Thursday, December 24, 2009

3 IDIOTS - திரை விமர்சனம்

* * * * * *****கிறிஸ்துமஸ் நல்வாழ்துக்கள்**** * * *********

இதே போல் ஒரு குளிர்காலத்தில் தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆமிர்கானின் " தாரே சமீன் பர்( 2007 ) " வெளியாகி அவருக்கு ஏக பாராட்டுகளையும் " கோடிகளையும் அள்ளித்தந்தது. இந்த முறை அவர் களத்தில் இறங்கியிருப்பது வெற்றி ரெட்டயர்கள் விது வினோத் சோப்ரா மற்றும் ராஜ்குமார் ஹிரானியுடனான கூட்டணியில் 3 IDIOTS . அக்கா மாலா விற்ற ஆமிர்க்ஹான் இப்படி படங்களை நடித்து தன்னுடைய பாவங்களை தீர்த்துக் கொள்கிறார்( கப்சி ஊத்தியா ? ? ? ). சினிமாவில் இது ஒரு குறிஞ்சிப் பதிவு. சிந்திக்கவும் வைத்திருக்கிறது ( இது எப்பேலேந்து ). .

பார்ஹான் ( மாதவன் ) , ராஜு ( ஷார்மன் ) தனுது தொலைந்த நண்பன் ராஞ்சோ ( ஆமிர் கான் ) பற்றிய துப்பு கிடைக்க அவனை தேடச் செல்கின்றனர். ( 5ஸ்டார் படம் மாதிரியோ ன்னு நெனச்சு ஏமாந்துட்டேன் ). செல்லும் வழியில் டார்ட்டாய்ஸ் கொளுத்தி பின்னுக்க போகுது படம். ஒரு பொருளியில் கல்லூரி அதில் இந்த மூவரும் படிக்க அங்கு இயக்குனர் பதவியில் வைரஸ் (எ ) வீரு சஹாஸ்ரபுதே ( பொம்மன் இராணி ) இருக்கிறார். மிகக் கண்டிப்பான இவருக்கு நம்ம பயபுள்ளைகள கண்டா ஆகவே மாட்டேங்குது, குறிப்பாக ரன்சோவுக்கும் இவருக்கும்.

ராஞ்சோ விரல்களை சிறகாக்கி வேறு ஏதோ உலகத்தில் பயணிக்கிறான். இந்த கல்வித் திட்ட முறையை மாத்தணும், தேர்வு முறைகளை குப்பைல போடுங்க, என்றெல்லாம் பேசி வைரஸின் கோவத்தை இண்ணுமதிகறிக்கிறான். இருந்தும் தேர்வுகளில் முதலிடம் பிடித்து தான் தப்பித்தாலும் , கடைசியாய் வரும் நண்பர்களை காபதர்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாராகிறான். இதற்கிடையில் பீயா ( கரீனா ), வீருவின் மகள் ராஞ்சோவுடன் காதல்வயப்படுகிறார். வேறு ஒருவரோடு நிச்சயம் ஆன பின்பும், ஒரு கனவுப் பாட்டு ஆடுகிறார். ( எவ்ளோ புதும ??? ). சூடா டி, காப்பி, சமோசாசாசாசாசாசாசாசா.
ஒரு நாள் சல்பேட்ட சிந்தனையில் பார்ஹான் - " நீ விரும்புவது பொறியியல் இல்லேன்றப்ப நீ எப்படி இதுல நல்ல மதிப்பெண் எடுப்ப?". ராஜூ இவ்ளோ பயந்து சாகுறியே இதுனாலதான் உன்னாலயும் முடியலேன்னு சொல்ல. அவுங்க ரெண்டுபேரும் ராஞ்சோ நீ பீயாட்ட உன்னோட காதல சொன்னா நாங்க எங்கள மாதிக்கிறோம் என்கின்றனர். ராஞ்சோ வீருவின் வீட்டில் பீயாவிடம் காதலை சொல்லும்போது ராஜுவும், பார்ஹானும் போதையில் வரும் கோவத்தில் வைரஸின் வீட்டுவாசல்ல உச்சா போய்டுறாங்க. சனியன் மறுநாள் காலேல சமுக்காளம் விரிக்கிறது. வீரு ராஜுவிடம் ஒன்னு குத்தத்த ஒத்துகிட்டு வீட்டுக்கு கெளம்பு , இல்ல ரான்சொவ போட்டு குடுன்னு சொல்ல. ஒப்ராஹ் இசையின் பின்னியில் தற்கொலை முயற்சிக்கிறார். மருத்துவமனையில் இரண்டு மாதங்களில் தன்னுடைய படிப்பு குறித்த பயத்தை வெல்கிறார் ராஜு. பார்ஹானும் தான் விரும்புவது இதுவல்ல, தான் ஒரு காட்டுவிலங்குகளின்  ஒளிப்பதிவாளர் ஆகணும்னு, தன்னுடைய தந்தையை சம்மதிக்க வைக்கிறார். இந்த மாற்றங்களுக்கு காரணமான ராஞ்சோ கல்லூரின் இறுதி நாளோடு குறிப்புகள் இல்லாமல் காணமல் போகிறார்.
ஒர்ருவா கொசுவத்தி சுருள் எம்புட்டு நேரம் எறியும். பீயவின் நடக்கவிருக்கும் திருமணத்தை ஆட்டய களச்சு பார்ஹானும், ராஜுவும் தன்னுடைய பயணத்தில் ரன்சொவை லடாக்கில் கண்டுபிடிகின்றனர். ஆபரேடர் லையிட்ட போடுறார். முழு பணமும் வசூல் - நிறைவான படம்.

ராஜு ஹிரானி ஒரு பொருள் சார்பதிவின் பொறுப்புடன் செயல் பட்டு இருக்கிறார். அதே போல் இதை ஒரு முழு பொழுதுபோக்கு அம்சப் படமவகவும் நகர்த்தி, நம்மை கவர்கிறார். இரட்டுற மொழிதல் இல்லாமல் நகைசுவை வசனங்கள் பாராட்டுதலைப் பெறுகின்றன. சாந்தனு மொயிற்றாவின் இசையும் சி.கே. முரளீதரனின் ஒளிப்பதிவும் எழில் சேர்கின்றன. . கரீனா ஊறுகா அளவுதான் ஆனாலும் ஆவக்காய். ஷார்மன், மாதவன் தன்னுடைய கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுதுகின்றனர். இது தவிர படத்தில் வரும் எல்ல ஏனைய கதாபாத்திரங்களும் அவரவர் கதாபாத்திரத்தை நிறைவாய் செய்கின்றனர், குறிப்பாய் ஓமி ஒரு படிப்ஸ்சாய் வளம் வந்திருக்கிறார்.
பொம்மன் இராணி முன்னாபாயின் ஆஸ்தானவின் அதே பாத்திரப் படைப்பு என்றாலும், இங்கு எங்கிலும் அதன் நிழல் விழாமல் நடிதுருகிறார். எங்கோ பார்த்த அந்த கண்டிப்பான, துளியும் கருணை இல்லாத ஒரு கல்லூரி ஆசிரியரை துளி சினிமா ஜவ்வதுடன் இயல்பைத் தர முயற்சித்திருக்கிறார்.


பாலிவுட்இன் Mr.Perfect படம் முழுவதும் ஆட்சி செய்கிறார். ஆனாலும் கழுத்துக்கு கீழ் மட்டும்தான் ஒரு கல்லூரி மாணவன் தென்படுகிறான், நம்ம முரளி, சின்னிஜெயந்த் மாதிரி ரொம்ப நாளாவே காலேஜ்லயே இருக்கார். பிட் அடிச்சாவது இனி பாஸ் ஆகா வேண்டும்.
மொத்தத்தில் ஒரு நல்ல கிறிஸ்துமஸ் பரிசு மட்டும் அல்ல நல்ல புதுவருட பரிசாகவும் அமையும் என்பது திண்ணம்.

DVDகேக்கற சனத்துக்கு ஒரு நல்ல சேதி, இந்த படம்தான் இந்திய ... முதல் முறையாக !!!! YOUTUBE - ல வெளியாகுது ஆனா இன்னும் மூணு மாசத்துல.

அவதார் பா போல மாற்றுப் பார்வை ( கோண கண்ணால் ) பார்கலயான்னு கேட்ட ??? இருக்கு அடுத்த பதிவில்....

Englishla படிக்க

2 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க...,
மாற்று பார்வை நீங்களே பாக்கலாம்ல...

Sundaralakshmi said...

unnudaya vimarsanam super. Aana amir khan innum college student role pannuvar pola. enna panrathu, parka than naama irukkomae.

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )