Saturday, December 12, 2009

கவிஞன் என்றோர் கவிதை

அகன்ற கூர்மையில் எழுத்துக் குறி சொல்பவன்.
சமூக மாற்றத்தின் தூண்டுகோல்
சமகால மருமழர்சியின் அளவுகோல்

காலத்தோடு காமம் கொண்டு
கருத்துகளோடு உறவு கொண்டு
வரிகளை கருக் கொள்பவன். . . .

ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேல்
கருக்கொள்ள முடிந்த ஒரே ஜீவராசி

பாராட்டுகள் ஊற்றி வளரும் கற்பனை வ்ருட்சம்
விமர்சன ஆழகாலம் விழுங்கும் நீலகண்டர்கள்
தன்னையே கடைந்து அமுதம் தேடும் வினோதன்

மனிதம் உடலில் வரிப்பால் சுரக்கும் மார்பு
மக்களின் கால்தடம் தேடுவதற்காய்
தலைகீழாய் நடக்கும் அதிசயப் பிரசங்கி.
கண்களால் கடல் குடிக்கும் அண்ணம்.
அரசிடம் வரிச் சலுகைக்கு ஈனப்படாத குடிமகன்

===========================================
ஒரு கவிஞனுக்கு மரண தண்டனை விதிப்பதென்றால்
அவன் விரல்களை முடமாக்கி, வாயெய்க் கட்டி
வெற்றுக்காகிதம் ஒன்றை அவனிடம் வைத்து விடுங்கள்.
உருக்கொள்ள முடியாத கருத்துக்கள் அவனை கொன்றுவிடும்.
தவிர மகாகவி என்றால் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்
கோவில் யானைகள் பார்த்துக் கொள்ளும்
கோவில் யானைகள், பார்த்துக் கொல்லும்.

5 comments:

Anonymous said...

arumaiyana kavidhai

Anonymous said...

very nice description. and i like your Tamil writing style Vikram :)

Regards
Muthuraja

Sundaralakshmi said...

ovvaru varthaiyum arumai.

tamil padikka arvama irukku.

kalisudhan sakthibala said...

a great tribute to barathi. it is very sad tat only jaya tv remembered barathi on his birthday on 11th dec. what kind of tamils are we.? bullshit. sorryyyyyy for using such lang.

Sakthi said...

ஒரு கவிஞனுக்கு மரண தண்டனை விதிப்பதென்றால்//

hm, unmai..

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )