Saturday, June 1, 2013

குட்டிப்புலி திரைப்படம் விமர்சனம்

அய்யா ஹீரோ வந்தாச்சா ? . . . . .,
ஹீரோயணி வந்தாச்சா ? ?. . . . . . , மேக்-அப் மேன் வந்தாச்சா ? ? . . ,
ஹீரோயணியோட அம்மா வந்தாச்சா ? ? . . . . . . ., ஓகே.! ! !

சொம்பு, ஆலமரம், அருவா, பெருசுங்க, பொட்டு பொடுசுங்க, அம்மணி அம்மா, அம்மன் கோவில், திருவிழா செட்டிங், தாலி, ஜிம் பாய்ஸ், ரெடியாப்ப ??? ஓகே ஸ்டார்ட், ஆக்ஸ்ஷன், கேமரா ரோல்லிங், இப்படி ஒரு படம் எடுத்த எப்புடி இருக்கும் ? ? ? ஒரே குஷ்டமா இருக்கும். . . .

ஒரு அடாவடிப் அராத்து பேர்வழி, அவனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும்- ஏழ்மையில் உழழும் தாய், அவனுடைய வீரசாகசங்களில் தன்னை இழந்து, பாப்-கார்ன், டீ, காபிக்கு கொஞ்சம் முன்னாடி அவனையே காதலிக்க முடிவு செய்யும் அழகான பெண் போன்ற நூறு வருட சினிமாவில் சொல்லப்படாத மிகப்புதிய கதாபாத்திரங்கள்தான் - குட்டிப்புலி`யின் முக்கிய கதாபாத்திரங்கள் ( தலைலேந்து கை எடுங்க பாஸ் - வீட்டுக்கு ஆகாது ). அதெப்படி இந்த பொண்ணுங்க தேடிடிடிடிடிடிடிடிப் போய் ஒரு பொரம்போக்க காதலிக்கிறாங்களோ புரியலங்க.

               ஒரு முதல் படம் என்ற தரத்தில், முத்தையா தன்னுடைய பணியை நன்றாகவே செய்துள்ளார். வாழ்த்துக்கள். சில இடங்களில் பெண்மை, தாய்மை, தாலி, போன்ற தமிழ் சினிமாவின் புராதான சின்னங்களை போற்றிப் புகழ்ந்து, கைதட்டல் வாங்க முயற்சித்திருக்கிறார் ( அப்பா ஒரு டீ சொல்லு ). மிக நாட்களுக்குப் பிறகு சினிமாவில் சிலம்பச்சண்டை பார்க்க மகிழ்ச்சி. ஆனாலும் அந்த சண்டை காட்சியில் பயன் படுத்திய யுக்திகள் பெரும்பாலும் 'களரி'பயிட்டு ( ரௌத்ரம் பழகு படத்துல ஜீவா பயிற்சி எடுப்பாரே - அதான் ) முறையை சார்தவை என்பது ஏமாற்றமே.
              தாட்டியரு பாட்டிலும், அருவக்காரன் பாட்டிலும், வரிகளில் நீண்டநாட்களுக்குப் பிறகு வைரமுத்து தெரிக்கிறார். முதல் படமான - வாகை சூட வாவில் கலக்கிய ஜிப்ரன், இந்த படத்தில் ஜஸ்ட் பாஸ்.
கும்கி`யிலும், சுந்தரபாண்டியனி`லும், லக்ஷ்மி மேனன் அழகில் மயங்கி, இந்தப் படத்தை பார்க்க போநீர்கலேயானால், ஒபெனிங்க் காட்சியிலேயே உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீனைகளுக்கும், தாமரைகளுக்கும், லக்ஷ்மி மெனொனுக்கும்  உவமப்படும்  - அந்த அழகு இந்தப் படத்தில் . . ஜூம் ஜக்கம்மா .. காணவில்லை .... ( ஒரே பீலிங்க்ஸ் மா) ஆமா லக்ஷ்மி-குட்டியோடரிசல்ட் என்ன பாஸ் ஆச்சு???

சர்ர்ரி.... படத்தின் கதை என்ன ? ?, இயக்குனர் அங்கிள் இந்த படைப்பின் மூலமாக தாங்கள் கூற விழையும் பொருள் என்ன?. இப்டி மதுரை தமிழ் சங்கத்துல புல் மில்ஸ் சாப்ட்டு, வெள்ளை தாடி வச்சுகின்னு -  நக்கீரர் மாதிரி கேள்வி கேக்க கூடாது .. இருந்தா சொல்ல மாட்டோமா ? ?

சசிகுமார்தான் ஹீரோ என்றாலும் பல இடங்களில் நமக்கு நம்மையும் மீறி தெரிவதென்னவோ தனுஷ்தான் ( நோ, 3-D கண்ணாடி தேவைப்படாது ).

ஆமாம் - பஞ்ச்லைன் சொல்லியே ஆகணும்ல - குட்டிபுலி - இன்னும் வளரனும்...

*  +  *  +  *  +  *  +  *  +  *  +  * +  * + * + * + * + * + * + * +  * + * + * + * + * + * + *

நாடி, நரம்பு, ரத்தம், சதை முழுசும் அனுஅனுவா சினிமா ஊறிப்போன ஒரு ரசிகன் என்ற முறையில் இந்தப் பதிவின் இரண்டாவது பகுதி.

முன்பெல்லாம் கிராமங்களின் பக்கம் சினிமாவின் காமெராக்கள் திரும்பும் பொழுது யதார்த்தமான மக்கள், அங்குள்ள வாழ்கை, மேலோட்டமாக அவர்களின் பிரச்சனைகளை, இந்த ஒளியும் ஒலியும் தேடியிருகின்றன, பதிவு செய்திருக்கின்றன. மிக சில படங்களே இந்த கட்டமைப்பை கடந்து மனிதம் தேடியிருக்கின்றன, தனது கடமையை நிறைவேற்றி இருக்கின்றன. வாகை சூட வா, வேதம் புதிது, அழகர்சாமியின் குதிரை, பரதேசி, மிருகம் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். ஆனால் கடைசிப் பத்தாண்டுகளின் சாபமா என்பது புரியவில்லை, இந்த கடைசி பத்தாண்டு சினிமாவின் கேமரா பலமுறை கிராமங்களின் பக்கம் திரும்பும் போது பல முயற்சிகள் லும்பர்களை வானுயரப் புகழும் போக்கை யதார்த்த படுத்தி கொண்டுவிட்டது. இது வருத்தம் என்பது தவிர இது எனக்கே சொந்தமான பயமாக கூடயிருக்கலாம்.
அண்மைய மராட்டிய திரைப்படங்கள் மற்றும் மலையாலம் மொழி படங்கள் இதில் நமக்கு முன்னோடி, சில ஹிந்தி திரைப்படங்களும் உண்டு.
காப்ரிச்ச பாஉஷ்  - மராட்டி - Gabricha Paus - விவசாயிகளின் நீர் பிரச்சனை, கடன் மற்றும் மின்சாரபற்றாகுறையைப் பற்றி ஹாசியத்துடன் பேசிய படம். பீப்லி லைவ் - ஹிந்தி Peepli Live, மற்று க பிஜ்லி க மன்டோலா - ஹிந்தி - Matru ka Bijili ka Mandola, அதாமிண்ட மகன் அபூ - மலையாலம், அச்சன்உரங்காத்த வீடு - மலையாலம் எனக்கு பிடித்த சிலவை.
கருத்து கசாயம் ஒன்னும் இல்ல. . . நான் சொல்லிதான் புரியணும்னா அதுவும் கஷ்டம். . . .
காமேரக்களுக்கு ஒரு வேண்டுகோள், வெட்டருவா, வேல்கம்பு, வீரம், தாய்மை, தாலி, பஞ்சாயத்து, பனைமரம், காதல் இவற்றை தாண்டி தமிழக மற்றும் இந்திய கிராமங்களில் பேசப்படாத சோகமும், நெகிழ்ச்சியும், மனிதமும், மனிதனும் மண்டி கிடக்கிறது. அவை மாண்டு போவதற்கு முன் தீர்வு தேடவில்லை என்றாலும் பரவா இல்லை, பதிவாவது செய்து கொள்வோம்.


ஆங்கிலத்தில் படிக்க - http://hemloc.blogspot.in/2013/06/kuttip-puli-movie-review.html

1 comment:

சமுத்ரா said...

படம் ஆரம்பித்த நொடி முதல் பட நெடிகளை கடந்து இறுதி நொடி வரை குட்டிப்புலி குப்பை புலியென்றே தோன்றியது. இறுதி நொடியில் போடப்பட்ட சில வரிகள் (கிராம தெய்வங்கள் குறித்த தகவல்) படத்தின் மீதான மதிப்பை கூட்டி விட்டது. இன்று பெருநகரங்களில் பிறந்து வளர்ந்து படித்து நகரங்களிலேயே வசிக்கும் இளம் தலைமுறைக்கு கிராம தெய்வங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இதுபோன்ற கிராம செய்திகளை தெரியப்படுத்தியதற்காகவே குட்டிப்புலியை வரவேற்கலாம். samuthranews.blogspot.com

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )