Tuesday, December 29, 2009

மிகப் பெரிய பதிவராகி அதிக ஹிட்ட்சுகளை பெறுவது எப்பூடி

என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு எப்பூடிடா சீக்கிரமா பெரிய பதிவர் லிஸ்ட்ல வர்றது ஹிட்ச அதிகரிக்கிரதுன்னோ ஒரு சந்தேகம் வரும். அதுக்கு ரொம்ப ஈசிஆனா வழி, நம்மள விட அதிகமா ஹிட்சும் அதிக போல்லோவேர்சும் உள்ள வலைபூக்களை வெல்ல வழிமுறைகள்



1. ஒரு இடமும் தேதியும் குறிச்சி ஒசாமாவுக்கு சொல்லி அனுப்பிட்டு , இந்த பெரிய பதிவர்கள் எல்லாரையும் அங்க ஒன்னுகூட்டி ஒரு கூட்டம் போடலாம். இலங்கைல நடந்த யார்ட சொல்லனும்னு உங்களுக்கு சொல்லவா வேணும்
 
2. இந்த வலைபூகளை கடத்த சீனால / கொரியால ஒரு கூட்டமே இருக்காம். இவுங்களோட வலைபூ லிஸ்ட் எல்லாம் எடுத்து மொத்தமா ஒரு மெயில் அனுப்பிடலாம்.அவன் கமெண்ட்ஸ் போடுற மாதிரி அவோனோட மொழில ஒரு வைரஸ் போடுவன் இவுங்க அச்செப்ட் பண்றாங்களோ இல்லியோ அம்புட்டு பதிவையும் அது சாப்ட்ட்ரும். இவுங்க கெணத்த  காணும்னு தேட வேண்டியதுதான்

3. இவுங்க வீட்டு விலாசத்த தேடி சன்pictureஇன் காவிய படைப்புகளை மட்டமான பிரிண்ட் திருட்டு VCD வாங்கி தெனம் ஒன்னு அனுப்பலாம். நீங்க நல்ல பதிவுகள் எழுதுறத நிருத்தர வரைக்கும் இந்த வன்முறை தொடரும்னு துண்டு சீடோட.

4. இன்னும் சூப்பரா பசங்க பட ஸ்டைல்ல இவுங்க ப்ளாக் பேர்ல காசு வெட்டி போடலாம்


இது கடைசி ஆனா ரொம்ப கஷ்டம்ங்க விட்ருங்க வேணாம்

இவுங்களோட ப்ளோக்ல இருக்குற விடாமுயற்சி, உழைப்பு, நவீனத்துவம், சிந்தனை, தரம் இவற்றை நமதாக்கி 2010இல் இவர்களில் ஒருவராக முயற்சி செய்யலாம்.

13 comments:

Unknown said...

நீங்களும் பிரபல பதிவராக வாழ்த்துக்கள்..

sathishsangkavi.blogspot.com said...

நல்ல முயற்சி.....

வாழ்த்துக்கள்....

தர்ஷன் said...

சீரியஸா ஓடி வந்துப் பார்த்தா இப்படி கவுத்துடீங்களே

கடைக்குட்டி said...

பிரபல பதிவர் பத்தி.. நர்சிம் சொன்னதுதான் எனக்கு பிடித்தது..

நானும் வந்த புதுசுல.. ஹைய்யோ சும்மா விகடன் குமுதம் நம்ம பின்னாடி அலையனும்னு ஆசப்பட்டேன்.. ஆனா உழைக்கல..

நர்சிமின் பதிவில் சொன்னது என்னன்னா.. “புதியவர்கள் தொடர்ந்து எழுதுங்க.. என்னவாவது எழுதுங்க .. கண்டிப்பா கவனிக்கப்படுவீங்க..”

“consistancy" தான் தாரக மந்திரம்..

பிரபலமாகுறோமோ இல்லையோ.. நமக்கு ஒரு மனதிருப்தி வரும்.. அட நாமளும் எழுதுறோமேன்னு.. :-)

2010 இனிதே அமையும் நமக்கு..

கடைக்குட்டி said...

உங்கள தொடர்றேங்க.. பாத்து எழுதுங்க.. இனிமே போர் அடிச்சா அடிக்கடி இப்படி வந்து நச்சு பண்ணுவேன்.. :-)

ஸ்ரீநி said...

பேநாமூடி/ சங்கவி
நன்றி தோழர்களே

தர்ஷன் / கடைக்குட்டி
இது தவிர வேறு வழியே இல்ல

SP.VR.SUBBIAH said...

பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதுங்கள். எழுத்து வசப்படும். வாசிப்பவர்களும் வசப்படுவார்கள்!

ஜெட்லி... said...

//இவுங்க வீட்டு விலாசத்த தேடி சன்pictureஇன் காவிய படைப்புகளை மட்டமான பிரிண்ட் திருட்டு VCD வாங்கி தெனம் ஒன்னு அனுப்பலாம். நீங்க நல்ல பதிவுகள் எழுதுறத நிருத்தர வரைக்கும் இந்த வன்முறை தொடரும்னு துண்டு சீடோட.//


ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி!!

Prathap Kumar S. said...

இந்த ஐடியா பி.ப ஆகறதுக்கா... இல்ல பீப்பா ஆகறதுக்கா...

தொடர்ந்து எழுதுங்க...எழுதிகிட்டே இருங்க நீங்களும் இங்க இருக்கீங்கனு தெரியனும் அவ்வளவுதான்.
கண்டிப்பா மொக்கை போடதெரியணும்.. இப்ப இருக்குற எல்லா பி.ப.க்களும் மொக்கையா ஆரம்பிச்ச இப்பவும் மொக்கைத்தான் போடுறாயங்க...அதனால் தைரியமா எழுதுங்க... விரைவில் பி.ப. ஆவதற்கு வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

எனக்கும் சொல்லிகுடுங்கப்பா!

geethappriyan said...

சூப்பர் ஸ்ரீநீ எல்லாமே

கோவி.கண்ணன் said...

இது போல புத்தியெல்லாம் பாப்பானுக்கு தான் வரும், நீயும் சந்தேகமே இல்லாமல் பாப்பான் தான்,தூ

வால்பையன் said...

அது ஒரிஜினல் கோவி கண்ணன் இல்லை!

இதையெல்லாம் கண்ணுகாம இருக்க தல!

பழுத்த மரம் தான் கல்லடி படும்!

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )