக்கு இது ஒரு முக்கியமான பட்ஜெட்டாக அமைந்தது. நம்ம பிரணாப் முகெர்ஜி காதுல ஒரே ஒரு பட்டுதான் கேட்டுச்சு " திக்கு தெரியாத காட்டில்.. ". நம்ம போன வர்ச குமாஸ்தா சிதம்பரம் வெளியிட்ட, இதுக்கு முந்துன பட்ஜெட்ட தேனிசை தென்றல் தேவா ஸ்டைல்ல, நம்ம ஸ்கூல்ல குறிச்சு குடுத்த கேள்விய மட்டும் படிச்சுட்டு போய் பாஸ் பண்ற மாதிரி பாஸ் பண்ணினார். உலக சந்தையில் பெட்ரோல் விலை சரமாரியாக, பாதிக்கும் கீழ் வீழ்ச்சி அடைந்த நேரம், அப்பவும் நம்ம எல்லாரும் அதே விலையில்தான் பெட்ரோல் வாங்கினோம்

உன்னைப் போல் ஒருவன் பட்ஜெட்
மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துச்சு. 6, ஜூலை, 2009 பிரணாப் திருப்பி ஒரு நிதி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்ட ' AAM ADMI KA' பட்ஜெட் என்று மீடியாக்கள் கொண்டாடின. இன்னும் சரியாய், கொண்டாட வைக்கப்பட்டன. AAM ADMI - COMMON MAN -உன்னைப் போல் ஒருவன்ல தலைவர் சொல்லுவாரே அதே தான். AAM ADMI என்ற பதம் பட்ஜெட்ட்ல ஆறு முறை இருந்தது.

2010 பட்ஜெட்

26, FEB இந்த ஆண்டின் நிதி அறிக்கை பிரணாப் முகெர்ஜி வெளியிட்டார் ( சமர்பித்தார் இல்லை ). சரியாக ரயில்வே பட்ஜெட் சமர்பித்த இரண்டு நாட்களுக்கு பிறகு. ஏகப் பட்டு எதிர்ப்புகள். எதிர் கட்சிகள் வெளி நடப்பு செய்தன. மொத்த பட்ஜெட்டையும் திரும்பப் பெற கோரிக்கைகள் வைக்கப் பட்டன. நம்ம அக்கா ( இன்னும் கல்யாணம் ஆகலேல்ல  ) மம்த்தா பநேர்ஜி என்னோட பட்ஜெட்ல இந்த ஆளு மன்னப் போட்டார்நு காங்கிரஸ் கிளாஸ்மிஸ் கிட்ட கம்ப்ளைன் பண்ணாங்க. பிரதமமந்திரி பதிவிக்காக நம்ம காங்கிரஸ் வடிவமைத்த என்திரன் - மன்மோகன்சிங்க்`கும் இதுல சில கருத்துக்கள்ள எனக்கு உடன் படு இல்லேன்னு சொல்லிட்டார்.

27, 28 FEB இவுங்க அல்லாரும் பொய் சொல்றாங்கபா. மெய்யாலுமே இது நல்ல பட்ஜெட்னு பிரணாப் மண்டி கால் போட்டு அழுதார். ஐயோ நான் இவுங்கள எல்லாம் கேட்டுதான் செஞ்சேன்ன்னு எல்லா டிவி காரங்களையும் கூப்ட்டு சொல்லிட்டார். எதிர்கட்சிகளும் மக்கள் மேல் பயாஆஆஆஆஅந்கர அக்கறையுடன் போராட்டங்கள் பண்ணின.

விளம்பர இடைவெளி - எங்கயோ நமக்கு தெரியாம ஒரு கூட்டம் போடுறாங்க, அதுல ஒரு முடிவு எடுக்குறாங்க. இதுக்கு மேல இதப்பத்தி பேசினா மக்கள் முளிச்சுகுவாங்க. நம்ம எல்லாருக்குமே கஷ்டம். அதானலே வேற படத்த போடுங்கப்பா என்றனர். ஆனாலும் பிரணாப், சிக்கன் குனியா வராமலே குளிரில் நடுங்கினார்.

01, MAR - தெற்கில் நித்யானந்த, வடக்கில் பாம்பு சாமியார் செய்திகள் பல தெர்மா மீட்டர்களை வெடிக்க செய்தன. கண்டிப்பாக இவர்கள் இருவரும் செய்தது கேவலமான விஷயம்தான். தனி மனித ஒழுக்க மீறல்கள், நம்பிக்கை கொலை, ஊருக்கு உபதேசம். தனிமனித ஒழுக்கம், நம்மில் எல்லாரும் மற்றவர்களிடம், அதாவது நமக்கு வலப்பக்கம், இடப்பக்கம், எதிர்புறம், பின்புறம், பக்கத்து வீட்ல உள்ளவுங்ககிட்ட, அடுத்த தெருவுல உள்ளவுங்ககிட்ட, நமக்கு கீழ வேல பாக்குறவுங்ககிட்ட, நமக்கு மேல நின்னு வேல வாங்குறவர்கிட்ட அதாவது நமக்கு வெளில எல்லார் கிட்டயும், நம்ம எதிர்பார்க்கும் ஒரு விஷயம். மீடியாக்களின் எஞ்சிய நேரங்களையும், பக்கங்களையும், நம்ம இந்தியாவின் புராதான உப்மா - பாகிஸ்தான், ஹபிஸ் சயத், தீவிரவாதம், போன்றவை நிறைவு செய்தன.

02, MAR - மேல் சொன்ன செய்திகள்தான். இன்னும் அதிகமாய் பெருங்காயம், வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு புலி மிளகாய் கூட்டப் பட்டன. உலகமே பொருளாதாரம் சீர்குலைந்த நேரத்தில் இந்தியாவை காத்ததாக போற்றப் படும், இதற்க்கு முந்தைய  RBI GOVERNOR Y.V ரெட்டி இந்த பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவிக்கிறார். ஒரு துண்டு செய்தி கூட வரவில்லை. எங்கிருந்தோ ஒரு செய்தி ஊடகத்திற்கு (TV)  மனசாட்சி போதை தெளிய ஒரே ஒரு வரி செய்தியாக வெளியிடுகிறது. திருப்பி பாம்பு சாமியார் டான்ஸ்தான்.

03 MAR அதே பிரியாணி வேற தாழ்ச்ச, பாகிஸ்தான் 'வெளிஉறவு துறை அமைச்சர் பொய் சொல்றார்' செய்தி வெளியிடப்படுகிறது. அது கரெக்ட் இது வரைக்கும் அவுங்க உண்மையே பேசிகிட்டு இருந்தாங்கல்ல !!!!. இன்னும் பிரணாப் கால் முட்டி மோதிகிட்டு இருந்தன.

05 MAR வரை மேல சொன்ன மட்டேற வச்சே தீத்தாச்சு. CD - நெறையா கீறல் விழுந்துருச்சு. புது நிகழ்ச்சி 12 வர்சமா தூங்கிகிட்டு இருந்த `33% பெண்கள் இட ஒதுக்கீடு`, 'காந்தகண் அழகி START the MUSIC' . ஏதோ இந்த மகளிர் தினத்தன்று இத நிறைவேற்றியே தீருவது போல்.

06, 07 MAR - மேல் சொன்ன எல்லாம்.

08, MAR - மகளிர் தின நல்வாழ்த்துக்கள் , முதல் பெண் ஆஸ்கார், அப்பறம் மீத நேரம் பெண் மசோதா.

09, 10, 11,MAR  அதேதான்...

12, MAR - IPL ஆரம்பிச்சுது......பிரணாப் மகிழ்ச்சி பெருமூச்சு...... இனிமேல் பட்ஜெட் துண்டை மறைக்க வேற எதுவும் தேட வேண்டியதில்லை. IPL முடியுறதுக்கு முன்னாடி இத மறந்துருவாங்க. அப்படியே ஞாபகம்வரும் சூழ்நிலை வந்தா வேற நியூஸ் தயாரிப்போம்ல......கத்தி போய் வாழு வந்துது டும் டும் டும் .. நித்தி போய் ரஞ்சி வந்துது டும் டும் டும் , ரஞ்சி போய் பாம்பு வந்துது டும் டும் டும் பாம்பு போய் மசோதா வந்துச்சு டும் டும் டும். மசோதா போய் IPL வந்துச்சு டும் டும் டும்......

Thursday, March 11, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 2

இதற்க்கு முந்திய பதிவில் ஆங்கில எழுத்துக்களில் உச்சரிப்பின் சிறப்புகளை ( ???? ) பற்றி பாத்தோம். இதை படித்த பின் , ஏன் செய்தார்கள் என்ற கேள்வி நம்மை முட்டி இருக்கும். ஒரு எழுத்திற்கு ஒரு உச்சரிப்பு, ஐந்தே ஐந்து எழுத்துக்களை வைத்து கொண்டு அதிகமான வார்த்தைகளை உருவாக்கி விட முடியாது. புது வார்த்தைகளை உருவாக்கும் நோக்கில் இந்த எழுத்துக்களுக்கு தான்தோன்றித் தனமாக உரிமைகள் வழங்கப் பட்டு, வேண்டிய இடத்தில வேண்டிய உச்சரிப்பு எழுப்ப அனுமதி அளிக்கப் பட்டது ( யார்பா அது அங்க யாருன்னு கேக்குறது..... ). ஒரு மொழி வளர மக்களுக்கு எதுவாய், எல்லாப் பொருள்களுக்கும், வார்த்தைகள் தேவை. அதை உருவாக்குவது அந்த மொழியை காலம் ஒத்ததாய், என்றும் வளமயானதாய் வைத்திருக்க உதவும். கணினி, நிரலி, அலைபேசி போன்ற தமிழ் சொற்கள் இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அனால் இந்த காரணத்தை ஆங்கிலம் வென்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதை புரிந்து கொள்ள ஆங்கிலத்தின் வார்த்தைகள் பற்றி பார்ப்போம்.

வார்த்தை தவறிவிட்டாய்............................. மண்ட வலிக்குதடி .............................
ஹிந்தி / சமஸ்க்ரிதம் படிப்பவர்கள் முக்கியமான சிக்கல் போன பதிவில் குறிபிட்டது போல நான்கு க, நான்கு ச, நான்கு தா, நான்கு ட. இந்த வகை எழுத்து அமைப்பு இந்த 'HOMOPHONES' - எனும் வார்த்தை குடும்பங்களை உருவாக்கி விடும் ( மொழிகளிலாவது ஆங்கிலம் குடும்பங்களை உருவாக்குது பாருங்க - பாராட்டனும் ). ஒரே உச்சரிப்பு, அல்லது ஒரே போல் உச்சரிப்பு உள்ள வார்த்தைகள், ஆனால் வேறு வேறு பொருள் தரும், வேறு வேறு எழுத்துக்களை கொண்டு அமைந்திருக்கும். - HOMOPHONE ( சரியா படிங்க சட்ட திருத்தம் 377படி வேற எதாவது படிச்சுர போறீங்க ). இந்த வகை சிக்கல் தமிழிலும் உண்டு [ மரம், மறம் ] [ மழை, மலை ], [ வலி வழி ] [ மனம், மணம் ].  இதை படிக்கையில் இந்த மொழிகளில் ஒரு எழுத்திற்கு ஒரு உச்சரிப்புதான் என்பதை மறந்து விடக் கூடாது. இந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் தனியாக ஒரு அறக் கொயர் நோட்டு முழுக்க எழுதிய கை வலி இன்னும் எனக்கு ஞாபகம் உண்டு.
[ALTAR/ ALTER], [ ARC / ARK ], [ BE/BEE], [ BAND/BANNED], [BERTH/BIRTH ], [ BORED / BOARD ] , [ BEACH / BEECH ], [ BILLED / BUILD ], [ BOUGH / BOW ] , [CIELING / SEALING ], [CANON / CANNON ] . . . .. . . .
[DESSERT / DESERT ] - இதில் எதை பாலைவனத்திற்கு பயன் படுத்துகிறோம் சொல்லுங்க ??. கொஞ்ச நேரம் யோசிசீங்கள்ள, அங்கதான் சந்துரு`ன்ற மானஸ்தன் ........
CENTRE / CENTER - யோசிக்காம சொல்லுங்க இதில் எது மையப் புள்ளியை குறிக்கும் ??...
WEEK / WEAK - இதுல எது பலவீனத்தை குறிக்கும் ....ம்ம்ம்ம்ம்ம் யோசிக்காதீங்க.
எழுத்துக்களுக்கு உச்சரிப்பு சுதந்திரம் வழங்கிய பின்னருமா இப்படி ஒரு நிலை என்று வாய் பிலப்பவர்களுக்கு - படையப்பா சொல்லும் பதில் 'கண்ணா - அங்கே பார் ..... இது சும்மா ட்ரைலர்தான்.. இன்னும் புல் பிக்சர் ( சன் பிக்சர் அல்ல ) பாக்கி இருக்கு' .
HOMOPHONE வகை வார்த்தைகள் உலகில் எந்த மொழியையாவது இந்த அளவிற்கு பதித்திருக்கும் என்றால் அது ஆங்கிலத்தை சொல்லலாம். உலக ஆங்கிலம் என்ற நோக்கில் பார்க்கையில் ஒரு சில வார்த்தைகளுக்கு உச்சரிப்பை வைத்து அதன் எழுத்துகளையே மாற்றி விடும், நிலைமைக்கு ஆங்கிலம் தள்ளப் பட்டு இருக்கிறது. PHONE - FONE ஆகிப் போனது, COLOUR - COLOR ஆகிப் போனது இதற்க்கு முக்கிய காரணம் எழுத்துகளுக்கு வழங்கப் பட்ட தான்தோன்றித் தனமான சுதந்திரம் என்பதை மறுத்து விட முடியாது. அமெரிக்கர்களின் ஆங்கிலேய வெறுப்பும்தான் ( நல்லாதான போய்கிட்டு இருக்கு....... இதென்ன புதுக் கதை ) - இதை வைத்து ஒரு தனி பதிவே போடலாம். அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த வார்த்தை குடும்பங்களில் - HOMONYMS.

HOMONYMS - ஒரு வார்த்தை, ஒரே எழுத்துக்கள் , வேறு வேறு உச்சரிப்பு வேறு வேறு அர்த்தம் ஆங்கிலம் படிக்க வருபவர்களை சாம் அன்டேர்சன் படம் காட்டி பயமுறுத்தும் ஒரு பரிமாணம் என்றால் அது மிகை என்பதற்கு கொஞ்சம்தான் கீழே... மற்ற படி உண்மை.

ADDRESS - முகவரியை குறிக்கும் [ What is your residential Address ? ] , வேறு உச்சரிப்பில் ஒரு பிரச்சனை அணுகுவதைக் குறிக்கும் [ Obama has greatly addre`ssed the melt down issue ]
CRICKET - சச்சின் விளையாடுவது CRI`CKETவெட்டுகிளிக்கும் இதுதான்
CONDUCT - நடாத்துதல், CONDUCT CERTIFICATE - நமது ஒழுகுதலையும் குறிக்கும்.

இதன் அடுத்த படி இந்த வகை வார்த்தைக் குடும்பங்களில் , ஒரு வார்த்தை, ஒரே எழுத்துக்கள், அதே உச்சரிப்பு வேறு வேறு பொருள் . எப்படி ( இன்னுமா படிக்கிறீங்க ?? .

BAR -  மது அருந்தும் இடம், BAR AT LAW - சட்டக் குழுமம், BARRED -  தடை செய்- TMT BAR - கனமான கம்பி.
BANK - வங்கி,  DMK banks upon minority votes...நம்பகத்தன்மை GODAVARI RIVER BANKS - ஆற்று படுகு.

அடுத்தபடியாக JAMESBOND படங்களுக்கு இணையான 'வீராசாமி' போல் ஒரு மேட்டர் - AUTOANTONYM - ஒரே வார்த்தை அதே உச்சரிப்பு வேறு வேறு பொருள், ஒவ்வொவொரு பொருளும் அதன் எதிரமரைப் பொருள் தரும் , தமிழ்ழ சொன்னா சுயமுரண். ( புரிலேள்ள???? எனக்கும்தான்.... ).

AWE என்ற வேரில் இருந்து பிறக்கும் வார்த்தை AWESOME - மிகஅருமை. AWFUL - அருவருக்கத் தக்க

Its our CUSTOM and we follow it.தொன்மையான என்று பொருள் தரும் ; CUSTOM MADE SOLUTION - நேர்த்தியாக புதுமையாக என்று பொருள் தரும்

FAST - RABBIT IS FAST - வேகமாய் நகர்தல்; RABBIT is FAST - அசைய / நகர முடியாமல் கட்டப் பட்டு உள்ளது.

LEFT - HE HAS LEFT - கடந்து செல்தல்; HE HAS LEFT HIS WEALTH BESIDES மீதம் இருத்தல்

இந்த விளங்காப் பொருளுக்கு CONTRANYM/CONTRONYM, ANTAGONYM, JANUS WORDS, ENANTIODROME, SELF ANTONYM என்ற பெயர்களும் பொருந்தும். - நிக்காத நகத்துக்கு நைல் போலிஷ் என்னாதுக்குடா ????.

நம்ம தலைவர் பாடுவது போல் - முரண்பாட்டு மூட்டை நீ ...ENGLISH......வாஜி வாஜி . . . . .

தொடரும் . . . . .